ஞாயிறு, 31 மார்ச், 2024

உணவு அவரவர் விருப்பம்

உணவு அவரவர் விருப்பம்.

ஆனால் உணவு முறை பத்தியங்களுக்கும் கடவுளுக்கும் தொடர்பு படுத்துவது தான் இங்கு வேடிக்கையின் உச்சம்

இந்த உலகில் வாழும் அத்தனை விடயங்களையும் நான்கு வகை யோனிகளின் வழியாக வந்தவாறு பிரித்தார்கள் சித்தர்கள்.

அண்டம்,வித்து, வியர்வை, விந்து

அண்டம்: 
                     முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் அத்தனை உயிர் வகைகளும் "அண்ட" யோனியில் அடங்கும்.

வித்து: 
                     இப்புவியில் உள்ள அத்தனை தாவர வர்க்கங்களும் "வித்து" என்ற யோனியில் அடங்கும்.

வியர்வை: 
                        ஈரப்பதம் மற்றும் நீர் நிலைகளில் உருவாகும் புழுக்கள் போன்ற உயிரினங்கள் "வியர்வை" யோனியில் அடங்கும்.

விந்து:    
                       விந்துவை உள்வாங்கி கரு முட்டையை தன்னுள் வைத்து குட்டி போடும் அத்தனை இனங்களும் "விந்துவில்" அடங்கும் மனிதன் உட்பட.

எனவே அத்தனையும் இந்த நால் வகை யோனிக்குள் அடக்கினார்கள்..

இதில் எல்லையற்ற வரத்தை தரக்கூடிய சுத்த யோனியாக தாவரங்களை பகுத்தனர். இதனாலேயே இதற்கு "தா வரம்" என்று பெயரிட்டனர்.

இந்த கடவுள் வழிபாடுகள் மதங்கள் வேதம் மறைகள் ரகசியம் கோவில் புராணம் கட்டுக்கதைகள் இவை அனைத்தும் மரணம் இல்லாத வாழ்வை நோக்கி சென்ற மனிதர்களின் மறைப்புச் சொற்களே.

எளிமையாக கூற வேண்டும் என்றால் உங்கள் உடல் அழியாமல் மரணம் இல்லாமல் வாழ்வது. உடல் அழிவதற்கு நேரடி தொடர்பு கொண்டது உணவு என்பதால் உணவு முறை பத்தியத்தில் இருந்து தொடங்கினார்கள் கடவுளை.

ஆனால் இந்த பத்தியங்கள் ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கு மாறுபட்டது.

உச்சபட்சமானகுளிர்ந்த மற்றும் உச்சபட்சமான சூடான பிரதேசத்தில் வாழ்ந்த சித்தர்கள் ஜீவ வர்க்க உணவுப் பொருட்களை பற்றி பெரிதாக பத்திய முறைகளை கூறவில்லை. முகமது நபியோ இயேசு கிறிஸ்துவோ ஜீவ வர்க்க உணவு உண்ணாவிதிகளை பற்றி வலியுறுத்தியதாக குறிப்புகள் இல்லை.

தென்னிந்திய சித்தர்கள் குறிப்பாக தமிழ் சித்தர்கள் தாவர யோனி தவிர மற்ற எந்த யோனியும் மனித உணவுக்கு உட்படுத்த கூடாது என்று தீர்க்கமாக பாடுகிறார்கள்.
அத்தனை சித்தர்களுமே புலால் மறுப்பு என்ற தலைப்பை வைத்துப் பாடி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

இங்குள்ள தட்பவெட்ப நிலைக்கும் காலச் சூழலுக்கும் ஒற்றை அறிவு கொண்ட தாவரங்கள் மட்டுமே பாதிப்பை குறைவாக கொடுக்கும்.

அதற்காக தாவரங்கள் உண்டால் இறக்க மாட்டோமா என்றால் அதுவும் இல்லை தாவர உணவுகளை உண்டாலும் இறக்கத்தான் போகிறோம். ஜீவ வர்க்கத்தை விட தாவர வர்க்கத்தில் அறிவு குறைவு என்பதால் புற அறிவு தன்னறிவை குழப்புவது குறைவு என்றே அவர்கள் கூறினார்கள்.

ஆனால் நாமோ இதை உடல் சத்துக்களோடு நிறுத்திக் கொள்கிறோம் அதை தாண்டி இன்று நீங்கள் கூறும் டிஎன்ஏ என்ற அறிவு நிலை உள்ளது.

இதை சில பழங்காலத்து மக்கள் எந்த இறைச்சி தின்றாலும் அந்த இறைச்சியின் தன்மை வந்துவிடும் என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.

தாவர உணவுகளை மட்டுமே உண்டு வாழ்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று சில மடையர்கள் கூறுவது உண்டு. 

உண்மையான கடவுள் நிலையை அடைய முற்படுபவன் உணவு உண்ணும் சுழற்சியில் இருந்து விடுபட்டவனாக இருப்பான் இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் புறஉலகோடு தொடர்பு பட்டிருக்கும் சுவாசத்தினையும் நிறுத்தியவனாக இருப்பான்.

நீங்கள் சுவாசிப்பதால் உங்களுக்கு எண்ண அலைகள் எலும்பும், எண்ணத்தினை செயலாக்கம் உட்படுவீர்கள். செயல் உங்கள் உடலை இயங்கச் செய்யும். உடல் இயக்கம் சத்துக்களையும் இழக்கச் செய்து களைப்பை ஏற்படுத்தும் அப்போதே உங்களுக்கு புற உணவு எடுத்துக் கொள்ளும் பசி என்ற ஒன்று ஏற்படும்.

இதற்கு சித்தர்கள் எரிவதை பிடுங்கினால் கொதிவது தானே அடங்கும் என்ற பழமொழிக்கு இணங்க மூலத்தை நிறுத்தினர் அதாவது தன் சுவாசத்தை நிறுத்தினால் அதிலிருந்து விளையும் எண்ணம் செயல் பசி காமம்  தூக்கம் என அத்தனையும் நிறுத்தி விடலாம் என்று அறிந்தனர்.

இங்கு தாவர உணவு ஜீவ உணவோ எது நீங்கள் உண்ணுபவராக இருந்தாலும் உங்கள் உடலின் தட்பவெப்ப நிலையை வைத்தே உங்கள் உடல் ஆரோக்கியம் வாழ்நாள் என்று முடிவு செய்யப்படுகிறது தட்பவெட்பத்தை உணவு தீர்மானிக்கும் என்பதை நான் கூறி உங்களுக்கு தெரியப் போவதில்லை.

சித்தர்கள் தனது உடலை காயகல்பம் செய்வதற்காக சில பத்திய முறைகளை கடைப்பிடித்தனர் அந்த பத்திய முறைகளின் பாடல்களை அரைகுறையாக படித்துவிட்டு சகஜமான வாழ்க்கையில் இருக்கும் மனிதர்களும் அந்த பத்திய முறை தான் பொங்கலும் புளியோதரையும் உண்பது தான் உயர்ந்த நிலை என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் உங்களை விட முட்டாள்தனம் எதுவும் கிடையாது.

ஏனென்றால் பத்தியத்தில் வாழ்ந்த சித்தர்கள் முப்பு என்ற அருமருந்துனையும் சேர்த்து உண்ணமையால் ஒருவேளை உணவு அல்லது பால் என்ற விதிகளுக்கு உட்பட்டு வாழ்ந்தார்கள். அந்த விரதம் நடைமுறை வாழ்வியலுக்கு உழைக்கும் மக்களுக்கும் ஒப்புமா என்றால் ஒப்பாது.

வெட்டியான் 🙏
Facebook பதிவு. சுடுகாட்டு வெட்டியான் 

மதம்....

*மதம்*

கி.பி 3 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட *களப்பிரர்* படையெடுப்பின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் சித்தர்கள் *வதம்* செய்து, கழுவேற்றி கொலை செய்யப்பட்டனர். "நீ என்ன *தவம்* செய்கிறாயா? என்றும், இனிமேல் எப்படி தவம் செய்கிறாய் என பார்ப்போம்" எனக் கூறி சித்தர்களை *வதைத்து* கொலை செய்ததால் *சித்தரவதை* என்ற சொல் உருவானது.


அன்று வரை உயிர்ப்புடன் இருந்த ஆசீவக *சமயத்தை*(தமிழர்களின் மெய்யான வாழ்வியலை) சித்தர்களின் கழுவேற்றத்திற்கு பிறகு  அழித்து, மதம் என்ற கோட்பாட்டை வேகமாக வளர்த்தெடுத்து வந்தான் யூதன்.

தவம் 👉🏻 வதம் 👉🏻 மதம்


முதல் 1-12 வயதுடைய குழந்தை பருவமான *அஞ்ஞான* (கருப்பு, சனி கோள்,காளி) நிலையிலிருந்து

60 - 72 வயதுடைய *ஞானம்* (வெள்ளை,வியாழன்,அரசுவதியான சரஸ்வதி) நிலையை அடையும் வாழ்க்கையே ஆசீவகம் எனும் தமிழர் சமயமாகும்.

72 வயதிற்கு மேல் *தெய்வநிலை (நிர்வாண நிலை)* அடைவது. உகந்த நிறம் நீர்வண்ணம், ஞாயிறு எனும் சூரியனே இதற்கு ஏற்ற கோள், ஏற்ற தெய்வம் காவிரியம்மன் . தெய்வ நிலை என்பது மனிதராகப் பிறந்து தவம் செய்து, குண்டலினி எழுப்பி *ஜீவ சமாதி*(hibernating Stage) அடைவது, அதாவது *கடம்* என்னும் குண்டானில் வைத்து சமாதி செய்வது (கடம் + உள் = கடவுள்). இந்த நிலையை அடைபவரின் உடல் அழுகாது, இவர்களின் ஆற்றல் காலத்திற்கும் அழியாமல் உயிர்ப்புடன் இப்பிரபஞ்சத்தில் கலந்திருக்கும்.


ஒழுக்கமாக நேர்மறை எண்ணங்களுடன் இக்கடவுளர்களை வணங்கி, வேண்டும்பொழுது இவர்களின் ஆற்றல் நாம் செய்யவிருக்கும் செயலுக்கு துணை புரியும். இதுவே முன்னோர் வழிபாடு என்னும் *தமிழர் சமயமாகும்*, மதம் அல்ல.

இவ்வாறு, முருகனால் உருவாக்கப்பட்ட ஆசீவக சமயமானது ஏழு வண்ணங்களையும், தத்துவார்த்த தெய்வங்களான ஏழு சப்த கன்னிகளையும் (கிறிஸ்தவத்தில் 7 Arc Angels என்பர்), வாரத்தின் ஏழு நாட்களை கொண்ட கோள்களையும், வாழ்க்கையின் ஏழு படிநிலைகளையும் கொண்டது. ஆசீவகத்தின் எண் என்பது *ஏழு*. ஆசீவகத்தின் சமய நூல் *திருக்கூறல்* எனும் திருக்குறள் ஆகும்.

களப்பிரர் காலத்திற்கு பிறகு, தமிழரின் சமயமான ஏழு வண்ணங்களை கொண்ட ஒழுக்கமான வாழ்வு முறையை அழித்து, இன்று ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழும் *LGBT* அமைப்பின் நிறங்களாக இந்த யூத பிண்டாரிகள் திட்டமிட்டு மாற்றியுள்ளனர்.


யானைக்கு *மதம்* பிடித்தால், அந்த பாகனால் கூட அதனை அடக்க  இயலாது என்ற கருத்துண்டு. மதம் பிடித்தால் மனிதன் என்னாவான் ?

கிருத்தவம், இஸ்லாம், இந்து, ஜெய்னம் போன்ற பல மதங்கள் மக்களை அடிமையாகவும், பிரித்தாளவும், கடவுளின் பெயரால் யூதன் உருவாக்கிய போலி அமைப்புக்களே.

