செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

108 சிவன் கோயில் தரிசன பலன்கள்

#108_பிரபல_சிவன் #கோயில்கள்_தரிசன #பலன்கள்  
1 #திருகுடந்தை #ஊழ்வினை_பாவம் #விலக
2 திருச்சிராப்பள்ளி வினை அகல
3 திருநள்ளாறு கஷ்டங்கள் விலக
4 திருவிடைமருதூர் மனநோய் விலக
5 திருவாவடுதுறை ஞானம் பெற
6 திருவாஞ்சியம் தீரா துயர் நீங்க
7 திருமறைக்காடு கல்வி மேன்மை உண்டாக
8 திருத்தில்லை முக்தி வேண்ட
9 திருநாவலூர் மரண பயம் விலக
10 திருவாரூர் குல சாபம் விலக
11 திருநாகை (நாகப்பட்டினம் ) சர்ப்ப தோஷம் விலக
12 திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) முக்தி வேண்ட
13 திருவண்ணாமலை நினைத்த காரியம் நடக்க
14 திருநெல்லிக்கா முன்வினை விலக
15 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மணவாழ்க்கை சிறப்புடைய
16 திருகருக்காவூர் கர்ப்ப சிதைவு தோஷம் விலக
17 திரு வைத்தீஸ்வரன் கோவில் நோய் விலக
18 திருகோடிக்கரை பிரம்ம தோஷம் விலக
19 திருக்களம்பூர் சுபிட்சம் ஏற்பட
20 திருக்குடவாயில் ( குடவாசல் ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய
21 திருசிக்கல் ( சிக்கல் ) துணிவு கிடைக்க
22 திருச்செங்காட்டங்குடி கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக
23 திருக்கண்டீச்சுரம் நோய் விலக , தீராத புண் ஆற
24 திருக்கருக்குடி ( மருதாநல்லூர் ) குடும்ப கவலை விலக
25 திருக்கருவேலி ( கருவேலி ) குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க
26 திருவழுந்தூர் ( தேரெழுத்தூர் ) முன் ஜென்ம பாவம் விலக
27 திருச்சத்திமுற்றம் மண வாழ்க்கை கிடைக்க
28 திருப்பராய்துறை ( திருச்சி ) கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற
29 திருநெடுங்களம் ( திருச்சி ) தீரா துயரம் தீர ( இடர் களைய )
30 திருவெறும்பூர் ( திருச்சி ) அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற
31 திருப்பைஞ்ஞீலி ( திருச்சி ) யம பயம் விலக
32 திருவையாறு அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
33 திருவைகாவூர் வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க
34 திருக்கஞ்சனூர் திருமண தோஷம் விலக
35 திருமங்கலக்குடி (சூரியனார் கோவில்) குழந்தை பாக்கியம் பெற
36 திருமணஞ்சேரி திருமண தோஷம் விலக
37 திருமுல்லைவாயில் சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக
38 திருவெண்காடு ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை
39 திருநெல்வேலி பிராமண குற்றம் விலக
40 திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில் முக்தி வேண்ட
41 திருவாலவாய் ( மதுரை ) தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட
42 திருப்பரங்குன்றம் ( மதுரை ) வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட
43 திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில் தீரா பாவம் விலக
44 திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
45 திருப்பாதிரிப்புலியூர் ( புட்லூர் ) தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக
46 திருவக்கரை செய்வினை தோஷம் விலக
47 திருவேற்காடு வாணிப பாவம் விலக
48 திருமயிலாப்பூர் மூன்று தலைமுறை தோஷம் விலக
49 திருஅரசிலி ( ஒழுந்தியாம்பட்டு ) காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
50 திருவாலங்காடு வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக
51 திருவேட்டிபுரம் ( செய்யாறு ) ஞானம் கிடைக்க
52 திருப்பனங்காடு பந்த பாசத்தில் இருந்து விலக
53 திருவூறால் ( தக்கோலம் ) உயிர்வதை செய்த பாவம் விலக
54 திருப்பாச்சூர் குடும்ப கவலைகள் நீங்க
55 திருவெண்ணைநல்லூர் பித்ரு தோஷம் விலக
56 திருவதிகை நல் மனைவி அமைய
57 திருவாண்டார் கோவில் முக்தி வேண்ட
58 திருமுது குன்றம் ( விருத்தாசலம் ) தீரா பாவம் விலக
59 திருக்கருவூர் ( கரூர் ) பசுவதை செய்வதன் வழிபட
60 திருப்பாண்டிக் ( கொடுமுடி ) பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக
61 திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட
62 திருகோகர்ணம் ( கர்நாடகம் ) தேவ தோஷம் விலக
63 திருப்புகழூர் பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க
64 திருத்தோணிபுரம் ( சீர்காழி ) குல சாபம் நீங்க
65 திருவைத்தீஸ்வரன் கோவில் பிணிகள் விலக , அங்கார தோஷம் விலக
66 திருக்கருப்பறியலூர் ( தலைஞாயிறு ) கர்வத்தால் குரு துரோகம்
67 திருப்பனந்தாள் பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக
68 திருப்புறம்பயம் மரண பயம் விலக
69 திருநெய்த்தானம் மோட்ஷம் வேண்ட
70 திருவானைக்காவல் கோவில் கர்மவினை அகல
71 திருவேதிக்குடி தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக
72 திருவலஞ்சுழி வறுமை அகல
73 திருநாகேஸ்வரம் ஸர்ப்ப ஸாபம் விலக
74 திருநாகேஸ்வர சுவாமி ( கும்பகோணம் ) நவகிரஹ தோஷம் விலக
75 திருநல்லம் (கோனேரிராஜபுரம்) வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக
76 திருத்தெளிச்சேரி ( காரைக்கால் ) சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர
77 திருசெம்பெரின்பள்ளி வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க
78 திருத்தலச்சங்காடு ( தலைச்செங்காடு ) அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக
79 திருவன்னியூர் ( அன்னூர் ) சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட
80 திருநன்னலம் ( நன்னிலம் ) ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட
81 திருராமனாதீச்சுரம் ( திருக்கண்ணாபுரம் ) கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக
82 திருமருகல் கணவன் மனைவி அன்புடன் வாழ
83 திருச்சிக்கல் பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட
84 திருச்சேறை இல்லறம் மேலும் சிறக்க
85 திருக்கோளிலி ( திருக்குவளை ) நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட
86 திருவாய்மூர் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
87 திருநெல்லிக்கா கல்வி மேன்மை அடைய
88 திருவெண்டுறை ( வண்டுறை ) வறுமையிலிருந்து விலக
89 திருக்கடிக்குளம் ( கற்பகநாதர்குலம் ) வினைகள் விலக
90 திருஆலங்குடி புத்திர தோஷம் விலக , செல்வம் சேர்க்கை பெற
91 கொட்டாரம் அமைதி பெற
92 திட்டை சந்திர தோஷம் விலக
93 பசுபதி கோவில் இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட
94 கொட்டையூர் செய்த பாவங்கள் வேயொரு வீழ
95 ஓமாம்புலியூர் சனி தோஷம் விலக
96 தருமபுரம் சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக
97 மயிலாடுதுறை அனைத்து பாவங்களும் விட்டோட
98 உத்தரகோச மங்கை கர்மவினைகள் அகலும்.
99 இராமேஸ்வரம் பித்ரு தோஷம் விலக
100 காளையர்கோவில் பிறவி பயன் கிடைக்க
101 பெண்ணாடம் ஊழ்வினை தோஷம் அகல
102 இராஜேந்திரப்பட்டினம் கர்மவினை அகல
103 அவினாசியப்பர் ஏழு தலைமுறை பாவங்கள் விலக
104 குரங்கினில் முட்டம் நினைத்த காரியம் நடக்க
105 பவானி பித்ரு தோஷம் போக்க
106 ஆச்சான்புரம் மண வாழ்க்கை சிறக்க
107 ஆடுதுறை திருஷ்டிசுபம். தோஷம் விலக
108 சங்கரன்கோவில் ஸர்ப்ப தோஷம் விலக. 
சுபம்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

