புதன், 30 ஜூலை, 2025

பால் வணிகம்

ஒரு காலத்தில் பால் காலை நேரத்தில் மட்டும் தான் கிடைக்கும். இப்பொழுது பால் 24 மணி நேரமும் கிடைக்கிறது. எப்போ வேண்டுமானாலும் கடைக்கு சென்றால் பால் வாங்கிக் கொள்ளலாம். அப்படி ஒரு நவீன வாழ்வியல் முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் வீட்டிற்கு அருகில் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு வீட்டில் தான் பால் கிடைக்கும். அந்த வீட்டில் உள்ள முதியவர்கள் பால் மோர் போன்றவை வீட்டில் வைத்துக்கொண்டு கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய வீட்டில் தான் பால், பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர் வெண்ணெய் நெய் இவைகள் எல்லாம் கிடைக்கும். அவர்களுடைய வீட்டில் தான் பால் வாங்குவோம். அதுவும் குழந்தை இருக்கும் வீட்டில் மட்டுமே பால் வாங்கும் பழக்கம் இருந்தது மற்றவர்கள் யாரும் பால் பயன்படுத்துவது இல்லை. அப்படி ஒரு நிலைமை அந்த காலத்தில் இருந்தது. இந்த காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை எழுந்த உடனே பால் தான் கேட்கிறார்கள். அந்த பாலில் காபி, டீ என்று பலவகையாக பயன்படுத்துகிறார்கள். பால் வணிகம் என்பது 1990 காலகட்டத்திற்கு பிறகு தான் ஆரம்பிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் தான் பாலை வாங்கி சேமிக்கும் பழக்கமும் உருவானது. இன்று பால் வணிகம் என்பது பல கோடி ரூபாய் புரளும் மிகப்பெரும் தொழிலாக வளர்ந்து இருக்கிறது. வெண்மை புரட்சிக்கு பிறகு வெளிநாட்டு மாடுகள் இறக்குமதியான அதற்குப் பிறகு பால் வணிகம் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு கோடியே லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது என்றால் ஒரு நாளைக்கு விற்பனையாகும் பாலின் அளவு 5 கோடி லிட்டராக இருக்கிறது. பால் வணிகத்தில் இது எப்படி என்று தான் புரியவில்லை. செயற்கை பால் ரசாயனம் கலந்த பால்கள் அதிகமாக விற்பனையாகிறது. அந்தப் பாலை குடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் புதிய புதிய வியாதிகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் முதியவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. 60 வயதை கடந்தவர்கள் பால் சார்ந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. பால் பருகுவதால் நமது உடலில் பித்தம் அதிகரிக்கிறது. பித்தம் என்றால் நமது ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. ரத்தத்தில் அமிலத்தன்மை நீண்ட நேரம் நீடித்தால் அந்த உடல் அழிவை சந்திக்கும் என்பதால் அமிலத்தன்மையான இரத்தத்தை காரத்தன்மைக்கு மாற்றுவதற்காக உடலில் எலும்புகளில் உள்ள சுண்ணாம்பு சத்தை எடுத்து அமிலத்தன்மை காரமாக மாற்றுகிறது. நமது உடல் இதேபோல் அடிக்கடி தொடர்ந்து கொண்டிருந்தால் நமது உடலில் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. சுண்ணாம்புசத்து பற்றாக்குறையினால் எலும்புகள் வலு இழக்கிறது.
@selvaraju
30/07/2025

ஞாயிறு, 27 ஜூலை, 2025

செயற்கை வாசனையூட்டிகள்

செயற்கையான வாசனை திரவியங்களை ( perfume)பயன்படுத்தியவர்கள் அருகில் வரும் போது சில நிமிடங்கள் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் எப்படி ஒரு நாள் முழுக்க தாங்கிக் கொள்கிறார்கள் என்று தான் புரியவில்லை. இந்தப் பிரபஞ்சத்திற்கும் நமக்குமான தொடர்பவே  நம்முடைய சுவாசம் தான். செயற்கை அல்லாமல் இயற்கையான நறுமணங்களை அளவாக பயன்படுத்திக் கொள்ளலாம். செயற்கையான (chemical)வாசனையூட்டிகள் உடல் நலத்தை பாதிக்கும்.அதற்கு நம்முடைய உடல் காட்டும் எதிர்ப்பு தான் தலைவலி.
@selvaraj

சனி, 26 ஜூலை, 2025

சரம் பார்த்தல்

சரம் பார்த்தல் என்பது, காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பார்க்கவேண்டும்.

1. திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு இடப்புறம் வரவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சந்திரக்கலையில் இயங்க வேண்டும்.

திங்கள் அன்று சூரியக்கலை ஓடினால் - தாயிடம் வெறுப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, ஜலதோசம், தலைவலி, கண், காது நோய்கள் உண்டாகும்.

புதன் அன்று சூரியக்கலை ஓடினால் - மாமனாரிடம் மதிப்பு போகும், தாய்மாமனிடம் உறவு கெடும், உடல் வலி, குடைச்சல், மூட்டு வலி வரும்.

வெள்ளி அன்று சூரியக்கலை ஓடினால் - பார்வை பழுதாகும், தாம்பத்ய உறவு கெடும்.

2. சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு வலப்புறம் ஓடவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சூரியக் கலையில் இயங்க வேண்டும்.

சனிக்கிழமை சந்திரக்கலை ஓடினால், கடன் தொல்லை, சண்டை சச்சரவு, சரும நோய், ஜூரம் வரும்.

ஞாயிறு அன்று சந்திரக்கலை ஓடினால், தந்தையிடம் அன்பு குறையும், தொழிலில் அமைதி இருக்காது, தலைவலி, இருமல், சளி உண்டாகும்.

செவ்வாய் அன்று சந்திரக்கலை ஓடினால், உடன்பிறந்தோரிடம் பிணக்கு, வெப்பக்காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்சுவலி ஏற்படும்.

3. வளர்பிறையில் வருகின்ற வியாழன் அன்று இடப்புறம் (சந்திரக்கலை) சுவாசம் நடைபெறவேண்டும். தேய்பிறையில் வருகின்ற வியாழன் அன்று வலப்புறம் (சூரியகலை) சுவாசம் நடைபெறவேண்டும்.

வியாழக்கிழமைகளில் மட்டும் பிறைக்குத் தக்க சரம் ஓடும். மேற்கண்டவாறு ஓடாமல் மாறி இயங்கினால், பெற்ற மக்களால் துயரம், அடிவயிற்று வலி, மலடு ஆதல் போன்றவை நிகழும்.

மேற்கண்டவாறு அந்தந்த நாட்களில் அந்தந்த சரம் ஓடவில்லை எனில் தக்க உபாயத்தினாலும் ஆசாரியரிடமும் பயின்று சர ஓட்டத்தை சரி செய்ய வேண்டும்.