*தமிழர்களே!!*

நமது சிவன், முருகன், ராவணன் மற்றும் இந்திரன், கும்பகரணன், கருத்தினன் எனும் கிருஷ்ணன், பஞ்ச பாண்டியர், திருமால், சித்தர்கள் என அனைவரும் மனிதராய் பிறந்து, மக்களின் வாழ்வு மேம்பட குண்டலினி எழுப்பி பல அறிவியல் கண்டுபிடிப்புகளை அளித்து, நிர்வாண நிலையை அடைந்த கடவுட்சித்தர்களே. யூத பிராமணன் எழுதிய கேவலமான கட்டுக்கதைகளை தவிர்த்து உண்மை வரலாற்றை உணர்ந்து, நமது கடவுளர்களை வழிபடுங்கள். அனைவருக்கும் நமது கடவுளர்களின் ஆசி கிட்டட்டும்.

உலக மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ, தமிழர் நிலத்தில் தூய தமிழராட்சி அமைய *ஐந்தாம் தமிழர் சங்கத்தில்* இணையுங்கள்.

தொடர்புக்கு
ஐந்தாம் தமிழர் சங்கம்
+91 88703 53835
+91 63850 44036
+91 73055 73469

வாழ்க வளத்துடன் 🌈

ஞாயிறு, 24 மார்ச், 2024

இந்திரன் விழா

1. ஓம் இலங்கை வேந்தன் இராவணனின் மகன் இந்திரனே போற்றி!!
2. ஓம் வீரபத்திரனின் வீர மகனே போற்றி!!   
3. ஓம் வீரபத்திரகாளியின் மகனே போற்றி!!
4. ஓம் இந்திரசித் எனும் மள்ளனே போற்றி!! 
5. ஓம் யாழ்பாணத்து வேங்கையே போற்றி!!
6. ஓம் ஐந்திர சித்திக்கும் அதிபதி போற்றி!
7. ஓம் வானேகிய வாரணரே போற்றி!!
8. ஓம் லெகிமம் சித்தி பெற்ற யக்கரே போற்றி!!
9. ஓம் அட்டென கரத்துடன் வட்டினை இணைத்து சக்கரம் செய்த சக்கரனே போற்றி!! 
10. ஓம் சக்கர வண்டிகள் பூட்டி வேளாண்மை செய்த சிறந்தோனே போற்றி!!
11. ஓம் ஐந்திர சித்தன் இந்திரனே போற்றி!
12. ஓம் லெகிமத்தால் வானத்தில் மிதந்து மேகத்தை அறிந்த வாரணனே போற்றி!!
13. ஓம் மேகத்தை அறிந்து மழையினைக் கணித்த மழைக் கடவுளே இந்திரா போற்றி!! 
14. ஓம் வானேகி பருவம் கணித்து பயிர் செய்த மேக வாகனா போற்றி!!
15. ஓம் சாக்கா காலந்தெறி தந்த சக்கரத்தானே இந்திரனே போற்றி!!
16. ஓம் வண்டார்குழலி ஈன்ற தவப்புதல்வனே போற்றி!!
17. ஓம் சூர்ப்பனகை என்னும் அழகிய நந்தவனத்தை உடையவனே போற்றி!!
18. ஓம் யாழ்ப்பாண ராவணப் பாண்டியரின் தளபதியே போற்றி!! 
19. ஓம் வானேகி உக்கிரப் போர் புரிந்த உக்கிர சித்தனே போற்றி!! 
20. ஓம் சூழ்ச்சி செய்த ராமனை வென்றவனே வீரனே போற்றி!!
21. ஓம் பேராசைக்கார ராமனைக் கழுத்தில் வானேகி சுட்டு வீழ்த்திய வாரணனே இந்திரனே போற்றி!!
22. ஓம் வந்தேறி ராமனை வதைத்த வானேகிய வாரணனே போற்றி!!
23. ஓம் தமிழினப் பகை வீழ்த்திட உதவும் வல்லோனே போற்றி!!
24. ஓம் மாமுனி மாயன் மகள் ராவதி தந்த வெற்றி மகனே போற்றி!!
25. ஓம் அந்தர லோக நாயகனே போற்றி!!
26. ஓம் அமராவதியின் அமரனே போற்றி!!
27. ஓம் இந்திர லோக இந்திரனே போற்றி!!
28. ஓம் ராவணன் மகனே மேக நாதனே போற்றி!!
29. ஓம் ஐந்திறம் புரிந்த ஐந்திர சித்தனே போற்றி!!
30. ஓம் சித்திரா பௌர்ணமி வசந்த விழா தந்தவரே போற்றி!!
31. ஓம் சித்திரை மாத முழுமதி நாளில் நாயகனே போற்றி!!
32. ஓம் வான வேடிக்கை, வண்ணங்களுடன் வசந்த விழா தந்த வரலாற்று நாயகனே போற்றி!!
33. ஓம் சாக்கா நாட்காட்டி தந்த சாக்காவே போற்றி!!
34. ஓம் தமிழ் குடிகளை ஒன்றிணைத்துக் காத்தவனே போற்றி!!
35. ஓம் இடியாயுதம் தாங்கிய இந்திரனே போற்றி!!
36. ஓம் சொல்லயுதம் தாங்கிய தமிழினம் காப்பானே போற்றி!!
37. ஓம் மின்னலாயுதனே, மீன நாயகனே போற்றி!!
38. ஓம் ராவண இந்திர இரட்டர்களே போற்றி!!
39. ஓம் மண்டோதரி தாயின் மாண்புமிக்க மகனே போற்றி!! 
40. ஓம் மீன ராசி நாயகனே போற்றி!!
41. ஓம் விமானத்தின் நாயகரே போற்றி!!
42. ஓம் வேளாண் விதைத்த மள்ளனே போற்றி!!
43. ஓம் வெள்ளை யானை வேந்தனெ போற்றி!!
44. ஓம் சக்கரம் கண்ட சாக்கா போற்றி!!
45. ஓம் எந்திரம் கண்ட இந்திரனே போற்றி!!
46. ஓம் மருதம் ஆண்ட மன்னா போற்றி!!
47. ஓம் பெருமணல் உலக வாரணன் போற்றி!!
48. ஓம் ஆடற்கலை அரசனே  போற்றி!!
49. ஓம் இசையும் கூத்தும் தந்த இறைவா போற்றி!!
50. ஓம் ஆசீவக அறிவராகத் தமிழர்களுக்கு அருள்பவனே போற்றி!!
51. ஓம் தூயத் தமிழராட்சி தருபவனே போற்றி!!
52. ஓம் உலக மக்களை யூதனிடம் இருந்து காப்பவனே போற்றி!!
53. ஓம் யூத அரம்பர்களை ஒழித்து தமிழ்குடிகளுக்கு அரணாக நிற்பவனே போற்றி!!
54. ஓம் தேவேந்திரகுல வேளாளர்களின் தலைவனே போற்றி போற்றியே!! 
55. ஓம் தமிழ்குடிகள் தமது தொன்மை அறியச் செய்பவனே போற்றி!!
56. ஓம் தமிழர் வீடு பேறு நிலை எய்திட அருள்பவனே பேரமணனே போற்றி!!

வாரணரே !! எங்கள் ஐந்திர சித்தரே போற்றி போற்றியே!!

வியாழன், 21 மார்ச், 2024

தமிழ் அறிவோம் நீர் நிலைகள்.


*தமிழ்...*
*அறிவோம்...*
*தெளிவோம்...*
*பகிர்வோம்.*
°°°°°°°°°

*பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்*

01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. *ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி.

05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

07. *ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

08. *ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

09. *ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

11 *கட்டுந் கிணக்கிணறு* (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

12. *கடல்* - (Sea) சமுத்திரம்.

13. *கம்வாய் (கம்மாய்)* -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

14. *கலிங்கு* - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. *கால்* – (Channel) நீரோடும் வழி.

16. *கால்வாய்* - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

17. *குட்டம்* – (Large Pond) பெருங் குட்டை.

18. *குட்டை* - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

19. *குண்டம்* - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

20. *குண்டு* – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. *குமிழி* – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

22. *குமிழி ஊற்று* – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . *குளம்* - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. *கூவம்* – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

25 . *கூவல்* – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

26. *வாளி* (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. *கேணி* –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

28. *சிறை* - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

29. *சுனை* - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

30. *சேங்கை* – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

31. *தடம்* - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

32 . *தளிக்குளம்* - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. *தாங்கல்* – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

34. *திருக்குளம்* – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

35. *தெப்பக்குளம்* -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

36. *தொடு கிணறு* - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

37. *நடை கேணி* – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

38. *நீராவி* - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

39. *பிள்ளைக்கிணறு* -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. *பொங்கு கிணறு* - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

41. *பொய்கை* - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

42. *மடு* - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

43. *மடை* - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

44. *மதகு* - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

45. *மறு கால்* - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

46. *வலயம்* - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

47 *வாய்ககால்* - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.

*47 வகை நீர் நிலைகளையும் தன் சுயநலத்திற்காக அழித்தால் மனித எதிர் காலம் எங்கே..?*

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

*☂ பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களும் தெரிந்து கொள்ளட்டும்.

மீள்பதிவு:
====
*கவிஞர் கெங்கை குமார்,*

*நுங்கு – மாற்று ஊடக இயக்கம்.*
=======

புதன், 20 மார்ச், 2024

மார்ச் 21 சித்திரை முதல்நாள் 2024

குமரிக்கண்டம் மூழ்கும் வரை , மருத நிலங்கள் இல்லை. வேளாண்மையுடன் கூடிய கடும் உழைப்பு இல்லை.
அதுவரை இந்த நிலாவை ஒட்டிய காலங்களைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருந்தோம்.
அதாவது , அமாவாசை to அமாவாசை 29.5 நாட்கள . அதுவும் மூன்றாம் பிறையை ஒரு திங்களின் முதல் நாளாகவும். வாரத்திற்கு ஏழ நாட்களாகவும் கொண்டு இருந்தார்கள்.
குமரிக் கண்டம் மூழ்கிய போது தான், உணவுத் தேவைக்காக இலங்கையில்  பனங்காடுகளைத் திருத்தி மருத நிலங்களை உருவாக்கி வேளாண்மை முருகப் பெருமானாள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அப்பொழுது தான் தண்டு ஊன்றி நிழல் பார்த்து ஒரு வருசத்துக்கு 365 நாட்கள் ஆகிறது என அவதானித்து திதிகள் உருவாக்கப் பட்டது. 
வளர்பிறை 15 தேய்பிறை 15 என ஒரு மாதத்திற்கு 30 திதிகளாக்கி அதில் 27 திதிகளில் நிலா ஒரு முழுச் சுற்று வந்து விடுகிறது என கணக்குகள் உருவாக்கி அதை திங்கள் x 12 = 324 திதிகள்வருடங்கள் எனவும் 
பூமி சுற்றால்  பௌர்ணமி to பெளர்ணமி க்கு 360 திதிகள் வருகிறது எனவும் அதை ஆண்டுகளாக்கினார்கள். இதற்கு 354 நாட்கள் ஆகியது. 360 திதிகள் என கணக்கிட்டார்கள்.
ஆனால் வேளாண்மைக்கு இந்த நாட்காட்டிகள் பொருத்தி வரவில்லை
அதற்காக வானில் 24, ஓரைகளை உருவாக்கி அதில் முதல் ஓரையாக ஆதி ஓரையை வைத்து , திருவாதிரை நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாக்கினார்கள்.
அந்த ஓரை அந்த காலத்தில் காலை 5.30 மணிக்கு மகர ரேகையில் தெற்கில் கதிர்திருப்ப நாளாக  இன்றைய Jan-1-ல் உதித்தது.
அந்த திருவாதிரை உதையத்தை சித்திரை - 1 - ஆக கொண்டாடினார்கள்.