பெண்களுக்கான பதிவு

பெண்கள் கண்டிப்பா படிங்க...

வண்டி பிரேக் டவுன் ஆனா மெக்கானிக் கடை தேடுவோம் 

அதுமாதிரி தான் எப்ப அடைக்கும் எப்படி அடைக்கும் தெரியாது 
Non communication disease
சொல்லாம கொ(ல் )ள்ளா ம வர வியாதி 

🌷 பூ வ பெண்ண உவமையா சொல்ல காரணம்...
இயற்கை படைப்பு பேராற்றல் பெண் ஓர் தேவதை...

அதே பெண்ணை பேய் என்றும் காட்டேரி என்று ஏன் கூறுகிறார்கள்...

மனம் தான் காரணம் 
நம் உடலில் நோய் என்னும் சாத்தான் உள்ளே வர...

ஆசை பேராசை பொறாமை கோவம் வஞ்சம் 

உயிர் ஆற்றலை சிதைக்கும் உணவு பாஸ்ட்புட் fried ரைஸ் மைதா பரோட்டா  குறிப்பா 

பிராய்லர் முட்ட ஹாப்ஃஆயில் ஆம்லெட்
பிராய்லர் சிக்கன் 65 fried சிக்கன் தந்துரி
, 5 வெள்ளை (1-பட்டை தீட்டுன முனை உடைஞ்ச வெள்ளை அரிசி சக்க வயித்த அடைக்க மட்டும் 

2.பால் ஜெற்சி மாடு அது பன்றியும் நாட்டு மாடும் கிராஸ் செய்த ஒரு உயிரினம் பன்றி போல -லிட்டர் லிட்டர் ஆ வர 

3.சக்கர pure white சாக்கடை குப்பையை எடுக்க காஸ்டிக் சோடா னு ஒன்னு போடுவாங்க வேணா டீ கடைல சக்கர மூட்டைல எழுதி இருக்கும் பார்த்து confirm பண்ணுங்க
4.உப்பு இங்கதான் மாட்டுறதே பிரீபிலோ வா வாங்கு 
கல் உப்பு கரஞ்சுடுது
போரொஷ் என்னும் படிகாரம் இன்னும் சில கலந்தா கெட்டியா இருக்கும், அதான் உடம்புல கட்டி வரது...

