வியாழன், 18 ஜனவரி, 2024

ஜிலேபி மீன் நாட்டு ரக மீன் இல்லை.

காமராஜர் எனும் கைநாட்டு மூலமாக நம்  தமிழகத்தில் மேசானிய இலுமினாட்டி அணைக்கட்டுகள் பல கட்டி ஐிலேபி மீன்களை இறக்குமதி செய்த 
சோகக் கதை 🐟🐟🐟...அது மட்டுமா❓

நம் சேர சோழ பாண்டியரான மூவேந்தர்கள் எந்த அணைகட்டுகளையும் கட்டாமல் ஆயிரக்கணக்கான குளங்களை வெட்டி இயற்கையான முறையில் ஆற்றில் வரும் தண்ணீரில் குளங்களை நிரம்பச் செய்து மக்களின் வயிற்றில் பாலை வார்த்து விவசாயத்தை பெருக வைத்தனர். 

நம் கையை வைத்து மண்ணை தோண்டினாலே நம் கண் எதிரில் நீர் சுரக்கும் அழகிய காலம் அது.

அன்றைய கொடூர சாக்கிய யூத பிரிட்டிஷ் அரசாங்கம் இன்றைய சாலைகளில் உள்ள டோல்கேட் வசூல் போல நம் நீர்நிலைகளை விற்பனை செய்வதற்காக அணைகளை கட்டத் தொடங்கினார்கள். 

உலகில் நெல் எனும் தானியத்தை படைத்ததே நம் சிவபெருமான் தான்.

அதற்காக நெல்லுக்கு வேலியாக  திரு+நெல்+வேலி எனும் திருநெல்வேலி ஊரை அமைத்து நெல்லையப்பராக குடி கொண்டார். விளையும் நெல்லை காக்கவும், விவசாயத்தை பெருக்கவும் நம் பாண்டிய மன்னனை மக்களுக்கு காவலாக வைத்து போற்றவும் வைத்தவர் நம் சிவபெருமான்தான்.

இந்த நெல்லையப்பரின் திருநெல்வேலியை வைத்துதான் இலங்கையில் திருநெல்வேலி உருவாயிற்று.

இதன் செழிப்பு மிக்க பெருமையை கண்ட சோழ மன்னர்கள் சோழநாட்டில் திருநெல்வேலி பகுதியில் உள்ள குத்தாலம், பாபநாசம்,மணிமுத்தாறு பெயர்களை சோழ நாட்டில் சூட்டினர். 

சிவபெருமான் உருவாக்கிய  திருநெல்வேலியில் உள்ள நெல் விவசாயத்தை சோழ பேரரசர்களும் அந்த மண்ணில் விதைத்தனர்.

நம் சிவபெருமானின் நெல் என்பது சர்வ சாதாரணமானதே அல்ல.

நெல்லை விதைத்தால் அந்த பகுதிக்கு கீழே பஞ்சபூத இறை ஆற்றலாக மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற சர்வ  சக்திகளும் நெல் வயலுக்கு கீழே உருவாகத் தொடங்கும் என்றால் நம் உடலுக்கு ஒவ்வொரு வகை அரிசியும் எப்பேர்பட்ட சக்திகளை தரும் என்பதை இனியாவது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மிளகுச் சம்பா
நவரா
கருங்குறுவை
சொர்ண மசூரி
அறுபதாம் குறுவை
மைசூர் மல்லி
காலா நமக்
சின்னார்
கிச்சிலிச் சம்பா
காட்டுயானம்
பொம்மி
ஒட்டடம்
பால் குடவாழை
சொர்ணவாரி
தூயமல்லி
ஆத்தூர் கிச்சிலிச்சம்பா
தங்கச்சம்பா
ராஜமுடி
குழியடிச்சான்
நீலஞ் சம்பா
குண்டுக்கார்
கொத்தமல்லிச் சம்பா
கவுனி
மாப்பிள்ளை சம்பா
கருப்பு கவுனி
குடவாழை
துளசிவாச சீரகச்சம்பா
கண்டசாலி
கைவரச்சம்பா
வாடன் சம்பா
தேங்காய்பூச் சம்பா
வாலான்
சிங்கினிகார்
பூங்கார்
ராஜமன்னார்
பவானி
சம்பா மோசனம்
செம்பாளை
கொட்டாரச் சம்பா
ராஜயோகம்
யானைக் கொம்பன்
 வெள்ளைக் குடைவாழை
 கம்பன் சம்பா
 ஆற்காடு கிச்சிலிச் சம்பா

இதனால்தான் நம் சிவபெருமான் நமக்குத் தந்த 10000 வகை நெல் விவசாயத்தை மெது மெதுவாக தடை செய்ய தான் ஐ.ஆர். ரக விதை நெல்களை இலுமினாட்டிகள் நமக்கு அறிமுகம் செய்து பூச்சிக்கொல்லி, கெமிக்கல் உரம் ஆகியவற்றை விதைத்து உழவு முறையை ஒழிக்கத் தொடங்கினர்.