இப்படி திருவாதிரையைத் தான் மையமாகத் கொண்டு வருசஙகள் ஒடிக் கொண்டு இருந்தது.
வருசங்கள் ஓட ஓட திருவாதிரையும் நகர்ந்து கொண்டே வந்தது. ஒவ்வொரு 60 வருசங்களுக்கு ஒரு முறை அந்த திருவாதிரை மகர ரேகை தெற்கு கதிர் திருப்ப நாளிலிருந்து ஒவ்வொரு நாளாக அதிகமாகிக் கொண்டே வருவதை அவதானித்தார்கள்.
அது சூரிய சுற்றால் நிகழ்வதாக இரண்டாம் தமிழ்ச சங்கத்தில் ஆய்றது அறிந்து கொண்டார்கள்.
ஒவ்வொரு வருசத்துக்கும் 370 திதிகள் ஆவதை ஆவணப்படுத்திக் கொண்டே வந்தார்கள்.
இப்படியே தெறகே கதிர் திருப்ப நாளிலிருந்து ஒவ்வொரு நாளாக அதிகமாகிக் கொண்டே சமநாளையும் அடைத்தது.
அதுவரை வானத்தை 27 நட்சத்திரங்களாக பிரித்து காலத்தை கணித்தவர்கள் சூரிய சுற்றையும், கருமைய நகரவையும் ஆய்நது  வானத்தை 12 ராசிகளாக பிரித்தார்கள்.
இதற்கு இடையில் 5400 ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டாம் ஊழியில் பூம்புகார் மூழ்கிய போது இரண்டாம் தமிழ்ச்சங்கம் இருந்த கபாட புரமும் மூழ்கியது. எனவே தமிழ்ச் சங்கத்தை பொதிகை மலைக்கு மாற்றினார்கள்.
அங்கிருந்து மதுரைக்கு மாற்றினார்கள்.
5000 வருடங்களுக்கு முன்னரே மதுரை நகரத்தை உருவாக்கி மூன்றாம் தமிழ்ச்சங்கம் சீரும் சிறப்புமாக மதுரையில் நடத்தினார்கள்.
3600 ஆண்டுகளுக்கு முன்னர் தான் அந்த ஆதி ஓரை அதாவது சித்திரை - 1 எனும் வருசப்பிறப்பு சமநாளையும் தாண்டி 30 நாட்கள் கடந்து ஏப்ரல் 21 -க்கு வந்திருந்தது.
அப்பொழுது இங்கிருந்து ஆண்டு கொண்டிருந்த திருமாலால் சித்திரை - 1 க்கு உண்டான தகுதிகள் இப்படி ஆதி ஓரையில் உள்ள திருவாதிரையை கணக்கில் கொண்டால் பருவங்கள் மாறிக் கொண்டு இருப்பதை அவதானித்து
வானில் 12 ராசிகள் உருவாககப் பட்டது. 
அதில முதல் ராசியாக சிவனின் நினைவாக ரிதப ராசி உருவாககப் பட்டது..முருகனின் நினைவாக கார்த்திகை நட்சத்திரத்தில் சித்திரை - 1 சம நாளில் இருந்து ஆரம்பிக்கப் பட்டது.
அது ஒவ்வொரு 60 சுழல் ஆண்டுகளில் நகர்ந்தால் சூரியன் ஒரு ராசியை கடந்தால் அதாவது சமதானில் இருந்து 30 நாட்கள கடந்தால் மீண்டும் அதை சமநாளுக்கு மாற்றி அடுத்த ராசியை முதல் ராசியாக்கும் உத்தியை திருமால உருவாக்கினார்.
அப்படி 1800  ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு 60 ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு நாளாக 30 நாட்களைக் கடந்து இப்பொழுது ஏப்ரல் 21-ல் முருகன் நினைவாக உருவாககப்பட்ட அசுவினியை முதல் நட்சத்திரமாக கொண்ட மேச ராசி உதிக்கிறது.
இந்த 2020 மார்ச்சுடன் 30 நாட்களைக் கடந்து விட்டது. 
இப்பொழுது சமநாளில் மீனராசி தான் வானில் காலை 5.30 மணிக்கு சமநாறன்று எழுகிறது.
எனவே 2020 மார்ச் 22 லிருந்து சித்திரை -1 ஐ மாற்றினோம்.
நான்கு ஆண்டுகள் கடந்து விட்டது.
பஞ்சாஙகம் உருவாக்கும் பணியில தொடர்ந்து பலவித ஆய்வுகளுடன் சென்று கொண்டுள்ளது. 
இன்று சமநாள் கடந்து சித்திரை  - 1 வருசப்பிறப்பாக மீனராசியில் பிறந்துள்ளது. அனைவருக்கும் சித்திரை - 1 வருசப்பிறப்பு நல் வாழ்த்துக்கள்.
ஆழியார்.திரு.ரவிச்சந்திரன்
விண்ணியலும் வாழ்வியலும்.

செவ்வாய், 19 மார்ச், 2024

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ஜாதி ஒழிப்பு?

*தமிழ் நாட்டில் மட்டும் ஏன் சாதி ஒழிப்பு ?*

தமிழர்கள் தான் உலகின் முதல் குடி. உலகின் பிற மக்கள் அனைவரின் மூலமும், தமிழிலிருந்தே கிளைத்தவை. குடிகளில் தான் தமிழர்களின் வரலாறே பொதிந்துள்ளது. *ஐந்திணை* வாழ்க்கையை மேற்கொண்ட தமிழ் குடிகள், முதன் முதலில் தாங்கள் வாழ்ந்த நிலத்தின் பெயரால் தங்களை அழைத்துக்கொண்டனர். பின் தாங்கள் செய்த தொழில், வரலாற்றுச் சம்பவங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.

மலைத்தொடர்கள் வரி வரியாய் நீளமாக இருப்பதால் மலைத் தொடர்களுக்கு வரை என்று பெயர். *வரை* எனும் மலைத் தொடரில் வாழ்ந்த மக்கள் தங்களை *வரையர்* என அழைத்து நாளடைவில் *பறையர்* என்றானது. இது *குறிஞ்சி* திணைக்கான பொதுப் பெயராக இருந்தது. இவர்களில் கல்வியை போதித்து சித்தர்களைப் போல் மக்களை வழி நடத்தியவர்கள் *குறவர்* என்றும், அரச மரபை சேர்ந்தவர்கள் *நாடார்* என்றும், வேட்டையாடுவதை மட்டுமே தொழில் என்றிருந்தவர்கள் *வேடுவர்* என்றும், இரும்புருக்குபவர், பறை செய்பவர் என இன்னும் பல தொழில் சார்ந்த குடிகள் *குறிஞ்சி நிலத்தில்* இருந்தன.


*முல்லை* எனும் காடும், காடு சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் பொதுப் பெயர் தான் *கடம்பன்*. இவர்கள் காட்டில் இருக்கும் கடம்ப மரத்தின் பெயரால் அழைக்கப்பட்டனர். *ஆயர்* எனும் மாடு மேய்ப்பவர்களும், *கோணார்* எனும் ஆடு மேய்ப்பவர்களும், தோல் கருவி செய்வோர், கூத்தாடிகள் என்று பற்பல தொழிற் குலங்கள் ஆதியிலேயே இருந்தன.


*நெய்தல்* எனும் கடலும், கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் பொதுப் பெயர் தான் *துடியன்*. இவர்களில் மீன் பிடிப்பவர், முத்தெடுப்பவர், கப்பல் கட்டுபவர், மீன் வலை தயாரிப்பவர் போன்ற எண்ணற்ற தொழில் குலங்கள் ஆதியிலேயே இருந்தன.


*மருதம்* எனும் வயலும், வயல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் பொதுப் பெயர்தான் *பாணன்*. மருத நிலத்தில் உடல் உழைப்பு அதிகம் தேவை என்பதாலும், களைப்பு தெரியாமல் இருக்க பாட்டுப் பாடிக்கொண்டே பணி செய்ததால் பாணன் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களிலும் *தச்சர், குயவர், கொல்லர், நெசவர்* என நூற்றுக்கணக்கான குலங்கள் ஆதியிலேயே இருந்தன.

திணைக்கேற்ப மற்றும் தொழிற்கேற்ப தமிழரின் பண்பாடுகள் வெவ்வேறாகவே இருந்தது.

*இந்த தொழில் குலங்கள் அனைத்தும் எப்படி சாதிகளாயின என்று இப்போது காண்போம்*

தென்னிந்தியா கொடிய வெப்பமண்டலமோ அல்லது குளிர்ந்த பகுதியுமோ அல்ல. கொடிய வெப்பமண்டலத்தில் வாழும் *ஆப்பிரிக்கா* மக்கள் எந்த தொழில் செய்தாலும் *கருப்பாகவும், சுருட்டை முடியுடனுமே* காட்சி அளிப்பார். அதாவது தொழில் சார்ந்த உருவச்சாயல்கள் அவர்களிடம் பெரிதாக இல்லை.

அதே போல, கடும் குளிர் பிரதேச இடங்களில் வாழும் மக்கள் எந்த தொழில் செய்தாலும் வெண்மை நிறத்துடன் காணப்படுவர். இவர்களிடமும் *தொழில் சார்ந்த சாயல்* பெரிதாக இல்லை.

ஆனாலும், இந்த இருசாராரிடமும் *தொழில் குலங்களும் அது சார்ந்த குலப்பெயர்களும் உண்டு.*

சான்றாக 
Adam *Smith* (Metal work Tradition)
Elizabeth *Taylor* (Cloth Work Tradition)
Sarah *Carpenter* (Wood Working Tradition)
Evan Regland *Farmer* (Farm work Tradition)
Rachael Leigh *Cook*(Cooking Tradition)

அங்கெல்லாம் தொழில் குலங்களுக்கு, தொழில் சார்ந்த சாயல்கள் இல்லை எனினும், தங்களை தமது தொழிற் குலங்களிலேயே இன்றும் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.


ஆனால் இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தொழில் சார்ந்த சாயல்கள் உருவாகும் தட்பவெப்ப சூழல் இருக்கின்றன. இது தான் இந்த நிலத்தின் *தனித்தன்மை.*

நாள்தோறும் கடும் வெயிலில் பணியாற்றும் உழவர்களும், மீனவர்களும் மிகவும் *கருப்பாக* இருப்பர்.
நாள்தோறும் நிழலில் பணியாற்றும் வணிகர்களான தச்சர், கொல்லர், குயவர், நெசவர், வாணிப செட்டியார்கள் போன்ற எண்ணற்ற சாதிகள் கருப்பும் இல்லாமல், வெண்மையும் இல்லாமல் *மாநிறமாக* தோன்றுவர். அரண்மனையில் வாழும் அரச குடும்பங்கள் சற்று வெண்மையாகவும் இருப்பர். எனவே, இந்தியாவில் தொழில் சார்ந்த, உடல் வண்ணப் பன்மைத்தன்மை, இயற்கையாகவே அமைந்திருந்தது.

உழவர்கள் கருப்பாக இருந்தாலும் கூட, அவர்கள் நில உடைமை கொண்டிருந்ததாலும், வணிக சாதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கிய பெருங்குடி என்பதாலும், இவர்களைச் சார்ந்தே வணிகர்கள் வாழ்ந்ததாலும், உழவர்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தது.

இதை உண்மை என்று நிறுவும் சான்று தான்.

*உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்*
*தொழுதுண்டு பின் செல்பவர்*

என்ற குறள்.

எனவே, இங்கு *யூதன்* வருவதற்கு முன்பு, பல நிற மக்கள் வாழ்ந்தாலும், நிறத்தால் ஏற்றத்தாழ்வு நிலவவில்லை.

*கி.பி 3ஆம்* நூற்றாண்டில் ஏற்பட்ட *களப்பிரர்* படையெடுப்பின் போது தான் பல்லாயிர தமிழ் சித்தர்கள் *கழுவேற்றி* படுகொலை செய்யப்பட்டனர். அதனால், சித்தர்கள் நடத்திய *பொதுக்கல்வி* முறை அழிந்து, பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களிடமே *தொழிற்கல்வி* கற்க நேர்ந்ததால், செய்தொழில் அனைத்தும் கடந்த 1500 ஆண்டுகளாக, *குடும்பத் தொழிலாக* மாறின.
இதனால், தொழில் சார்ந்த பண்பாடுகள் இறுக்கம் பெற்றன. ஒரே தொழிலில் ஈடுபட்ட குடும்பங்களுக்குள்ளேயே மண உறவுகள் ஏற்பட வேண்டிய இன்றியமையாத தேவை ஏற்பட்டது.