Last but not least 
5.அல்லோலோபதி வெள்ளை உப்பு மாத்திரை 
-
சடக்குனு போய் படக்குனு போட்ட்டா  வலி நின்றும் மெடிக்கல் ல 
அப்புறம் 
பைலை தூக்கிட்டு லோ லோ பத்து ஸ்பெஷலிஸ்ட், 4 பேரு, ஆட்டோ கார் அப்பொய்ன்மெண்ட் தான் பல அடுக்கு மாடி ஆஸ்பத்திரி தான்,சாதாரண ஆஸ்பத்திரி ல யாராச்சும் பாப்பாங்களா கௌரவம் 🧐 )

சோலி 🤪 

குழந்தை பெண்கள் ரோட்டுக்கடை காளான் என்னும் காலன் 
பழைய உணவு
பிரிட்ஜ் (குப்பைதொட்டி )ல வச்சு சாப்பிடும் பழக்கம் 
இது 90%  வீட்லயும் சிங்க் ல பாத்திரம் 
சாக்கடை என்னும் கொடிய கிருமி உருவாகுவது 
இங்கேதான் 

நம் கண்ணுக்கு தெரியாது 
ஆனால் 
ஒரு நோய் எதனால வருது னு பல்வேறு ஆராய்ச்சி...
இதுலாம் வேற்று கிரகம் வெளிநாட்டு ல இல்லை 

1stகமெண்ட் பாருங்க 
எத்தனை லட்சம் பேரு 
இந்தியால
தமிழ்நாட்டுல 

தீர்வு 
நாம மாறுநா தான் உண்டு 

விரலி மஞ்சள் போட்டு பொம்பள புள்ளைங்க குளிங்க 

திலர்த்த வர்மம் என்னும் நெற்றி பொட்டு ல குங்குமம் (சுத்தமான) வைங்க 
வேர் பலப்படும்...

நாப்கின் தயவு செய்து பயன்படுத்தாதீங்க 
(காசு கூட போனாலும் ஆர்கானிக் நாப்கின் நம்ம மரபு வழியில் பலர் முன்னெடுக்குறாங்க 
Mohammed Abuthahir 
Shafa naphkin   (*ஸஃபா மூலிகை பருத்தி நாப்கின்கள்* )அத பயன்படுத்துங்கள்... விளம்பரம் அல்ல...
ஆர்கானிக்  பக்கத்துல என்ன கிடைக்குமோ பயன்படுத்துங்கள்...

விழிப்புணர்வு பதிவு தொடரும் 

தாய்மார்களே குழந்தைகளே

தடுப்போம் 
கர்ப்பப்பை புற்றுநோய்
 வர்ம மருத்துவர் கிஷோர் அவர்களின் பதிவு 17/8/2025

புதன், 13 ஆகஸ்ட், 2025

கொங்கு வட்டார மொழிகள்

நமது கொங்கு வட்டார வழக்கிலிருந்து மறைந்து கொண்டிருக்கும் சில சொற்களை இங்கு நினைவு கூர்வோம்:

தொறப்புக்குச்சி
பொடக்காலி
அண்ணாங்கால்
கொடாப்பு
உருவாஞ்சுருக்கு
பால் பீய்ச்சுதல்
தயிர் சிலுப்புதல்
அட்டாலி , 
சால்பரி
மக்கிலி (மக்கிரி )
கொத்து
மொளக்குச்சி
சாளை
கடவுப்படல்
தடுக்கு
தட்டக்கூடை
வால்கவுறு
கவலை(ளை)யோட்டுதல்
தரம்பு கட்டுதல்
கொடுவாள்
கருக்கருவாள்
களத்துமேடு
பாம்பேரி
பெருக்கான்
முட்டுவழி
தொக்கடா
வெள்ளதாரை
தரம்புகட்டை
ஒண்டுகவை
மொகரப்பூட்டு
மரக்கால்
தும்மி
சாடு
குடுதாழி
ராக்கூடை
வாக்கூடை
தார்க்கோல்
மொளக்குச்சி
நாச்சோறு
ஒதுக்குபடல்

பொங்கச் சருவம்
தூக்குப் போசி...
சப்பாரம்
மாடகுழி ( விளக்கு ஏற்றுமிடம்)
கடவு( நுழைவு வாயில்)
ரஸ்தா ( பாதை)
கொறங்காடு
அம்புளி ( சோளத்தை இடித்து ஊற வைத்து செக்குல ஆட்டி இரவு புளிக்க வைத்து காலையில் காச்சப்படும் கூழ்)
ஆணம் (கொழம்பு )
கற சோறு
மொசல் ( முயல்)
வைக்கப்பில் (வைக்கோல்புள்ளு)
சோளத்தட்டு (தீவனம்)
மொளவு (கறிக்குழம்புக்கு சேர்க்கும் மசாலா)
மொறம்.
மக்கரி
தலமாறு (ஏரு திரும்பும் முனை)

அங்கராக்கு ...