1942 ஆம் ஆண்டு திருநெல்வேலி பாபநாசம் அணைத் திட்டத்தை கட்டி பல அணைகளை கட்ட அடித்தளம் இட்டவர்கள் பிரிட்டிஷ் கொள்ளைக்கார  கூலிப்படைகள்.

நாடு சுதந்திரம் ஆனது என்கிற பொய் தோற்றத்திற்கு பிறகு அரசியல் அடிமைளை வைத்து நம் மண்ணை அழிக்க வேண்டிய நிலை பிரிட்டிஷ் கிரிக்கெட் கூலிப்படைகளுக்கு ஏற்பட்டது. 

அதனால் தான் கர்ம வீர பட்டம் விவசாய அறிவே இல்லாத காமராஜருக்கு படிக்காத மேதை பட்டம் சூட்டப்பட்டு காமராஜரை கிரிக்கெட் விளையாட வைத்தனர்.

திண்ணைக் கல்வி மூலமாக பல மொழி ஆற்றல் கற்றறிந்த அன்றைய நம் முன்னோர்களை காமராஜர் பள்ளி மூலமாக குல குருக்களை அழித்தனர் இலுமினாட்டிகள்.

இயற்கையான குளங்கள் மூலமாக விவசாயம் செழித்து உள்ள பகுதிகளில் ஹெலிக்காப்டர் மூலமாக காமராஜர் என்கிற முதல் அமைச்சர் சக்தியை வைத்து சீமைக் கருவேல விதையை நம் மண்ணில் விதைத்தனர் இலுமினாட்டிகள்.

அதன் பிறகு செயற்கை அணைகள் படிக்காத மேதை மூலமாக உருவாக்கப்பட்டது.
நம் நாட்டு மீன்கள் அனைத்தும் அணைக்கட்டில் அடைபட்டது.

மண்ணில் சீமை விதைளை விதைக்க அனுமதித்த அறிவற்ற நேருவின் அறிவற்ற நண்பன் காமராஜர் அணைக்கட்டுகளில் நம் நாட்டு மீனை அழிக்க வெளிநாட்டில் இருந்து ஜிலேபி என்கிற கொடூர மீனை கொண்டு விட்டார்.

மழை காலங்களில் அணைக்கட்டு நிரம்ப நிரம்ப அனைத்து குளங்களுக்கும் அணைக்கட்டு நீர் போய் கொடூர ஜிலேபி அங்கும் கூடாரமிட்டு நம் நாட்டு வகை மீன்கள் அனைத்தும் கொல்லப்பட்டன.

தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டு உள்ள 160 க்கும் அதிகமான நம் நாட்டு வகை மீன் வகைகளில் அந்நிய ஜிலேபி மீன்களின் வரவுக்கு பிறகு அவைகளுக்கு இடம் இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா❓

உண்மையில் ஜிலேபி மீனின் தாயகம் ஆப்ரிக்கா. இதன் உண்மையான பெயர் திலேபியா(Tilapia).அது மருவிதான் ஜிலேபி என்று ஆனது. 

நமது பகுதியில் சப்பாறு என்று இதற்கு பெயர் உண்டு. 

1952 இல் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, 1960 களில் தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அந்தந்தப் பஞ்சாயத்து யூனியன் டெவலப்மெண்ட் ஆபிசர்களால் (பி.டி.ஓ.) கிராமங்கள்தோறும் மீன் குஞ்சுகள் திருமணம் செய்யாத கர்ம வீர காமராஜ சுவாமிகளால் வழங்கப்பட்டன. 

இப்போது நமது நீர்நிலைகளின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு விட்ட இந்த ஜிலேபி மீன்கள் நமது பாரம்பரிய மீன்களுக்கு எமன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா❓

இன்றைக்கு இருக்கின்ற நமது இளம் தலைமுறையினருக்கு பாரம்பரியமான மீன்களின் பெயர்கள் கூட தெரியாது.  

நமது மீன் வகைகள் என்று எடுத்துக் கொண்டால் வட்டக் கெண்டை, பால் கெண்டை, பாம்புக் கெண்டை, கூனக் கெண்டை, வெளிச்சிக் கெண்டை, குள்ளாங் கெண்டை என  பல வகை மீன்கள் உண்டு.