மாற்று குலங்களில் பெண் எடுப்பது தொழிலுக்கோ, பண்பாட்டிற்கோ ஒத்துவராமல், குடும்பங்கள் சீரழிந்தன.
எனவே, ஒரே குலத்திற்குள் நிகழும் *அகமண உறவுமுறை* உண்டானது. இதனால், சாதிய அமைப்பு மேலும் இறுக்கம் பெற்றது. ஆனாலும் சாதிகளுக்குள் பகையோ, பிறப்பு வழி ஏற்றத்தாழ்வோ இருந்ததில்லை. எனவே, சமூகம் முறையாகவும், அமைதியாகவும் ஒருவரையொருவர் மதித்துமே இயங்கிக் கொண்டிருந்தது.


தென்னிந்தியாவில் யூதர்களின் குடியேற்றம் *உடுப்பியில்* ஏற்ப்பட்டது. யூதர்களின் வம்சாவழித் தொழில் *வணிகம்* தான். இவர்களுக்கும் உடலுழைப்பிற்கும் எக்காலத்திலும் தொடர்பிருந்ததில்லை. வந்தேறிகளான இந்த யூதர்கள் உழைக்காமல் வாழும் வழிகளை கண்டுணர்ந்து, கோயில்களில் *பூசாரிகளாக* இருப்பதே தமக்குச் சரியானது என்று முடிவு செய்தனர். யூதர்கள் உலகில் எங்கு சென்றாலும் அந்தந்த மண்ணின் மக்களை *அடிமைப்படுத்தியே* வாழும் இயல்பு கொண்டவர்கள். நாடோடிகளான இவர்கள், மண்ணின் மக்களை அடிமைப்படுத்த வேண்டுமானால், சமூகத்தைப் பிரித்தாள வேண்டும் என்ற தத்துவத்தை கரைத்துக் குடித்தவர்கள்.


இந்த மண்ணில், மக்கள் பல வண்ணங்களில் இருந்தது இவர்களுக்கு பெரிய சாதகமாக இருந்தது.

1. வேளாளர்கள் கருப்பாக இருந்தனர்.
2. வணிகர் மாநிறமாக இருந்தனர்.
3. வந்தேறிகளான இவர்கள் வெள்ளையாக இருந்தனர்.

இவர்கள் வந்த காலம் மன்னராட்சி என்பதால், மன்னர்களையும் உள்ளடக்கிய *நால்வர்ணக்* கோட்பாட்டை முன் மொழிந்தனர்.

அதன் படி கருப்பாகவும், கடின உழைப்பாளியாக இருந்த வேளாளர்கள், *சூத்திரர்* என்ற இழிவான கடைசி சாதியாகவும், வெள்ளையாய் இருந்த யூத வந்தேறிகளான இவர்கள் *பிராமணன்* என்ற உயர் சாதியாகவும், மாநிறமாக இருந்த வணிகர்களை *வைசியர்* என்ற இடைப்பட்ட சாதியாகவும் பிரித்தனர். அதிகார மையத்தில் இருந்த அரச குடும்பங்கள், வணிகர்களுக்கு மேலாகவும், பிராமணர்களுக்கு கீழாகவும் *சத்திரியர்கள்* என்று பெயர் பெற்றனர்.

நிறத்தின் அடிப்படையில் சாதிகளை பகுத்து, அதே நிறத்தின் அடிப்படையில் *படி நிலை தீண்டாமையும்* முன்மொழிந்து கட்டாயப்படுத்தினர்.

அதாவது கருத்த சூத்திரர்கள் தமக்கு மேலுள்ள சாதிகளான வணிகர், அரசர், பிராமணர்களை தீண்டக் கூடாது.
வணிகர்களோ அரசர் மற்றும் பிராமணர்களை தீண்டக் கூடாது. அரசர்கள் பிராமணர்களை தீண்டக் கூடாது.

இந்த படிநிலைத் தீண்டாமையை ஆழ்ந்து சிந்தியுங்கள். பிராமணரை மட்டும் இந்த மூன்று சாதியினரும் தீண்டக்கூடாது என்றிருந்தால், இந்த மூன்று சாதியினரும் பிராமணனுக்கு எதிராக அணிதிரண்டிருப்பார்கள். படிநிலை தீண்டாமையை திணித்ததால் தான் சமூகம் நிரந்தரமாகக் கூறுபோடப்பட்டது.


இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை கடவுளின் பெயரால் *மனுதர்மம்* என்ற நூலில், ஒவ்வொரு சாதிக்குமான கட்டுப்பாடுகள், கடமைகள், உரிமைகள் என்று எழுதி அரசர்களின் துணையுடன் தீவிரமாக அமல்படுத்தினர்.

இதன்படி, படிநிலைத் தீண்டாமைக்குப் *பழக்கப்படுத்தப்பட்ட* இந்த மண்ணின் மக்கள் ஒருபோதும் ஒன்று சேர மாட்டார்கள். வந்தேறி யூதர்களை ஒன்று திரண்டு எதிர்க்கமாட்டோம் என்பதே அவர்களின் திட்டம்.

யூதர்களின் சூழ்ச்சிக்கு நம் மன்னர்கள் எளிதாக துணை போனார்கள் என்று எண்ண வேண்டாம். யூதர்கள் உலகிலேயே மிகக்கொடிய *சதிகார இனம்*. அவர்களே இன்றைய *இல்லுமினாட்டிகள்* கூட. ஆனால், ஆதிகால இந்திய மக்களுக்கு சதி செய்வது என்றால் என்னவென்றே தெரியாது. பல நூறு ஆண்டுகளாக சதி செய்தே மனுதர்மம், இங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.


*1300ஆம் ஆண்டுகளில் வடுகத் தெலுங்கர்களைக்* கொண்டு, உடுப்பி யூத பிராமணன் *ஆதி சங்கரனால்* உருவாக்கப்பட்டது தான் *விஜயநகர அரசு.* இவர்களின் மூலமே தமிழகத்தில் மனுதர்மம் செயலுக்கு வந்தது.

இவர்கள் தமிழகம் முழுவதையும் கைப்பற்றி, வேளாளரின் நிலங்களைப் பிடுங்கி தமதாக்கிக் கொண்டு, வேளாளரை நிலமற்ற தினக்கூலிகளாக்கினர்.

இதுவரை வேளாளரை நம்பி வாழ்ந்த வணிகக் குலங்கள், இப்போது *தெலுங்கு ஜமீன்களை* நம்பி வாழ்ந்தனர். வேளாளரின் சமூக அந்தஸ்து பெரும் வீழ்ச்சியை சந்தித்து, பல நூற்றாண்டுகளாக வறுமையிலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. மனு தர்மத்தின்படி, சூத்திரன் பொருள் சேர்க்கக்கூடாது. இதனால், தமது நிலத்தை இழந்த வேளாளர்கள், மனு தர்மத்தின் ஆதிக்கத்தினால் பொருளாதார பலமில்லாதவர்களாக, தொடர்ந்து அடிமையாக்கப்பட்டதால், பிராமணனுக்கும், தெலுங்கனுக்கும் எதிராக அணித்திரள முடியாமல் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாகவே வாழ்ந்தனர்.

இப்படியாக, வண்ணத்தால் படி நிலைகளாக பிரிக்கப்பட்ட மக்களின் பொருளாதார பலமும் அதே படிநிலைப்படியே நிர்வகிக்கப்பட்டது.

இதற்கிடையில் *1600களில்* வணிகத்திற்காக வந்த *வெள்ளையர்கள்* சிறிது, சிறிதாக இந்திய ஆட்சியை 1800களில் கைப்பற்றினர். வெள்ளையரும், யூத பிராமணரும் *ஒரே குலம்* என்ற புரிதல் எட்டியதால், வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் *பிராமணர் ஏற்றம்* பெற்றனர்.

இந்த ஏற்றம் ஒரு கூட்டு சதியாக உருப்பெற்று, இந்திய விடுதலை எனும் பித்தலாட்டத்தால், பல மொழிவழி தேசியங்கள், அதாவது இன்று சனநாயகம் என்ற பெயரில் பிராமணனின் அடிமையாக, இந்தியா என்ற பொய் தேசத்தில் வாழ்கின்றன. இந்த இந்தியநாடு உடையாமல் பாதுகாக்கவும், அதில் பிராமணரே கோலோச்ச *RSS* என்ற *ரகசிய அமைப்பை* வெள்ளைக்காரனே உருவாக்கினான்.


அதே வெள்ளைக்காரன் தான் தமிழர்கள் ஒருபோதும் மேலெழாமல் பார்த்துக் கொள்வதற்காக, தமிழகத்தின் வந்தேறி ஆளும் வர்க்கமானத் தெலுங்கர்களை கொண்டு, *சுயமரியாதை இயக்கம்* எனும் *ரகசிய அமைப்பை* உருவாக்கிச் சென்றான். அதுவே இப்பொழுது *திராவிட இயக்கமாக* பரிணமித்துள்ளது.

RSS இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் சுதந்திரத்திற்கு சற்று முன்பு, அதாவது *1925 ல்* உருக் கொண்டன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.


ஆக, சாதிகள் என்பது தொழில் குலங்களே என்பதும், இந்தியாவில் உள்ள தட்பவெப்ப சூழலால் தொழில் குலங்களுக்குள், தொழில் சார்ந்த வண்ணச் சாயல்கள் உருவாகினவென்றும், வண்ணச் சாயல்கள் உருவானாலும் பிறப்பு வழி ஏற்றத்தாழ்வு இருந்ததில்லை.

இந்த வந்தேறி பிராமணன் அதே வண்ணச் சாயல்களைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தை படிநிலை தீண்டாமையோடு கூடிய சாதிகளாக பிரித்தாண்டான் என்பதே உண்மை. அதை தமிழகத்தில் அமல் படுத்தியது வந்தேறி திராவிட தெலுங்கர்களே.

இதனை அமல் படுத்தியது மட்டுமில்லாமல், வந்தேறி தெலுங்கர்களை நாம் இனங்கண்டு விடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட கருத்தியல் தான் *சாதி ஒழிப்பு*. தமிழ் சாதிகளை ஒழித்தால் தானே வடுகத் தெலுங்கன் நம்மையும், நம் மண்ணையும் ஆள முடியும். இதற்காகவே பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடுவது இழிவு என்ற பரப்புரையை தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக செய்தான்.

*தமிழர்களே!!*

சாதி ஒழிப்பு பேசுபவன் அயோக்கியன்!!
சாதி ஒழிப்பு பேசுபவன் தமிழின துரோகி!!
சாதி ஒழிப்பு பேசுபவன் இந்த வந்தேறி யூத பிராமணன் மற்றும் திராவிட தெலுங்கனின் வம்சாவழிகள்!!
இவர்கள் தமிழர்களின் பகையே!!
சாதியை ஒழிப்பது என்பது தமிழனை அழிப்பதற்குச் சமம்!!
சாதி ஒழிப்பு என்பது தமிழ்த்தேசியதிற்கே எதிரானது!!

படைப்பு
*ஐந்தாம் தமிழர் சங்கம்*
*73055 73469*
*88703 53835*
*63850 44036*

வாழ்க வளத்துடன்🌈

சனி, 16 மார்ச், 2024

காயகல்பம்

காயகல்பம்
---------------------

காயகல்பம் என்பது ஒரு மருந்து மட்டுமல்ல, ஒருவகை பயிற்சியும் கூட என்று அடிக்கடி எங்குரு 16 கவர்ணகர் கனகசுப்புரத்தினம் ஐயா அடிக்கடி சொல்வார்.

காயகல்பம் பயின்றால் நிச்சயம் உங்கள் முக ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும். காயகல்பம் ஆயுள் காக்கும் ஒரு அற்புதப் பயிற்சி. நம்மை என்றும் இளமையுடன் வைத்து இருப்பதுடன், நாம் விரும்பும் வரை நம் ஆயுளை நீட்டிக்கவும் உதவுகிறது. சித்தர்கள் சொல்வார்களே மரணமில்லா பெருவாழ்வு, காயகல்ப பயிற்சியினை கர்மமே கண்ணாக செய்தால் சாத்தியம் .

இன்று கல்யாணம் ஆனவர்களுக்கும் சரி. கல்யாணம் ஆகாதவர்களுக்கும் சரி பொதுவான சவால் பாலியல் உணர்ச்சிகள். கல்யாணம் ஆகாதவர்களுக்கு தூண்டுதல் சில தவறான செயல்களுக்கு அடிக்கோள்கிறது. கல்யாணம் ஆனவர்களுக்கும் பல நேரம் முழுமையான ஈடுபாடின்மை, (Pre Ejaculation & Post Ejaculation) போன்று வேறு ஏதேதோ குறைபாடுகளோ வருகிறது. பாலுணர்வு இயற்கையான தூண்டுதல். அதனை இயற்கையாகவே நெறிப்படுத்த முடியும்.அத்தகைய யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம்.