தொவயல் (கல்லத் தொ வயல்)

சும்மாடு
திருவ
கரித்துணி
ஊரப்பானை
சருவம்
அண்ணாக்கவுரு
மங்கிலியம்
தட்டம்
கவுட்டி
கவ்வை கோலு (குச்சி)
அணப்பு
பொலி
சலதாரை
பொறக்கடை
பட்டியாளு நேரம்
கோழி கூப்புட
பொழுதோட
வெடியால
பழையசோத்து நேரம்
இரணிய நேரம்
சைனம்
மொதபஸ்
கடைசி வண்டி
பெளசரு (கார்)
சவ்வாரி
நொங்குவண்டி
பல்லுக்குச்சி
ஊறத்தண்ணி
புழுதண்ணி
மத்துக்குச்சி
மத்துக்கோல்
தெரட்டி
மொறச்சீரு
குச்சு
ஒலக்கை
ஒரலு
மேவரம்
கெழவரம்
தெக்கால
வடக்கால
பக்காபடி
முத்திரைப்படி
வள்ளம்
ஒலக்கு
தூத்துக்கூடை
வெதப்பொட்டி
வெஞ்சனம்
மேத்திண்ணை
திண்டு
நட்டடுப்புச் சாம்பல்
இட்டாலி
முக்கிட்டாலி
சீடை கட்டுறது
எறவுத் தண்ணி
கோடாலி கொண்டை
பின் கொசுவம்
அடுக்கு
ஆப்பை
உரி
கொட்டம்
தொண்டுப்பட்டி
மொடகாடு
வாரிக்குழி
ஒரம்பு
கடையோடறது
பொறவு
அக்கட்டால
அங்கிட்டு
இங்கிட்டு
காத்தாட
மேம்போக்கு

சாடு கவை
ஒண்டுக்கட்டை
கம்பரக்கத்தி
சீவக்கட்டை
மேத்திண்ணை
எரவானம்(தாவாரம்)
ரக்கிலி(கீரை)
கொக்கிச் சல்லை
ஒட்டுக் கூடை
கன்னித் தும்பு
தலை கயிறு
வடம்
வால் கயிறு
பாதாள சோதி
தார்க்கறுது
மயிறு கோதி
கோனூசி
அஸ்க்கா
பாம்பேரி
கொடுவாப் பூன்
தாம்புக் கன்னி
கொட்டாப்புடி
மஞ்சி
அவினி
கருக்காம்பட்டை
பனங்கறுக்கு
தொரட்டி
தேங்காத் தொட்டி
நாச்சோத்துக் கும்பம்
உரிக்காக் கொடி
கத்தக்கொடி
முஷ்டக் கொடி
தாதரா
பன்னை
குமுட்டி
தொய்யல்
ஒருக்கட்டத் தொய்யல்
தாருமுள்
தார்க்கருது
மயிருகோதி
மேத்திண்ணை.
எரவாரம்

தேகுசா
பொங்கச் சருவம்
சால்பானை
படிக்கம்
ஆரீக்கல்
ஒல்லு
ஒலக்கை
செக்கு
கொக்கிச்சல்லை
தொண்டுப்பட்டி
கெடாக் குட்டி
பிறவக் குட்டி
காளைக்கன்னு
கெடாரிக் கன்னு.
தொறப்பு
நாதாங்கி

குச்சூடு
மச்சூடு
தொட்டிகட்டு 
தலவாசல்
தட்டுக்காரம்
தாட்சான்
ஈட்டாக்குட்டி
ஒலுப்பட்டி
சொரப்புரடை
தூரி

கூட்டாஞ்சோறு
ராட்டை
ஒடக்கா
கூட்டுச்சாறு
பனங்கா
துலுக்கானி சோளம்
குரங்கு பொகீளை

பக்காப்படி
பட்டணரவை
வேப்பெண்ணை கலயம்
கும்பா
சாவக்குஞ்சு வெடைகுஞ்சு
தொலவு
அத்துவானம்

உக்கரம் சுரேசு முகநூல் பதிவு...

புதன், 6 ஆகஸ்ட், 2025

குடிப்பழக்கம் நல்லதா?

