உலகின்
மிக மூத்த நாகரீகம் என்பது வெறுமனே பாடப்புத்தகத்தில்
எழுதி வாசிப்பதற்கோ, #ஓட்டுப்பொறுக்க
வீரவசனம் பேசுவதற்கோ
பயன்படும் வாசகம் அல்ல.
மனிதன்
நாடோடிச் சமூகமமாக
வாழ்ந்ததில் இருந்து மாறி, முதன்முதலாக ஆற்றங்கரைகளிலும், வளமான பிரதேசங்களிலும் குடியேற்றங்களை ஏற்படுத்தி
வேட்டையாடுதலை
விட்டுவிட்டு #வேளாண்மை செய்ய துவங்கியதுதான்...
நாகரிக, பண்பாட்டு பரிணாம வளர்ச்சிக்கு வரலாற்றில் அடித்தளமிட்ட மானுட புலிப்பாய்ச்சல் நிகழ்வாகும்.
ஒரு சமூகம்
பழங்குடிச்சமூகம்,
ஆதிச்சமூகம் எனும்போதே
#அது அங்கே பல்லாயிரம் ஆண்டுகளாக ஓரிடத்தில் நிலைத்து வேளாண்மை செய்து வாழ்கிறதென்றுதான் பொருள்.
வரலாற்றின்
மிக அண்மைக்காலம் வரை நாடோடிச்சமூகங்களாக வாழ்ந்தவர்கள் #ஐரோப்பியர்கள். மேலாக, ஐரோப்பியர்களின் இயற்கை சூழலும் வேளாண்மைக்கு உகந்தது இல்லை.
வேளாண் விஞ்ஞானிகள்
மராட்டியர் சுபாஷ் பாலேக்கர், தமிழ்ப்பெரியார் நம்மாழ்வார்,
அறிவர் பாமயன் உள்ளிட்ட
#பலரும் 'organic farming'ன் தந்தை என வெள்ளைக்காரன்
எழுதி வைத்து இருக்கும்
#ஆல்பர்ட்_ஹோவார்டு
இங்கே இந்திய ஒன்றியத்தில் வேலை செய்தபோதுதான் #பழங்குடிகளிடம் இருந்து
இயற்கை வேளாண்மை குறித்த அவர்களின் பாரம்பரிய மரபு அறிவை கற்றுக்கொண்டார் #என விளக்கி இருக்கிறார்கள்.
The Agricultural Testament
எழுதிய அந்த ஹோவார்டும்
#தான் இந்திய பழங்குடிகளிடம் இருந்து கற்றதாக பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.
ஐரோப்பியர்கள்
மிக அண்மைக்காலத்தில் வேளாண்மை செய்யத்துவங்கி, அதுவும் உலகப்போர்களுக்கு பின்னர் வெடிமருந்தை உரம் என்று ஏற்றுமதி செய்து,
காலனிய
காலத்திற்கு பிந்தைய பலவீனமான அரசுகளிடம் அதை வலிந்து திணித்து, அதை 'பசுமை புரட்சி' என #ஏமாற்றி,
உலகின் 'உணவுக்கொடையாக' இருந்த ஆசிய ஆப்பிரிக்க வெப்பமண்டல நாடுகளை பாலைவனமாக்கி
இந்த நாடுகளை
#சுடுகாடுகள் ஆக்கியதோடு மட்டுமன்றி, அதன் மூலம்
'குளோபல் வார்மிங்' எனும்
மானுட பேரழிவிற்கு
அழைத்துச் சென்று இருக்கிறது மேற்குலகம்.
கூடுதலாக,
அறிஞர் #பாமயன்
தனது பண்டைய தமிழர்களின் வேளாண் அறிவு குறித்தான '#திணையியல்_வாழ்வு' எனும் ஆய்வில் சங்க காலங்களில்
மட்கு/humus (தாதெரு மன்றங்கள்), உழவில்லா வேளாண்மை (தொய்யாத்துடவை) குறித்தான
மரபு செயல்முறை குறிப்புகள் #சங்கத்தில் இருப்பதை விளக்கி இருக்கிறார்.
இவ்வளவு
விளக்கமெல்லாம் தேவை இல்லை, மேற்குலகின், காலனியவாதிகளின், வெள்ளைக்காரனின் பண வெறியும், accumulation of wealth எனும் சொத்துக்குவிக்கும் பேயாட்ட பண்பும்
இங்கே
திணிக்கப்படுவதற்கு முன்பு இங்கேயிருந்த மரபும், பழக்கமும் இயற்கை வழி, இயற்கை சூழலுக்கு #உகந்த இணக்கமான வழியே,
அது
வேதியுரங்களை,
பூச்சிக்கொல்லி விஷமருந்துகளை பயன்படுத்திய வேளாண்மையல்ல என்பது அடிப்படை அறிவு எனும் 'common sense' ஆகும்.
இதைக்கூட ஏன் #திராவிடர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?
உலகிற்கு
வேளாண் நாகரீகத்தையும், அறிவையும் கடத்திய,
கொடையாக அளித்த
தமிழர் நாட்டு அரசின்
'#இயற்கை_வேளாண்மை'
கொள்கை வரைவில்
ஏன் காலனியவாத வெள்ளையர்களை கொண்டாடி,
தமிழினத்தின்
வேளாண் தெய்வம் #நம்மாழ்வாரை தவிர்த்து இருட்டடிப்பு செய்கிறீர்கள்? ஏன் #இந்த திராவிட வன்மம்?
ஆதிப்பழங்குடிகளின்
வரலாற்றை அவர்களே தூக்கிப்பிடிக்காமல்,
அவர்களை இருட்டடிப்பு செய்வது காலனிய அடிமைத்தனத்தை ஆதரிப்பதும், அடிமை உளவியலை விதைப்பதுமாகாதா?
இன்னும்
எவ்வளவு காலத்திற்கு
#தங்களுக்கு வாழ்வளித்த வெள்ளைய காலனியவாதிகளுக்கு விசுவாசமாக இருக்கப்போகிறது திராவிடம்?
எப்போது
திராவிடத்திற்கு
அரியணை வழங்கிய #தமிழுக்கு விசுவாசம் காட்டப்போகிறது?
#Krishna