காயகல்பம் என்பது எல்லோரும் மருந்து மட்டுமேன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது மருந்து மட்டுமல்ல... ஒரு உடற்பயிற்சியும் கூட... நம் தமிழ் நாட்டில் வாழ்ந்து, தற்போது சூக்குமாக உலவிக் கொண்டிருக்கும் சித்தர்களின் அற்புத பயிற்சி.

இதன் அடிப்படை என்ன ?

நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. உடலைப் பகுத்துக் கொண்டே வந்தால் செல்கள் தான் அதன் நுண்ணிய பகுதி. செல்கள் அணுக்களின் தொகுப்பு. இந்த அணுக்களில் ஒரு சுழற்சி நடைபெற்று கொண்டே இருக்கிறது. அந்த சுழற்சியின் மூலமே உடல் எங்கும் ஜீவகாந்தம் என்ற சக்தி பரவுகிறது.
வயதாக வயதாக இந்த சுழற்சியின் வேகம் குறையும். அப்போது ஜீவகாந்த உற்பத்தி குறையும். இதனால் நரம்பு மற்றும் தோல்களில் ஒரு தளர்ச்சி ஏற்படுகிறது. இதுவே வயோதிகத்திற்கு காரணமாக அமைகிறது. இந்த தளர்ச்சியை சமப்படுத்தவேண்டும்.

எப்படி ?

மிருதங்கம் என்ற ஒரு இசைக்கருவி இருக்கிறது. அதன் மேல் நார்களால் கட்டப்பட்டு இருக்கும். வாசிக்க வாசிக்க நார்களில் தளர்ச்சி ஏற்படும். அப்போது என்ன செய்வார்கள், அந்த நார்களை இறுக்குவார்கள். அவ்வாறு இறுக்கிய பின்னர் மீண்டும் மிருதங்கத்தில் ஒலி பிரமாதமாக வரும். மிருதங்கம் போன்று நம் நாடி நரம்புகளின் தளர்ச்சியை முறுக்கேற்றவேண்டும். அது இயற்கையாக இருக்கவேண்டும். என்ன செய்யலாம் என்று சித்தர்கள் ஆராய்ந்தனர். குதிரை போன்ற அதிவேக மிருகங்களையும், சீறும் பாம்பின் குணாதிசயங்களையும் கூர்ந்து கவனித்த போது, அவர்களுக்கு ஒரு சூட்சுமம் புலப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த காயகல்பம் என்ற பயிற்சியை வடிவமைத்தனர்.

இப்பயிற்சி இளம் வயதிலேயே ஆன்மிக வாழ்வில் ஈடுபடுபவர்கள் மத்தியில் மட்டும் கட்டாயமாக்கப்பட்டு பயிலப்பட்டு வந்தது. நாளடைவில் அவர்களும் பின்பற்றாமல் மற்றவர்களுக்கும் சொல்லித் தராமல் கிடப்பில் போட்டனர்.
பழங்கால ஓலைச்சுவடிகளை ஆராய்ந்த யோகிராஜ் வேதாத்ரி மகரிஷி இதன் நுட்பங்களை ஆராய்ந்து இப்பயிற்சியை உயிர்பித்து எளிமைபடுத்தினார். அவரது ஐம்பதாவது வயதில் கண்டறிந்த அவர் சுமார் இருபது ஆண்டுகள் இதனை தனியே பழகி, இதில் உள்ள உண்மை நிலை உணர்ந்து பின்னர் மக்களுக்கு கற்பித்தார்.

ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில் பிறந்த வேதாத்ரிக்கு ஐம்பது வயதிலேயே வயோதிகம் தாண்டவமாடத் தொடங்கிவிட்டது. கண்கள் ஒட்டி கிடுகிடுவேன இருந்தார். இப்பயிற்சியை பழக தொடங்கிய நாள்முதல் வேதாத்ரி மகரிஷியின் கண்களிலும், தோல்களிலும்ஒரு பிரகாசம் வரத்தொடங்கியது. அவருக்குள் ஒரு உற்சாகம் எப்பொழுதும் இயங்கி கொண்டே இருந்தது. வயோதிகம் என்பது ஒரு பொருட்டல்ல என்பது போல துள்ளித் திரிந்தார். எழுபது முதல் எண்பது வயதிற்குள் 27 முறை அமெரிக்க பறந்திருக்கிறார். தொண்ணூற்றி ஆறு வயதிலும் முகத்தில் ஒரு சிறு சுருக்கம் இல்லை. மனவளக்கலையை முழுமையாக்கி பல்கலைக் கழகப் பாடமாக்கும் வரை பூமியில் வாழ்ந்தார்.

சமாதி அடையும் முன் குறிப்பால் கூறி, சொன்னது சொன்னபடி இப்பூவுலக வாழ்வை துறந்தார். அதாவது அவர் வந்த கடமையை அவர் முடிக்கும்வரை அவர் மரணத்தை நெருங்க விடவில்லை. காயகல்பம் மரணத்தை தள்ளிப் போட செய்யும் ஒரு ஆற்றல் மிகு யோகம்.

காயகல்பம் அறிவியல் பூர்வமான ஒரு ஆன்மிக யோகப் பயிற்சி. நாம் உண்ணும் உணவு ஏழு தாதுக்களாக அதாவது இரசம், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, மற்றும் சுக்கிலம் என்ற வித்துவாக மாறுகிறது என்பதை நாம் அறிவோம். அவ்வாறு மாறும் ஏழாவது தாது சுக்கிலம். இதனை வீணாக்காமல் உயிர்சக்தியாக மாற்றி மீண்டும் மூளைக்கே திருப்பும் போது வயோதீகம் தள்ளிப் போகிறது, இளமை மீட்கப்படுகிறது என்பதை உணர்ந்தனர். இதன் அடிப்படையில் காயகல்ப பயிற்சியை வடிவமைத்தனர்.

காயக்கல்பத்தில் இரண்டு விதமான பயிற்சிகள் உள்ளன ஒன்று அஸ்வினி முத்திரை என்ற நரம்புக்கு பயிற்சி, இரண்டு ஓஜஸ் என்ற மூச்சுப் பயிற்சி. இதனை காலையில் மூன்று நிலைகளில். மாலையில் இரண்டு நிலைகளில் செய்ய வேண்டும். வெறும் ஆறு நிமிடம் தினம் ஒதுக்கினால் போது உங்கள் ஆயுள் நீட்டிப்பு சாத்தியம்.
சரி கல்யாணம் ஆனவர்களுக்கு என்ன பலன் பார்ப்போம்.

இல்லறவாழ்வில் ஈடுபடும் போது இந்த சுக்கிலம் கழிக்கப்படுவது இயல்பு. எனினும் குழந்தைப் பிறக்கவேண்டுமானால் அதனை உயிர் அணுக்களோடு வெளியாற்றலாம், குழந்தைவேண்டாம் என்று முடிவு செய்த சூழலில் இயற்கையாகவே அதன் உயிர்சக்தியை ஆற்றல் பதங்களாக மாற்றி உடல் முழுவது பரவசெய்து, பிறகு சுக்கிலத்தை வெளியேற்றி இயற்கையாகவே கருத்தரிப்பை தவிர்க்கும் நுட்பமும் காயகல்பத்தில் முடியும். இதனால் இல்லறவாழ்வில் எந்த வித குறைபாடும் ஏற்படாது.

இங்கு ஒரு நுட்பம் இருக்கிறது. அதனை பயன்படுத்தும் போது இயற்கையாகவே பிள்ளைப் பேற்றை கவலையின்றி தள்ளிப் போடலாம். சில பெண்களுக்கு காப்பர்–டி உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை. கருத்தடை மாத்திரைகளால் பக்கவிளைவுகள் வரும் வாய்ப்புகளும் தவிர்க்கப் படுகின்றது.

இல்லற வாழ்வில் ஈடுபடும் போது ஏற்படும் வெளியேறும் குறைபாடுகள், அதாவது Pre Mature edaculation போன்ற பிரச்சனைகள் படிபடியாக நீங்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். பாலிஸிஸ் ஓவரியன் சிண்ரோம் ( Polysis Ovarian Syndrome ) போன்ற பிரச்சனைகள் தீர்வதாக ஆராய்ச்சிகள் மூலம் நிருபணமாகியுள்ளது. கருமுட்டை கோளாறுகள் நீங்கி, குழந்தை பாக்கியம் எளிதில் கிடைக்க உதவுகிறது.

எல்லாருக்கும் அறிவார்ந்த பிள்ளைகள் பிறக்கவேண்டும் என்ற ஆவல் இருக்கும். நமது பழக்க வழக்கங்கள் மூன்றுவிதமான பதிவுகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று சஞ்சிதம் – நம் முன்னோர்களிடம் இருந்து வரும் பதிவுகள். இரண்டு ஆகாமியம் – நாம் பிறப்பெடுத்தது முதல் இன்றுவரை நாம் பழக்க வழக்கத்தால் வந்த பதிவுகள், மூன்று – பிராப்தம் – ஆகாமியமும் , சஞ்சிதமும் கலந்து தரும் விளைவுகள்.

வித்து அணு நீர்ம நிலையில் இருக்கும்போது, தவறான வினைப்பதிவுகள் அதுனூடே இருக்கும். அது கெட்டிப்படும் போது, அத்தகைய தீயப்பதிவுகள் அகன்று வலிமையான வித்துக்கள் மட்டுமே மிஞ்சும். காயக்கல்பம் பயிலும்போது வித்து வலிமைபெற்று அழகான, அறிவான, துறுதுறுப்பான குழந்தை பிறக்கின்றன.
அடுத்ததாக இயற்கையான குழந்தைப் பேறு. எப்படி ஹிப்னோபர்த்திங்கில் இயற்கையான பிள்ளைபேறு சாத்தியமோ அதே போல, காயக்கல்பம் பயின்ற பெண்களுக்கும் சிசேரியன் தவிர்க்கப்படுகிறது.

சரி கல்யாணம் ஆகாதவர்களுக்கும் என்ன நன்மை.?

எங்களுக்கு தானே, நிறையப் பிரச்சனை என்கிறீர்களா? உங்களுக்கு ஒரே பிரச்சனைதான். அதுதான் பாலியல் தூண்டுதல். திருமணத்தை ஆகும்வரை உங்கள் உயிர்சக்தியை சேமிக்க காயகல்பம் ஒரு வரப்பிரசாதம். சுக்கிலம் நிறையும் போது தான்,அது உடலில் தூண்டுதலை அதிகரிக்கச் செய்து, சுய இன்பம் போன்ற செயல்களுக்கு வழிகோளுகிறது.

காயகல்பம் செய்யும் போது இப்படி நிரம்பும் உயிர் சக்தி ஒஜஸ் என்ற பதங்களாக மாற்றப்பட்டு உடல் சக்தியாக மாற்றபடுகிறது. இதனால் இத்தகைய தூண்டுதல்கள் கட்டுப் பாட்டில் இருக்கும். இளைய வயதில் திசை மாறுதல் நிகழாது. அறிவு மட்டுமே முன்னின்று முடிவெடுக்கும். உடலுக்கு இடம் தராது. உள்ளுணர்வு தவறான நடவடிக்கைக்கு தூண்டுதல் தராது.

ஓஜஸ் பதம் மூளையில் நிறையும் போது ஆரோக்கியம் மேம்படும். நினைவு சக்தி அதிகரிக்கும்.படிக்கும்பாடம் விரைவில் மனதில் பதியும். படிக்கும் வேகம் அதிகரிக்கும். எப்போதும் உடலில் ஒருவித இன்பநிலை குறுகுறுவென ஓடிக்கொண்டிருக்கும். முகப்பருக்கள் fail and lovely இல்லாமலே உங்களுக்கு குட் பை சொல்லும்.