இன்றைய நடைமுறை வாழ்வில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை உணவு குடிநீர் மாதிரி இந்த குடிப்பழக்கம் ஆகிவிட்டது. காலை முதல் இரவு வரை எந்த நேரமும் குடிப்பழக்கத்தை தொடர்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். குடிப்பதனால் உடலில் என்ன நடக்கிறது? மனித உடலுக்குள் போதை பொருட்கள் சென்றவுடன் அவன் நிகழ்காலத்தை மறக்கிறான். அதாவது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது மேல் மனதின் செயல்பாடுகளில்தான். அந்த மேல் மனதில் தான் எண்ணம் சிந்தனை இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த மேல் மனதின் பிடியிலிருந்து போதை பொருட்கள் எடுத்துக் கொள்பவன் விடுபடுகிறான். இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மேல் மனமானது போதை பழக்கத்தின் போது நிறுத்தி வைக்கப்படுவதனால் அவன் ஆனந்தத்தில் மிதக்கிறான்.. அறிவியல் பூர்வமாக சொல்வது என்றால் போதை போடும்போது அவனது மூளையில் சுரந்து கொண்டிருக்கும் ரசாயனங்களில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த ரசாயனத்தில் ஏற்படும் மாற்றம் மேல் மனதின் பிடியிலிருந்து விடுவிக்கிறது. அந்த மேல் மனதில் இருந்து விடுபடும் போது அதில் ஒரு சுகம் கிடைக்கிறது அது ஒரு ஆத்மார்த்தமான சுகமாகவே இருக்கும். இதுபோல எண்ணங்களற்ற நிலையை சித்தர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். எப்படி? என்றால் தியானப் பயிற்சி செய்வதனால் மேல் மனதின் பிடியில் இருந்து விடுவிக்கலாம். பலவகையான தியான பயிற்சிகள் உள்ளது. அவற்றில் ஏதாவது ஒரு தியானப் பயிற்சியை மேற்கொண்டு வந்தால் மனமற்ற நிலையை பெறலாம். மணமற்ற நிலையை அடையும்போது அது ஒரு பேரானந்தமான நிலையாக இருக்கும். குடிப்பழக்கத்தில் இருப்பவர்கள் இந்த மனமற்ற நிலையை விரும்புவதால் அடிக்கடி அந்த பழக்கத்தை தேடுகிறார்கள். அதுவே தியான பயிற்சி தொடர்ந்து செய்யும்போது அந்த பேரானந்த பரவச நிலை உச்சத்தை அடைகிறது. இறை நிலையை அடைவதற்கும் பயன்படுகிறது.
@selvaraju 
7/08/2025

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

காய்ச்சல் நல்லது

மூட்டு வலியை குணமாக்கும் காய்ச்சல்.
கேன்சரை குணமாக்கும் காய்ச்சல்.
கர்ப்பப்பை கட்டிகளை கரைக்கும் காய்ச்சல்.
மஞ்சள் காமாலையை குணமாக்கும் காய்ச்சல்.
ஆஸ்துமாவை குணமாக்கும் காய்ச்சல்.
கண் பார்வையை அதிகமாக்கும் காய்ச்சல்.
#காய்ச்சலைக்கொண்டாடுவோம்.
#காய்ச்சல்நல்லது.

சனி, 2 ஆகஸ்ட், 2025

விருத்த ஆகாரங்கள்

விருத்த ஆகாரங்கள்.

1.பால் + பன்றி மாமிசம் +காது   செவிடாகலாம், 

2, மாட்டு மாமிசம் + மட்டன் கண்கள் பழுதாகலாம், குரல் மாறும். 

3. பாலும், பழமும்  சரும நோய்கள் ஏற்படலாம்.

4. பாலும் மீனும்
சரும நோய்கள் ஏற்படலாம்.

5. பால் + முள்ளங்கி + கேரட் சரும நோய்கள்  ஏற்படலாம்.

6.பாலும் + ரொட்டி முதலிய அதிக அமில சுரப்பு, வீக்கம், ஜலதோஷம்  சோகை முதலியன.

7. பாலும், ஆல்கஹாலும்
உயர் ரத்த அழுத்தம்.

8. மீனும் ஆல்கஹாலும் தோல் வியாதிகள். 

9.கோழி இறைச்சி + தயிர் மலட்டுத்தன்மை. ஆண்மைக் குறைவு.

மேலும் சில விருத்த ஆகாரங்கள் அடுத்த பதிவில் தொடரும்.....