இவைதவிர அயிரை, கெழுத்தி, ஆரா, உளுவை, விலாங்கு, விரால், குரவை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவைகளில் பெரும்பகுதி இப்போது அழிந்து போய் விட்டது அல்லது அழிவின் விளிம்பில் இருக்கிறது.

நமது பாரம்பரிய மீன்களின் முட்டைகளை தேடித்தேடி வேட்டையாடும் ஜிலேபி மீன்கள், நமது மீன்களுக்கான உணவுகளைக் கூட விட்டு வைப்பதில்லை. 

பொதுவாக நமது மீன்களில் பெரும்பகுதியான கெண்டை மீன்கள் பூச்சி புழுக்களை உண்டு வாழ்வன. விரால், ஆரால்  போன்றவை பிற உயிரினங்களின் அழுகிய சதைகளை சாப்பிடக்கூடியவை.  அயிரை போன்ற மீன்கள் பாசி போன்றவற்றையும் உண்டு வளரக் கூடியவை. 

ஆனால் இந்த ஜிலேபிக்கு இதுதான் உணவென்ற எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. 

சாக்கடையிலும் வாழும் ரகம் இது.
சிறிய ரக மீன்களை  அசாத்தியமாக வேட்டையாடும். அசுர வேகத்தில் இனப்பெருக்கம் நிகழ்த்தும் இந்த ஜிலேபி மீன்கள் 80 சதவீத தனது குஞ்சுகளை பாதுகாத்து வளர்த்துவிடும் ஆற்றல் உள்ளவை. இன்னும் கொஞ்ச காலங்களில் சிறிய ரக மீன்களில் ஜிலேபி மட்டும்தான் எஞ்சி இருக்கும் .

இறக்குமதி செய்யப்பட்ட இந்த வகை ஜிலேபி மீன்கள் இப்போது மேலும் கலப்பினம் செய்யப்பட்டு இன்னும் வீரியமாகவும் ஆபத்தானகவும் நீர்நிலைகளை அலங்கரிக்கின்றன.  

நமது மாமிச வேட்கையின் காரணமாக ஆயிரமாயிரமாண்டு கால பாரம்பரிய மீன் இனங்களை அழித்து ஜிலேபி போன்ற பிராய்லர் வளர்ப்பு மீன்களை தின்று வயிறு வளர்த்து நோயால் செத்து கொண்டு கொண்டிருக்கிறோம். 

நீரின் உயிரியல் சமத்துவத்தை கொலை செய்து எதையும் தின்னலாம் என கொண்டிருக்கின்றோம். இந்த பூமியில் மனிதன் தனது சொந்த நலனுக்காக எந்த உயிரையும் வேரோடு அழித்திடும் கொடுஞ் செயலை ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

நம்மிடம் இருப்பதில் இருந்து இயற்கையான வளர்ச்சி என்ற தத்துவத்துக்கு மாறாக இறக்குமதி என்றைக்கும் அழிவையே கொண்டுவரும் என்பதற்கு கைநாட்டு காமராஜரின் ஜிலேபி மீன் நல்ல உதாரணம்.

பிரிட்டிஷ் ராணி உடன் கை கோர்த்து கிரிக்கெட் விளையாடும் நேரு மாமாவின் பட்டுப்பாப்பா காமராஜர் மட்டும் ஜிலேபி மீன் கும்பல் இல்லை.

பர்மா திராவிட கும்பல்களும் உங்களுக்கு அணைக்கட்டு ஜிலேபி ரக மாடல்களை விற்பனை செய்கிறார்கள்.

நீங்களும் கூச்சநாச்சம் இல்லாமல் தின்று தொலைகிறீர்கள்.

இதில் சேர சோழ பாண்டிய மன்னர்களை மறந்த காமராஜ் பக்தாள்ஸ் வேற❗

காமராஜ் மட்டும் அடிமை அல்லப்பா.
இன்று வரை விற்கப்படும் அணைக்கட்டு வளர்ப்பு மீன் விற்கும் திராவிடன்களும் தான்.

போங்கப்பா...உங்களுக்கு ஆயிரம் உண்மையை சொன்னாலும் நீங்க என்னைதான்ப்பா திட்டுவீங்க❗

பல நெல் ரகங்களை மீட்டு எடுத்த நெல் ஜெயராமனுக்கு கேன்சர் வர வைத்து மேலே அனுப்பியதும் இதற்காகதான்.

https://m.facebook.com/story.php?story_fbid=432689998569928&id=100054867941306&mibextid=Nif5oz

நேரு மாமா பொம்ளை பொறுக்கியாம்.
காமராஜர் திருமணம் செய்யாத பிரச்சாரக்காம்🤣

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

பயந்தோணிகளாக வாழாதீர்கள்.
பகிர்வோம்.