வாரம் ஒருமுறை அழகு நிலையம் செல்லாமலே ஒருவித பளபளப்பு உங்களின் முகத்தில் பிரகாசிக்கும்.
நாடி நரம்புகளின் தளர்ச்சிகள் கட்டுபடுத்தப் பட்டு இளமை முறுக்கு எப்போதும் உடலில் இருக்கும்.
இன்னும் பலபல நன்மைகள் உங்களுள் குடி கொள்ளும்.

ஆமாம் சுய இன்பம் நல்லதா? கெட்டதா?

நவீன மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள். அது ஒரு இயல்பான விஷயம். அதனைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. வித்து சக்தி எவ்வளவுதான் வெளியானாலும் மீண்டும் இரத்தம் போல் சுரந்துவிடும். எந்தத் தொலைக்காட்சியை திருப்பினாலும் கண்டிப்பான சித்தப்பா மனோபாவத்தில் பளபளப்பு விளக்கு வெளிச்சத்தில் ஒப்பனையோடு இருட்டு விவகாரங்களைத் திட்டும் இந்த சித்த வைத்தியர்கள் என்ன சொல்கிறார்கள்.
சுய இன்பம் தவறு!

சரி அறிவியல் மற்றும் உளவியல் என்ன சொல்கிறது..நான் யோக பயிற்சி தர சென்றாலும் உளவியல் பயிற்சிக்குச் சென்றாலும் அங்கு வரும் பெரும்பாலானவர்களின் (பெண்களும் தான்) என்னிடம் கேட்கும் சந்தேகம் சுய இன்பம் பற்றியோ அல்லது பாலுணர்வு குறித்தோ இருக்கும். நேரிடையாக கேட்கமுடியாவிட்டாலும் கேள்வி ஒரு துண்டு சீட்டில் வந்து சேரும். அவர்களின் உடல் மற்றும் மனோரீதியான பிரச்சனைகளுக்கு சுய இன்பம் தான் காரணம் என்ற குழப்பத்துடன் பேசுவார்கள்.

சரி சுய இன்பம் சரியா? தவறா?

ஒருவர் சுய இன்பத்தில் ஈடுப்படும் போது வித்து சக்தி வெளியேறி ஒரு பரவச நிலையைத் தருகிறது. ஆமாம்...! வித்து சக்தி என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது?

நம் உயிர் சக்தி அல்லது விந்து அணுவைத் தான் நாம் வித்து சக்தி என்கிறோம். நாம் சாப்பிடும் உணவு ஏழு விதமான தாதுக்களாக மாறுகிறது. அது இரசம்,இரத்தம்,மாமிசம்,கொழுப்பு, எலும்பு,மஜ்ஜை மற்றும் வித்துக் குழம்பு. இந்த வித்து குழம்பு தான் விந்து. இந்த வித்துக் குழம்பு நாளாக நாளாக நிறைந்து, வெளியேற யத்தனிக்கும்போது உடலில் ஒருவித தூண்டுதல் மற்றும் கிளர்ச்சி உண்டாகும்.

தாவணிகளை கண்டால் பட்டாம் பூச்சி பறக்கும். ஆண்களுக்கு வித்து சக்தி உற்பத்தி அதிகரித்து திரவ நிலையில் நிறைந்து, எண்ணத்தில் ஒரு அழுத்தம் ஏற்பட இரவில் கனவில் ஏதோ நிகழ்ந்து நிஜத்தில் உங்கள் உள்ளாடை நனைக்கும். இது இயல்பாக எல்லோரும் எதிர்கொண்ட ஒரு அனுபவம் தான். இதில் யோகிகளும் விதிவிலக்கல்ல. இது இயல்பானது.
சரி! இதற்கு மேல் இந்த அனுபவத்தில் ஒரு சுகத்தை உணர்ந்து அதனை செயற்கையாக செயல்படுத்தி பார்க்க தூண்டும் மனோபாவம்தான் சுய இன்பம்.

நவீன மருத்துவம் சொல்கிறது. இது இயல்பானது தான் என்று!
ஒரு துளி வித்து அணு உருவாக கோடானக் கோடி உயிர்சக்தி தேவைப்படும். இந்த சூழலில், செயற்கையாக வெளியேற்றும் போது உடனுக்குடன் உடல் வித்துக்குழம்பை வெளியேற்றும் அளவிற்கு உயிர் சக்தியை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.வித்தை தேவையின்றி வெளியேற்றுவது உயிர் சக்தியின் இருப்பை வீணாக்குவதுதான்.!

ஒருவன் ஆரோக்கியமான உணவை உண்ணும்போது தான் இந்த ஆரோக்கியமான மாற்றம் நிகழும். உடன் மது, புகை போன்ற பழக்கம் இருந்தால், சாப்பிடும் உணவில் உற்பத்தியாகும் பாதி உயிர்ச் சக்தியில் மது,புகையால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கவே சரியாகும். மீது உயிர்சக்தி என்னதான் முயன்றாலும் வித்து சக்தி நீர்த்துபோன தன்மையிலேயே இருக்கும்.

வித்துசக்தி கெட்டியாக கெட்டியாக உடல் மற்றும் மனவலிமைக் கூடும். வித்து குழம்புதான் ஆரோக்கியத்தின் அடிப்படை ஏன் ஆயுளின் அடிப்படையும் கூட. வித்து எந்த அளவிற்கு அதிகமாக உடம்பில் தங்குகிறதோ அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், சுறுசுறுப்பு, நினைவுத்திறன், மகிழ்ச்சி எல்லாம் நிகழும். உங்களைச் சுற்றி ஒரு ஈர்ப்புத் தன்மை பரவும்.

வித்து சக்திக் குறையும் போது சோம்பல்,அடிக்கடி உடல் அசதி, நினைவு மறதி, உடல் நடுக்கம், நரம்பு தளர்ச்சி, மனதில் குற்ற உணர்ச்சி, கவலை வரும், ஒரு காலத்தில் கவலை மிகுந்து அச்சம் ஏற்படும். இந்த அச்சம் தான் இன்று லாட்ஜில் ரூம் போட்டு லேகிய விற்கும் மருத்துவர்களின் முதலீடு.

தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபடும் போது உயிர்சக்தி நீர்த்துப் போகும். அதாவது திரவத் தன்மை அதிகமாக இருக்கும். ஆனால் அதில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும்.அந்த சூழலில் பிறக்கும் குழந்தைகள் கொஞ்சம் நோஞ்சானாக தான் பிறக்கும். மேலும் நீர்த்துப் போன நிலையில் வாழ்க்கைத் துணையுடன் உறவில் ஈடுபடும் போது விரைவில் வெளியாகி உங்களை அசடுவழியச் செய்யும். ஹி..ஹி...!
இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்... சுய இன்பம் நல்லதா? கெட்டதா?

அடடா! உடனே குழம்பி போய் கவலையுடன் நிற்கவேண்டாம்.
இந்த உணர்வு இயல்பானது. எப்படி சிறுநீர், மலம் கழிப்பது இயல்பானதோ, அதே போன்று பால் உணர்வும் இயற்கையின் தூண்டுதலே. அதனால் தான் ஆண்-பெண் நட்பை திருமண பந்தத்தில் இணைத்தார்கள். அவ்வாறு மிகும் கழிவை வெளியேற்ற, இல்லற பந்தம் உறுதுணை புரிகிறது. அதுவரை பொறுமை காத்தல் நலம். பொறுத்தார் பூமி ஆள்வர். பொறுமையிழந்தால் பொண்டாட்டியை கூட ஆளமுடியாது!

அது எப்படி? என் சூழலுக்கு நான் உடனடியாக திருமணம் செய்ய முடியாது. அதுவரை நான் எப்படி தாக்கு பிடிப்பது?
நான் சும்மா இருந்தால் கூட அது தூக்கத்தில் வெளியாகிவிடுகிறதே என்ன செய்வது? உங்கள் செல்லச் சிணுங்கல் கேட்கிறது.

கவலைவேண்டாம். இது உங்களுக்கு மட்டும் பிரச்சனையல்ல. வீரத்துறவி விவேகானந்தருக்கே இது பிரச்சனையாக இருந்திருக்கிறது. பாலியல் தொந்தரவை கட்டுப்படுத்த முடியாமல் தன் உறுப்புகளை எரியும் நெருப்பில் பொசுக்கிவிட முயற்சித்தார் என்று அவர் வாழ்க்கை வரலாறு புத்தகம் சொல்கிறது.

இதில் இருந்து என்ன தெரிகிறது. பாலியல் உணர்வை கட்டுபடுத்த முடியாது. ஆனால் நெறிப்படுத்த முடியும்.
பாலுணர்வை நெறிபடுத்த ஒரே வழி. நம் மனதை எப்போது ஆரோக்கியமாக அத்தகைய சிந்தனைகளில் விழாமல் வைத்திருப்பது தான். அதற்கு பெரிதும் உதவுகிறது தியானம். அவரவர் விரும்பிய வகையில் ஏதேனும் ஒரு தியானத்தை கற்றுக்கொண்டு பயிற்சி செய்து வந்தால் மனம் ஒருமைப்படும்.
உணவுமுறையில் ஒழுக்கம். உடல் கிளர்ச்சியைத் தூண்டும் உணவு வகைகளை அளவோடு எடுத்துக் கொள்வது அல்லது முற்றிலும் தவிர்த்தல் நலம். (Alcohol Increase the Sexual Desire: But not the pleasure). முட்டை சார்ந்த உணவுகள் புரத நிறைந்துக் காணப்படுவதால் அது உண்ணும் போது தூண்டுதல் அதிகமாக இருக்கும். விவேகானந்தர் புகைப்பதை விரும்பினார். மீன் உணவிலும் பிரியம் கொண்டிருந்தார் என்கிறது அவரின் சரிதை. அதனால் கூட அவருக்கு உடலியல் தூண்டுதல் அதிகமாக இருந்திருக்கலாம்.

உணவிற்கு அடுத்தபடியாக தனிமையை தவிருங்கள். பெரும்பாலும் தனிமையான சூழலில் தான் இத்தகைய எண்ணங்கள் ஏற்படும். எது என்னவென்றாலும், எண்ணத்தின் அடிப்படையில் தான் எல்லா செயல்களும் எழுகின்றன. உங்களுக்கு இச்செயல் குற்ற உணர்ச்சித் தரும் எனில் அதில் நீங்கள் ஏன் ஈடுபடவேண்டும்?

ஒரு சங்கல்பத்தை "இது என் உடலுக்கும் மனதிற்கும் ஒவ்வாத செயல்; இதில் இருந்து விடுபடுவேன்,என் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் காப்பேன்" என்று தினந்தோறும் விழிக்கும்போது எடுத்துக்கொள்ளலாம். இது நாளடைவில் மனதினுள் ஒரு கட்டளையாகவே பதிந்து உங்களைக் காக்கும்.

இன்னொன்றும் இருக்கிறது. அது தான் காயகல்பம் என்றொரு யோகமுறை.
காயகல்ப யோகம் என்ற சித்தர் பயிற்சி உயிர்சக்தியை பாதுக்காப்பதில் உறுதுணைப்புரிகிறது. சிவவாக்கியர் என்னும் சித்தர் காயகல்பத்தின் அற்புதத்தை இவ்வாறு சொல்கிறார்.

"உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தில் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரோ
விருத்தரும் பாலராவார் அருள் தரித்த
அம்மைப்பாதம் அய்யன் பாதம் உண்மையே"

காயகல்ப பயிற்சியின் மூலம் உயிர்சக்தி ஒஜஸ் பதங்களாக மாறும்போது மூப்பு வராது, என்றும் இளமையுடன் திகழ்வர், அதாவது கிழவனும் குமரனாவான் என்பது அதன் சாரம்சம்.

காயகல்பம் பிரம்மசாரிகளுக்கு மட்டுமல்ல இல்லற ஜோதிகளுக்கும் ஒரு வரப்பிரசாதம். வயக்கரா இல்லாமலே அதன் வேலையை காயகல்பம் செய்யும். அதே நேரம் காயகல்பத்தின் இன்னொரு யுக்தி பாலியல் உணர்வை கட்டுப்படுத்தி, வித்துசக்தியை கெட்டிபடுத்தி இளமை நோன்பு காக்கவும் உதவும். உடலில் வித்து சக்தி மிகும்போதெல்லாம் இந்த யுக்தியின் மூலம் கெட்டியாக்கி கொண்டே வரமுடியும். இதன் மூலம் வித்தில் நீர்ப்புத் தன்மை குறைந்து தூண்டுதல் சமன்படும்.