தலையில் உள்ள பொடுகுக்கு காரணம்

உடலியக்கத்தில் விஷமேறியதன் மூலம் அது மண்டையோட்டில் விளைவுகள் ஏற்படுத்துவதால் தலைப்பொடுகு உருவாகிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. வெளியேற்ற முடியாத அளவிற்கு கழிவுகள் உடலில் தேங்கியிருப்பதால் மூளைப்பகுதி பாதிப்பிற்குள்ளாகும்.உடலில் விஷத்தன்மை உற்பத்தியாவதைத் தடுத்து நிறுத்தி அவற்றை இயற்கையான வழியில் அகற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மருந்தாகப் பயன்படுத்தப்படும் பொடுகு நிவாரணியில் பொடுகு டானிக்கு களில் கிளிசரின் மற்றும் விஷமிக்க ஆன்டி பயாடிக்கள், செயலூக்கிகளும் அடங்கியுள்ளன. இவற்றை மண்டையோடும், மூளையும் உறிஞ்சு வதால் தலைவலியும், நினைவிழப்பும் நரம்புத் தளர்ச்சியும், செவிட்டுணர்வும் கண்பார்வை மங்கலும் ஏற்படுகிறது. தலையில் ஒட்டுண்ணியைப் போன்ற தலைப்பேன்கள் இருப்பதுபோல உடல் முழுக்க ஒட்டுண்ணிகள் பரவுகின்றன. இவை உடலில் இருந்துதமக்கான உணவை எடுத்துக் கொள்ளும்போது பேன்களும் தலையில் ஊறத்தொடங்குகின்றன. மைக்ரோஜைமியன் கோட்பாட்டினைப் போலவே இதன் போக்கினை புரிந்து கொள்ளலாம். இவ்வரு வருப்பான பூச்சியினம் பொடுகுத் தொற்றுள்ள அனைவரிடமும் இருப்பதில்லை. யாருக்கு உள்ளும் புறமும் நிறைய கழிவுகள் சேர்ந்திருக்கிறதோ அவர்களிடம் தான் பேன் அதிகமாகப் பரவுகிறது. நோயாளிகள் பலரிடத்தில் பேன் அகற்றுதலை ஒரு நோய் நிவாரண வடிவமாக நாம் பார்த்திருக்கிறோம். அதுபோன்ற நிவாரண வேலைகள் செய்யும்போது நோயாளியைத் தூய்மையான சூழலில் வைத்திருந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வடிவிலான நீர்ச்சிகிச்சை அளித்தால் நிவாரணம் கிடைத்து விடும். பலர் வேறு சிகிச்சை பெறும்போது தான் தம்மிடத்தில் ஒட்டுண்ணிகள் தொற்றியதாக நினைவு கூர்ந்துள்ளனர். பேன் அகற்றுவதற்கு நாம் பரிந்துரைக்கும் சிகிச்சை குளிர்ந்த நீர் குளியல்,இனிமா கொடுப்பது,இயற்கை உணவு மற்றும் சீப்பு பயன்படுத்துவது மட்டுமே போதுமானது. ஆண்டிசெப்டிக் சோப்பு கூட தவிர்க்கப்பட வேண்டியவை.
@Selvaraju 

கணவன் மனைவி உறவு

☀கணவன் மனைவி உறவுக்கு
இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள். விட்டுக் கொடுப்பதால் சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆக வேண்டும் என்றாலும், முடிவில் நன்மை நடக்கும் என்பதை உணருங்கள் 

☀கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், சேமிப்பதும் கருத்து வேறுபாடுக்கு இடம் தரும்.

☀நானே பெரியவன் என்ற அகந்தையை விடுங்கள் அர்ததமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள். 

☀குடும்பத்தை நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத் தான் இருக்க வேண்டும். எந்நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

☀நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விடடொழியுங்கள்

☀உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

☀மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள், அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய்
ஆசைப்படாதீர்கள். 

☀எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். 

☀கேள்விப்படும் எல்லா விஷயத்தையும் நம்பாதீர்கள்.அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள் 

☀உங்கள் கருத்தில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். மற்றவர் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள பழகுங்கள். 

☀மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். புன்முறுவல் காட்டவும், அன்புச் சொற்களைப் பேசவும் கற்றுக் கொள்ளுங்கள்.

-வேதாத்திரி மகரிஷி

பாலுணர்வு

பாலுறவில் அடிக்கடி ஈடுபடும் உயிரினம் மனித இனம் அவ்வாறு அடிக்கடி ஈடுபடும் போது பால் சார்ந்த உச்சகட்ட இன்பங்கள் மூளையில் நிகழ்கிறது. அவ்வாறு இன்பம் நிகழும் போது. மூளையில் சில பொருட்கள் சுரக்கின்றன.

"அந்த வேதிப்பொருட்களில் ஒன்று நுண்ணறிவை உருவாக்கக் கூடியது. அந்த நுண்ணறிவு தான் மற்ற உயிரினங்கள் அனைத்தையும் விட உயர்வான இடத்தில் மனித இனத்தை வைத்திருக்கிறது.

நெப்போலியன் ஹில் சொல்கிறார். செக்ஸ் உணர்வு புனிதமானது. அபரிமிதமான செக்ஸ் உணர்வு இருப்பது ஒரு வரம். ஏனெனில் அபரிமித செக்ஸ் உணர்வு இருப்பவர்கள் தான் மகா வெற்றியாளர்களாக உருவாகிறார்கள்.

காதலும், சரசமும், செக்சும் தான் ஒரு நபர் ஜீனியஸ் ஆவதற்கான படிக்கட்டுகள். இதைத்தவிர, ஒரு மனிதன் ஜீனியஸ் ஆவதற்கு வேறெந்த குறுக்கு வழியும் இல்லவே இல்லை. 

மேலும், உலகம் தோன்றிய நாள் முதலாக, செக்ஸ் உணர்வைப் பயன்படுத்தாமல், ஒரு பேரரசனோ, பெருந்தலைவனோ. கலைஞனோ,
கவிஞனோ உருவானதேயில்லை. இனி மேலும் உருவாகவும் முடியாது.

மனித வரலாற்றை ஆழமாக ஆராய்வதன் வாயிலாகவும் நாம் மேற்கண்ட உண்மையை உணர்ந்து கொள்ளலாம். பாலுறவில் அதிகமாக ஈடுபடும் இனம் தான் இது வரை உலகம் முழுவதையும் ஆட்சி செய்திருக்கிறது. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வரை, இந்தியா தான் உலகின்
அசனாக இருந்திருக்கிறது. அப்போது இந்தியா பாலுறவிற்கு ஆதரவான
மனநிலையில் இருந்திருக்கிறது.