திங்கள், 1 ஜனவரி, 2024

குலதெய்வ படையல்

குல தெய்வ பலி என்பது அம்மனுக்கோ, ஐயனாருக்கோ நேரடியாக அல்ல...

அவர்களின் காவல் தெய்வத்திற்கு மட்டும் தான் பலி.

காவல் தெய்வத்திற்கு பலி கொடுத்தால் நேரடியாக அம்பாளுக்கும்,ஐயனாருக்கும் ஆக்டிவேட் ஆகி விடும்.

பலி கொடுத்து விட்டு கட்டாயம் பஞ்ச மகாரங்களோடு தான் பலி படையல் வைத்து வணங்க வேண்டும்.

பஞ்ச மகாரங்கள் :

1. பலி மாமிசம்

2. பலி மத்யம் அல்லது சுரா பானம் அதாவது பட்டை சாராயம்,கஞ்சா,கள் போன்றவை

3. பலி மத்ஸ்யம் அல்லது மீன் பலி

4. பலி முத்ரா எனும்  பச்சரிசி வகைகளில் செய்யப்படும் பொங்கல்,அவல்,பச்சை மாவு போற்றவை

5. மைதுணம் என்ற கணவன் மனைவி இணைந்து தங்கள் பங்காளிகள் மற்றும் குலத்தினரோடு சேர்ந்து மட்டுமே மேற்கண்ட 4 பூஜைகளையும் செய்வது.

இல்லையேல் அது பூரணமான பலி  படையல் அல்ல.

குல தெய்வத்திற்கு பலி கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டாலே குல தெய்வம் உங்கள் வருகைக்காக எழுந்து நிற்கும்.

குல தெய்வத்திற்கு நீங்கள் பலி கொடுத்தாகி  விட்டது என்ற உடன் அறிவற்ற ஆடு சிவபெருமானிடம் மோட்சம் அடைந்து பிறவிப்பயன் பெறும். 

குல தெய்வ கோயிலில் நீங்கள் பலி கொடுத்த உடன் அங்கு வாழ்ந்த சர்வ பீடைகளும் மறையத் தொடங்கும்.

குல தெய்வ கோயிலில் நீங்கள் பலி கொடுத்த உடன் அங்கு வாழ்ந்து வரும் உங்கள் பங்காளிகளுக்கும் உங்களுக்கும் இருந்த சர்வ பிரச்சனைகளும் மறையத் தொடங்கும்.

குல தெய்வ கோயிலில் நீங்கள் பலி கொடுத்த உடன் அங்கு வாழ்ந்து வரும் உங்கள் ஊர் செழிக்கத் தொடங்கும். 

குல தெய்வ கோயிலில் நீங்கள் பலி கொடுத்த உடன் அங்கு நீங்கள் அடிக்கடி செல்லும் நிலை ஏற்படும்.

குல தெய்வ கோயிலில் நீங்கள் பலி கொடுத்த உடனே உங்கள் குடும்பத்தில் இருந்த சர்வ பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும்.
ஒவ்வொரு ஆண்டு பலி முடிந்த பிறகும் ஒவ்வொன்றாக நாம் அதை உணர இயலும்.

பங்காளி என்பதே பலி பூஜை பிரசாதத்தை பங்கு போட்டு வாங்கி பங்கு போட்டு ஒன்றாக அமர்ந்து உண்பதே.

அரிசிக்கு உயிர் இருப்பதால் அதை பொங்கலாக சாமிக்கு படைத்து உண்கிறோம்.

அதே போல அன்று கொடுக்கும் பலியையும் அன்று பிரசாதமாக உண்கிறோம்.

உண்ணாமல் இருந்தால் தவறு இல்லை.
ஆனால் பலி தேவை.

பலி கொடுக்காத கோயிலும் விளங்காது.
பலி கொடுக்காத ஊரும் விளங்காது.
பலி கொடுக்காத மக்களும் விளங்காமல் ஊரை விட்டு ஓடோடி நாடோடி ஆவார்கள்.

ஆகவே சாக்த பலி தேவை.

என்னால் உங்களை தூண்ட மட்டும்தான் முடியும்.
சக்தி பெறுவதும்,மறுப்பதும் உங்கள் கர்மாவை பொறுத்தது.

அவன் அருளால் அவன்தாள் பணிந்து.

அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

பகிர்வோம்.