அஸ்வினி முத்திரை, அழகைப் பாதுகாப்பது எப்படி?
எந்நேரமும் சந்தோஷமாய் இருப்பதெப்படி?
இனிய இல்லறத்திற்குப் பத்து யோசனைகள்!
நரைமுடி கருமுடியாய்த் தழைக்க!
                     இதுபோன்ற தலைப்புகளைப் பார்த்தால் உடனே "கிளிக்"கி விடுவோம். "இளமையின் ரகசியம்" என்றால் மட்டும் விட்டுவிடுவோமா? உள்ளே வந்ததற்கு நன்றி. மேலும் படியுங்கள்...
          
பல்வேறு புத்தகங்களைப் படித்திருப்பீர்கள். பல்வேறு ஆலோசனைகளைக் கேட்டிருப்பீர்கள். பார்த்துப் பார்த்து, படித்துப் படித்து, கேட்டுக் கேட்டு எதிலேயும் திருப்தி அடையாமல், எல்லாம் "டுபாக்கூர்". எந்த முறையிலும் இளமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். உங்கள் முடிவுக்கு ஒரு முடிவு கட்டி இதை ஆரம்பியுங்கள். ஓர் எளிய உடற்பயிற்சிமுறை. வியர்க்க விறுவிறுக்கச் செய்ய வேண்டியதில்லை. இதற்கென தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.

 அட.... அப்படி ஒரு பயிற்சி முறையா, என ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம். உண்மைதான். முறையாகச் செய்தால் சிறந்த பலன் கிடைப்பதைக் காண்பீர்கள். அட ஒண்ணுமில்லீங்ணா. குதிரை பாத்திருப்பீங்க. அதோட கம்பீரத்தை ரசிச்சிருப்பீங்க. அது கொள்ளு தின்னும் அழகைப் பருகியிருப்பீங்க. அதன் தோலோட வழவழப்பு, உறுதியைக் கண்டு வியந்திருப்பீங்க. என்னிக்காவது இதன் உடம்புல மட்டும் எப்படி இவ்வளவு பலம் வந்துச்சு, எப்படி இவ்வளவு கம்பீரமாத் தெரியுது அப்படினு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்களா? இரண்டே இரண்டு விஷயங்கள் தான். முதலில், அது தின்கிற கொள்ளு. கொள்ளு சாப்பிட்டால் கிடைக்கும் பலன் என்னவென்றால், உடம்புல இருக்கிற அனாவசிய கொழுப்புகளையெல்லாம் கரைத்துக் காலாவதி ஆக்கிடும். இது முதல் விஷயம். இரண்டாவது, அதன் பின்புறப் பகுதி. மலஜலம் கழிக்கும் பகுதி. அங்கே தான் சூட்சுமமே இருக்கு.

 உடம்புல சகல பாகங்களிலிருந்தும் செல்லும் முக்கிய நரம்புகள் அந்த இடத்தில் தான் முடிச்சுகளாய்ப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. வீணையில் எவ்வளவுக்கெவ்வளவு நரம்புகள் தொய்வடையாமல் உறுதியாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அது எழுப்பும் நாதம் இனிமையாக இருக்கும்.அது போலவே இந்த நரம்புகளின் உறுதிதான், மனிதனோ விலங்குகளோ, அவற்றின் இளமையையும் பலத்தையும் நிர்ணயம்
செய்கின்றன. நரம்புகள் கட்டுறுதி குலைந்துவிட்டால் அவ்வளவுதான். உடல் நைந்துவிடும். அழகிழந்து விடும். அதனால் இந்த நரம்புகளைப் பேணிக் காப்பது அவசியம். வீணையென்றால் திருகாணியை முறுக்கிவிட்டால் போதும். நரம்புகள் முறுக்கேறி விடும். குதிரை என்ன செய்யும்? இப்போதுதான் விஷயத்திற்கு வந்திருக்கிறோம்.

 குதிரையின் பின்பக்கத்தைக் கவனியுங்கள். சுருங்குகிறது… விரிவடைகிறது… சுருங்குகிறது… விரிவடைகிறது… மறுபடி… மறுபடி. அது இப்படிச் செய்யாத நாளே இல்லை. இதனால் நரம்பு முடிச்சுக்கள் தூண்டப்பட்டு நரம்பு மண்டலத்தினூடே மின்சாரம் பாய்கிறது. சக்தி உருவாகிறது. இளமை சக்தி.இது ஒரு அருமையான காயகற்பக் கலை. குதிரையைப் போல நாமும் செய்யவேண்டும். அவ்வளவுதான்.

 இதை யோக மகரிஷிகள் "அஸ்வினி முத்திரை" என்கிறார்கள். சிறு சிறு எளிய ஆசனங்களை உள்ளடக்கி, அதனுடன் இந்த அஸ்வினி முத்திரையும் செய்தால், உடலில் ஒருவித மின்சாரம் பாய்வதை உணரலாம். இதை நன்குணர்ந்த மறைந்த தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் தம் அனுபவத்தின் வாயிலாக இந்த அரிய கலையைப் பயிற்றுவித்தார். இதன் பலனை நீங்கள் ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே உணரலாம். தினமும் மிகச் சரியாக கடைப்பிடித்து வந்தீர்களேயானால் ஒரே மாதத்தில் உங்களிடத்தில் மிகப்பெரும் மாற்றத்தைக் காண முடியும். 

காயகற்ப யோகமென்னும் உயர்சஞ் சீவி
கருத்துடனே செய்துவந்தால் வித்து கட்டும்.
தூயமுறை நரம்பூக்கம், ஓஜஸ் மூச்சு
தொடர்ந்திரண்டும் குருவழியே செய்யச் செய்ய,
போயபிழை கள்போகும்; பிணிகள் நீங்கும்.
புத்துணர்வும், இறையருளும் ஊற்றெ டுக்கும்.
மாயமென வித்தமுத ரசமாய் மாறி
மரணமிலாப் பெருவாழ்வு சித்தி யாகும்.

திங்கள், 11 மார்ச், 2024

அகத்தியர் வைத்தியம்

மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார்.

வாதம் - 84
பித்தம் - 48
கபம் - 96
தனுர்வாயு - 300
சயம் - 7
பெருவயர் - 8
சூலை - 200
கண்நோய் - 96
சிலந்தி - 68
சன்னி - 76
கழலை - 95
சுரம் - 85
மகோதரம் - 7
தலைவீக்கம் - 5
உதிரநோய் - 16
பிளவை - 10
படுவன் - 11
பீலி - 8
உருவசியம் - 5
பேரறிகறப்பான் - 90
கெண்டை - 10
குட்டம் - 20
கதிர்வீச்சு - 3
மதிவட்டை - 5
சோலிநோய் - 16
இசிவு - 6
மூர்ச்சை - 7
வேலிநோய் - 46
மூலம் - 9
கழல்நோய் - 10
கடிவிசம் - 52
கிராணி - 25
பல் நோய் - 76
மாலை கண் - 20
அதிசாரம் - 25
கட்டி - 12
கிருமி - 6
முட்டு நோய் - 30
முதிர் நோய் - 20
சத்தி - 5
கல்லடைப்பு - 80
வாய்வு - 90
திமிர் நோய் - 10
மேகம் - 21
நீராம்பல் - 5
காதுநோய் - 10
விக்கல் - 10
அரோசிகம் - 5
மூக்கறுப்பன் - 10
கடிதோடம் - 500
குத்து வெட்டு - 700
கிரந்தி - 48
பொறிவிடம் - 800
துடிநோய் - 100
பிள்ளைநோய் - 100
குமிழி - 7
விப்புருதி - 18
விசபாகம் - 16
பிரநீர்க்கோவை - 200

மேற்கூறிய வியாதிகளை சோதிக்க மனிதனின் உடலில் 72000 நாடி நரம்புகள் ரத்த குழாய்கள் உள்ளன. மேலும் இதனை சோதிக்க பெருநாடிகள் என்று 10 உள்ளன.
அவையாவன,

1. இடகலை
2. பிங்கலை
3. சுழுமுனை
4. சிகுவை
5. புருடன்
6. காந்தாரி
7. அத்தி
8. அலம்புடை
9.சங்குனி
10. குரு நாடி

மேற்குறியவற்றுள் முக்கிய நாடி,
1. இடகலை :- அபானன் (வாதம்)
2. பிங்கலை :- பிராணன் (பித்தம்)
3. சுழுமுனை :- சமானன் (கபம்) - என்று அறிய வேண்டும்.

அகத்தியர் கவி:
நாடியான் முன்னோர்சொன்ன நற்குறிக்குணங்களாலு
நீடிய விழியினாலு நின்ற நாட் குறிப்பினாலும்
வாடிய மேனியாலு மலமொடு நீரினாலுஞ்
சூடிய வியாதி தன்னைச் சுகம்பெற வருந்தி சொல்லே
சுகம்பெறவங்கமெல்லாஞ் சுருங்கிய குணங்களாய்ந்து
முகங்குறி நாடிமூக்குச் செவிநுத னயனநாடி
அகந்துடி யடக்குநாடி யதுதிசை விடுதிநாடி
உகந்துடி யுந்திநாடி யுண்மையாம் நடைகள்பாரே

- என்று அகத்தியர் நாடிகள் பரிசோதனை செய்யும் முறை பற்றி கூறுகின்றார்.

இதை தவிர கண்ணுக்கு தெரியாத நோய்கள் பல உள்ளன. இதனை இன்றைய விஞ்ஞான உலகத்தில் உள்ள "X-Ray", "C.T Scan", "M.R.I Scan" எந்திரங்களினால் கண்டறியமுடியாத நோய்களாவன:

1. காற்று
2. கருப்பு
3. பேய்
4. பிசாசு
5. பில்லி
6.சூனியம்
7. ஏவல்
8. செய்வினை
9. வைப்பு
10. கழிப்பு
11. மருந்து
12. கண்நேறல்

கைகண்ட அனுபவ மருத்துவம்!

*********************************

( #கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.-

கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!
***********************************

நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத்.
அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."

சில எளிய மருத்துவம்: !!!
***************************

வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.

கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.

டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.

தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.

வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.

ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.

அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.

கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.

கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.

குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.

தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.

ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.

வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.

தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.

பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.

வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.

காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.

கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.

காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)
காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.

பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.

வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.

நாட்டுப்புற மருந்துகள்
நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.

மகளிர் மருத்துவம்
********************

திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :
1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.
2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.
3. சீரற்ற மாதவிலக்கு - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.
4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.
5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.
1. கர்ப்பகால வாந்தி - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.
2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.
3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.
4. தாய்ப்பால் பற்றாக்குறை - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.

ஆடவர் மருத்துவம்
*********************

ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :
1. நீர் பிரிதலில் சிக்கல் - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.
2. மூத்திர எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.
3. விந்து வெளியேறல் - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.
4. ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.
5. வெள்ளைபடுதல் - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.

குழந்தையர் மருத்துவம்
**************************

அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.
1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.
2. சளி - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.
3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.
4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.
5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.

பொது மருத்துவம்
*******************

ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. அந்நோய்கள் பலவாகும். அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :
1. காய்ச்சல் - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.
2. பொடுகுத் தொல்லை - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.
3. பேன் - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.
4. வெட்டுக்காயம் - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.
5. முகப்பரு - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்.