காமத்திற்கு சூத்திரம் எழுதிய காலமும் சரி, கஜூராகோ கோவிலின் சிற்பங்களை உருவாக்கிய காலமும் சரி இந்திய பூமியின் பொற்காலமாக இருந்திருக்கிறது. 

#தந்த்ராவழியில்தாம்பத்யவாழ்க்கை புத்தகத்திலிருந்து.....
நன்றி🌻
@Selvaraju
9715092335

கேன்சர்!! ஏன்?

கேன்சர் வர காரணம், 
புகை பிடித்தல், 
மது அருந்துதல், 
ரசாயன விவசாயம்,
ரசாயனத் தொழிற்சாலையில் தொடர்ந்து  வேலை செய்வது  என்கிறார்கள். 
மேலே சொல்லப்பட்ட ரசாயன கூறுகளால் கேன்சர் வருவதில்லை. 
மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும்போது ,
உடல் அந்த ரசாயன கூறுகளை வெளியேற்ற முயற்சி செய்யும். 
அந்த விஷ கூறுகளை வெளியேற்றும் முயற்சியின் போது தான் சளி, காய்ச்சல், வாந்தி, பேதி இன்ன பிற நடவடிக்கைகளில் உடல் ஈடுபடும்.
அந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளும் ரசாயன மருந்துகளள்,சளி காய்ச்சல் வாந்தி பேதியை உடலிலேயே அடக்கிவிடும்.
அதனால்   கழிவுகள் உடலிலேயே தேங்கிக் கொள்கிறது.
உடலில் தேங்கியுள்ள நாள்பட்ட ரசாயன கழிவுகள் கேன்சராக மாறுகிறது.
கேன்சருக்கு முக்கிய காரணமே கழிவுகளை உடலிலேயே அடக்குவது தான்.
கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றுவது தான் சரியான சிகிச்சை முறையாகும்.
பாரம்பரிய சிகிச்சை முறைகள் இதை கச்சிதமாக செய்கிறது.

ரசாயன மருந்துகள் சம்பந்தமான படிப்பில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்திருக்கிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.
@selvaraju 
9715092335

ரத்த அழுத்தம்(BP) தேவையா?

ரத்த அழுத்தம்(BP) இருந்தால்தான் அது ஆரோக்கியமான உடல்.
 அந்த ரத்த அழுத்தத்தை மருந்து மாத்திரை கொண்டு அடக்கி வைப்பது அந்த உடலுக்கு கேடு.
 நாம் உண்ட உணவு செரிமானமாக ரத்த அழுத்தம் தேவை. நடப்பதற்கும் ஓடுவதற்கும் ரத்த அழுத்தம் தேவை . உடலில் உள் உறுப்புகளில் ஏற்பட்ட தொந்தரவுகளை சரி செய்ய ரத்த அழுத்தம் தேவை. ஏதாவது அடிபட்டிருந்தால் அந்த இடத்தில் உள்ள தொந்தரவை சரி செய்வதற்கு ரத்த அழுத்தம் தேவை . கண்ணில் ஏதாவது தொந்தரவு இருந்தால் அதை சரி செய்வதற்கு ரத்த அழுத்தம் தேவை. மூட்டுகளில் சேரும் கழிவுகளை வெளியேற்ற ரத்த அழுத்தம் தேவை. நுரையீரலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு ரத்த அழுத்தம் தேவை. இப்போ சொல்லுங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் தேவையா?
@selvaraju
9715092335

உணவு பற்றிய அடிப்படை புரிதல்

உணவு பற்றிய அடிப்படை விதிகள் :

 நிலம் :
1. நன்றாக பசித்த பிறகு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. தண்ணீர் குடித்த உடனே உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது தண்ணீர் குடித்த பிறகு குறைந்தபட்சம் 10 நிமிடமாவது ஆக வேண்டும்.
3. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. சாப்பிட்ட பிறகு குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு பிறகு தான் தண்ணீர் பருக வேண்டும்.
4. சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும் வரை அமர்ந்து தான் இருக்க வேண்டும் உடனே செயல்படக்கூடாது.
5. சாப்பிடும் போது கவனம் சாப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். வாயை மூடி சாப்பிட வேண்டும்.
6. நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
7. சாப்பிடும் போது தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். வெறும் தரையில் சாப்பிடக்கூடாது தரை விரிப்பு ஏதாவது இருக்க வேண்டும்.
8. இனிப்பு, துவர்ப்பு சுவை அளவாக  சேர்க்க  வேண்டும்.

 நீர் :

1. தண்ணீர் சாப்பிடும் போது எப்பொழுதும் கீழே அமர்ந்துதான் சாப்பிட வேண்டும் நின்று கொண்டு தண்ணீர் பருகக் கூடாது.
2. தண்ணீர் பருகும் போது அண்ணாந்து முழுவதுமாக தண்ணீரை வாயில் கொட்டக்கூடாது. டீ குடிப்பது போன்று சப்பி சப்பி தான் சாப்பிட வேண்டும். அல்லது ஒவ்வொரு விழுங்காக வாயில் ஊற்றி சுவைத்து பிறகு பருக வேண்டும்.
3. ஏதாவது சாப்பிட்ட உடனே தண்ணீர் பருக கூடாது.சிறிது இடைவெளி விட்டே தண்ணீர் பருக வேண்டும்.
4. எப்பொழுதுமே வயிறு முட்ட தண்ணீர் குடிக்க கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக்கொள்ளலாம்.
5. பேக்கிங் செய்யப்பட்ட தண்ணீரை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
6. குளிர்பானங்களையும் குளிர்சாதன பெட்டிகளில் வைத்த தண்ணீரையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
7.RO தண்ணீரையும் தவிர்க்க வேண்டும்.
8. வாய்ப்பு உள்ளவர்கள் மழை நீரை பிடித்து வடிகட்டி குடித்து வரலாம்.
9. தேவையில்லாமல் இயற்கை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.
 10.அவரவர்கள் வாழும் இடத்தில் கிடைக்கக்கூடிய தண்ணீர் சிறந்த தண்ணீர் ஆக இருக்கும்.
11. உப்பு சுவையை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 நெருப்பு :

1. ஒவ்வொருவருக்கும் மிதமான உடல் உழைப்பு அவசியம். உடல் இயங்கினால் மட்டுமே அந்த உடலுக்கான வெப்ப சக்தி கிடைக்கும்.
2. அது உடற்பயிற்சியாகவும் யோகா மாதிரியான பயிற்சியாகவும் இருக்கலாம்.
3. விளையாடும்போது உடலுக்கான வெப்பசக்தி கிடைக்கும்.
4. தோட்ட வேலை செய்வது விவசாயம் சம்பந்தமான வேலை செய்வது ஆடு மாடுகள் மேய்ப்பது இவைகளின் போது உடல் இயங்கும். அப்போது அந்த உடலுக்கான வெப்ப சக்தி கிடைக்கும்.
5. வாய்ப்பு கிடைக்கும் போது தோட்டத்தில் மண்வெட்டி, கடப்பாறை கொண்டு ஏதாவது வேலைகள் செய்யலாம்.
6. ஆடு மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்யலாம்.
7. கசப்பு சுவையை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 காற்று :

1. இரவில் தூங்கும் அறை எப்பொழுதும் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
2. ஒவ்வொருவரும் கண்டிப்பாக எளிமையான சுவாசப் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
3. முழுவதுமாக அடைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
4. தூசிகள் குப்பைகள் நிறைந்த பகுதிகளுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
5. நெகிழி குப்பைகளை நெருப்பில் இட்டு எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
6. பெருங்குடலை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
7. புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
8. இஞ்சி, சுக்கு, மிளகு, ஏலக்காய் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.( உணவில்)

 ஆகாயம் :

1. இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை அனைவரும் கண்டிப்பாக தூங்கியே ஆக வேண்டும்.
2. சக மனிதர்கள் மீது அன்பையும் கரிசனத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
3. சாப்பிட்ட உடனே படுக்கைக்கு செல்லக்கூடாது.
4. பால், வெள்ளை சர்க்கரை தவிர்க்க வேண்டும்.
5. மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
6. புளிப்பு சுவை சேர்க்க வேண்டும். புளிப்பு சுவைக்காக கொடம்புளி, எலுமிச்சை பழம் சேர்க்கலாம்.
7. உடலுக்கு ஓய்வு அவசியம்.
 இந்த ஐம்பூத சக்திகளின் செயல்பாடுகளை புரிந்து பின்பற்றி வந்தால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
 இறுதியாக மனதை சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் வைத்துக் கொள்வது மிக அவசியமாகும்.
 எந்த ஒரு ஆடம்பரத்திற்கும் ஆசைப்படலாம் ஏக்கப்படக்கூடாது. தன்னிடம் இருப்பது சிறப்பு என்ற மனோநிலை தான் மகிழ்ச்சியான நல்வாழ்வை கொடுக்கும்.

 மகிழ்ந்திருப்போம் வாழ்த்துகள்... 💛💛💛💛
@selvaraju
9715092335

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

காமராஜரின் துரோகம்

காமராசர் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து பாராளுமன்றம்வரை திறந்த காரில் பிரதமர் சிறிமாவோவால் அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது சிங்களவர்கள் பூ தூவி வரவேற்றனர். இப்படியொரு வரவேற்பு வேறு எந்த தலைவருக்கும் சிங்கள அரசு வழங்கவில்லை.

தமிழ் மக்களுக்கு விரோதமான சிறிமா சாத்திரி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு காமராசர் காரணமாக இருந்தமைக்கு நன்றியாகவே இத்தகைய வரவேற்பு வழங்கப்பட்டது.

இன்று மீண்டும் காமராசர் ஆட்சியை கொண்டு வருவோம் என சில தமிழ்த்தேசியர் கூறுகின்றனர். அவர்களுக்கு காமராசரின் இந்த துரோகம் தெரியுமா?
 நன்றி. தோழர் பாலன்.