கால்நடை மருத்துவம்
***********************

கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுள் சிலவற்றையும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளையும் கீழே காண்க.
1. புண் புழு - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.
2. ஆட்டிற்கு வயிற்றுப் போக்கு - தேங்காய் எண்ணெய் சிறிதளவைச் சங்கில் எடுத்து ஆட்டுக்குட்டிக்
குப் புகட்ட வயிற்றுப் போக்கு நிற்கும்.
3. கோழிகளுக்கு வயிற்றுப்போக்கு - கோழிகளுக்கு விளக்கெண்ணெயைச் சிறிதளவு கொடுக்கச் கழிச்சல் நிற்கும்.
நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்
பக்க விளைவுகள் இல்லாதது. எளிய முறையில் அமைவது. அதிகப் பொருட் செலவில்லாதது. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக் குணம் தரக்கூடியது. அனுபவ முறையில் பெறப்படுவது. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு முயற்சிகள் செய்துகொள்ள ஏதுவாகிறது. நாட்டு மருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை, பாமரரும் பின்பற்றலாம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக் கண்டறிவது மிக எளிதாகின்றது. உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக அமைந்துள்ளது. உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம் சிறப்பானதாககும்

வியாழன், 7 மார்ச், 2024

தென்னாடுடைய சிவன்

நாம் வணங்கும் கடவுள் சிவன் சுமார் 20000 ஆண்டுகள் முன் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த ஒரு சித்தர். முதன் முதலில் ஒகத்தை( யோகத்தை ) கண்டு பிடித்தவர். அதனால் தான் ஆதியோகி என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பிரபஞ்சம் ( பெரு + பஞ்சம் ( ஐந்து) )ஐந்து மூலக்கூறுகளால் ஆனது என்ற ஐந்து பூத கோட்பாட்டை கண்டு பிடித்தவர்( நிலம், நீர், நெருப்பு ,காற்று, விண்) . அதனால் தான் பஞ்ச பூத கோயில்கள் அவருக்கு உள்ளது. அணுக்களை ஆராய்ச்சி செய்யும் சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆய்வுக்கூடத்தின் முன்பும் நடராஜர் சிலை தான் உள்ளது. நம் வரலாறை அழித்த யூதர்களுக்கு நம் வரலாறு நன்றாக தெரியும்.

சந்திர நாட்காட்டியை உருவாக்கியவரும் நம் ஆதி சித்தர் சிவன் தான். இரண்டு சூரிய உதயத்திற்கு இடைப்பட்ட நேரத்தை அதாவது சூரியன் அடிப்படையில் நாட்கள் மற்றும் இரண்டு பௌர்ணமி அல்லது அம்மாவாசை இடைப்பட்ட நேரத்தை அதாவது சந்திரன் அடிப்படையில் மாதங்களை உருவாக்கி ஆண்டு கணக்கை முதன் முதலில் தோற்றுவித்தவர். அதனால் தான் கால பைரவர் ( வை என்றால் ஒளி, ஒளிருவதால் வைரம் என்ற பெயர் வந்தது. ஒளிரும் சூரியனும் வைரவர் என்று அழைக்கப்பட்டு அதுவே பைரவர்  என்று ஆனது) என்று வணங்கப்படுகிறார். அதற்கு அடையாளமாக தான் தலையில் நிலா இருப்பது போல அவரது வடிவம் உருவக படுத்த பட்டுள்ளது.
சந்திர நாட்காட்டி என்பது மிகவும் பழமையான நாட்காட்டி விவசாயம் செய்வதற்கு அந்த நாட்காட்டி பயன்படாது. விவசாயம் செய்யாத அரேபியர்கள் மட்டுமே இன்றும் சந்திர நாட்காட்டியைப் பயன்படுத்தி வருகிறார்கள். கால பைரவர் வடிவத்தில் சிவனோடு நாயும் இருக்கும் அது அவர் வேட்டையாடியவர் என்பதை நமக்கு சொல்கிறது. மக்கள் முதல் முதலாக மலையும் மலை சார்ந்த பகுதியும் ஆன குறிஞ்சி நிலத்திலேயே வாழ்ந்தனர் குறிஞ்சி நிலத்தில் உள்ள குகைகள் தங்குவதற்கு வசதியாக இருந்ததால். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மலை மகன் தான் நம் சிவன். மலைமகள் ஆன பார்வதி ஒரு உருவக கடவுள் உண்மையில் சிவனின் மனைவி அல்ல. வார் என்றால் மலை, மலையில் வதிப்பவள் வார்+வதி அதுவே பார்வதி ஆகியது. வரை என்றாலும் மலையை குறிக்கும். மலையில் இருக்கும் ஆடு வறைஆடு மலையில் வாழ்பவர்கள் வறையர் அதுவே பறையர் என்றானது. சிவன் பறையர் இனத்தை சேர்ந்தவர்.

முஸ்லிம் மதம் சிவனோடு நெருங்கிய தொடர்பு உடையது. சிவனை வழிபட்டவர்களே ஒரு காலத்தில் அந்த மதத்தை தோற்றுவித்தார்கள்.
ஈச+ லாமா = இஸ்லாம்,
லாமா என்றால் துறவி.

அதனால் தான் சந்திர நாட்காட்டியின் பயன்பாடு இன்றும் முஸ்லிம்கள் இடம் இருக்கிறது.

முதல் தமிழ் சங்கத்தை வைத்து தமிழுக்கு தொண்டாற்றியவர் தான் நம் சிவன். சொற்களை உருவாக்கி மக்களை பேச வைத்ததால் தான் அவர் நா+ தன்= நாதன் என்று அழைக்கப்பட்டார்.
கல் ஆல மரத்து அடியில் தன் சீடர்களுக்கு வேதங்களை கூறியதால் கூறு - குரு என்ற வார்த்தை  உருவாகியது. சிவனே நான்கு வேதங்களையும் தமிழில் எழுதியவர்.அந்த உண்மை வேதங்களை அழித்து பொய்யான வேதங்களை சம ஸ்கிருதத்தில் எழுதிக்கொண்டனர் யூத பிராமணர்கள். சமுத்திர மாந்தன் என்ற கதையில் வரும் ஆலகால விஷம் என்பது சிவன் ஆலமரத்தின் அடியில் அமர்ந்த காலத்தில் எழுதிய வேதங்களையே  மறைமுகமாக குறிக்கிறது. சிவன் எழுதிய வேதங்களையே விஷமாக உருவகப்படுத்தி அதை சிவனே பருகி விட்டார் அதனால் அவருக்கு கழுத்து நீலமாகிவிட்டது அதனால் அவர் நீலகண்டன் என்று ஒரு பொய்யான கதையை யூத பிராமணர்கள் புனைந்து இருக்கிறார்கள். உண்மையில் சிவன் குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததால் அந்த கண்டம் நீரில் மூழ்கியதால் நீரின் நிறம் நீலம் என்பதால் நீலகண்டன் என்ற பெயர் சிவனுக்கு வந்தது. இதுவே அந்தப் பெயரின் உண்மையான காரணம்.

இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தவர் சிவன் அதைத்தான் தனது உருக்கு ( ருக் )வேதத்தில் அவர் சொல்லியிருந்தார்.

விலங்குகளின் தோல் மூலம் தோல் இசைக்கருவிகளை உருவாக்கியவர் சிவன் அதை தனது அதிர்வண ( அதர்வண) வேதத்தில்  சொல்லியிருந்தார்.

அரசியல் பற்றி சாம ( சாம ,தான ,பேத ,தண்டம் ) வேதத்தில் சொல்லியிருந்தார்.

நாட்டியம் முதலான பிற விஷயங்களை யசூர் ( யா என்றால் தெற்கு, யசூர் என்றால் தெற்கத்தி அரசன் என்று பொருள்) வேதத்தில் சொல்லி இருந்தார்.

இந்த உலகம் இன்பம் - துன்பம், நல்லது - கெட்டது, இரவு - பகல் போன்ற இருமை நிலையால் ஆனது என்று இருமை தத்துவத்தை ( Duality concept)போதித்தவர் சிவன்.

தென்னாடான குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததால் அவர் தென்னாடுடைய சிவனே போற்றி என்று வணங்குகிறோம்.

சரி எந்நாட்டவருக்கும் சிவன் எப்படி இறைவன் ஆனார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா.

ஈச+ லாமா - ஈசலமா - இஸ்லாம்
மாலா தான் லாமா ஆனது. லாமா என்றால் சாமியாரை குறிக்கும். 
தலை +லாமா - தலாய்லாமா 

மால் +அய் - மாலை - மாலா

மால் என்றால் கருப்பு , அய் ஆச்சரிய விகுதி. மாலை என்ற வார்த்தை நீண்ட தலை முடியை கொன்ட துறவிகளை குறிக்கும்.

சா +மயிர் அதாவது நீண்ட தலைமுடி கொண்டவர் 
சா+ மயிர்+ ஆர் - சாமியார். நீண்ட கருப்பு முடி தான் மாலை. முடி தோளில் உள்ளது போல் பூ இருந்தால் அது பூமாலை . 

ஈ என்றால் கொடுப்பது ,  ஈசன் என்றால் அதிகம் கொடுப்பவன்.

ஈசா ரா எல் - இஸ்ரேல் ( ரா என்றால் இருட்டு காளியை குறிக்கும். ஈசனையும் காளியையும் ஒரு சேர இஸ்ரேல் என்ற வார்த்தை குறிக்கும்.)

ஈசா + ஆக்கு - ஈசாக்கு - ஐசக் ( ஆக்கும் கடவுள் ஈசன்)

ஈசா மா எல் - இஸ்மாயில் ( ஈசன் ஆகிய பெரிய கடவுள் )

ஈசா - ஏசா - ஏசுவா - ஜேசுவ - ஜீசஸ் ( ஈசனின் நினைவாக ஏசுவிக்கு வைக்கப்பட்ட பெயர்)

கிரேக்க கடவுள் போஸிடைன்னும் சிவன் தான்.

ஏகிப்து கடவுள் ஓரஸ் சும் ( ஒரையோன் ) சிவன் தான்.

இன்னும் பல நாகரிகங்களில் சிவன் வழிபடபட்டு கொண்டு தான் உள்ளார்.

விண்மீன்களை இணைத்து உருவாக்கிய முதல் ஓரை( ஓர்+ அய்) மூத்த சித்தர் சிவனுக்கு சூட்ட பட்டது . அதுவே ஆதி ஓரை என்பதால் ஆதிரை ஆகி 
திரு +ஆதிரை - திருவாதிரை ஆனது. 

திருவாதிரையின் பழைய பெயர் 
சித்தர் + ஓரை - சித்திரை ஆகும். வானில் 6 மணிக்கு திருவாதிரை தோன்றும் நாளில் தமிழ் மாதம் பிறந்தது. முதல் மாதத்தின் பெயரும் சிவனின் நினைவால் சித்திரை என்று வைக்கப்பட்டுள்ளது. 

ஆரிய பிராமணன் பொய்யான கதைகளை புனைந்து சிவன், முருகன், வீட்டினன் போன்ற நம் சித்தர்களின் வரலாற்றை மாற்றி விட்டான்.  திராவிடன் அந்த பொய்யான கதையை கேலி கிண்டல் செய்து போலி பகுத்தறிவு பேசி நாம் கடவுளை வணங்குவதில் இருந்து நம்மை தடுப்பான். இரண்டு பேருமே கூட்டுக் களவாணிகள். இவர்களின் சூழ்ச்சியிலிருந்து தமிழ் மக்கள் உண்மை வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும்.

நன்றி தமிழ் சிந்தனையாளர் பேரவை.

புதன், 6 மார்ச், 2024

உன் வாழ்வை நீ வாழ 100 உளவியல் நுட்பங்கள்.

1. சுய கட்டுப்பாட்டை உருவாக்கு.
2. ஒரு நேரத்தில் ஒரு தவறான பழக்கவழக்கத்தை கைவிடு.
3. எதிர்காலத்தை எண்ணி கவலைப்படாதே.
4. உன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்.
5. தோல்வியை பார்த்து பயப்படாதே.
6. எளிமையாக இருப்பதை விரும்பு.
7. No சொல்லப் பழகு.
8. புதிய நண்பர்களை உருவாக்கு.
9. கடந்த காலத்தை கைவிடு.
10. புதிய வேலையை நோக்கி நகர்.
11. சுய தொழில் முயற்சியில் ஈடுபடு.
12. நேர்மறையாக சிந்திக்க பழகு.
13. நேர்மறை சிந்தனையாளர்களுடன் அதிகம் சேர்ந்திரு.
14. சுயத்தை எண்ணி பெருமை கொள்.
15. ஆர்வமுடையவராக இரு.
16. வெவ்வேறு திறன்களை வளர்.
17. புதிய விடயங்களை முயற்சி செய்.
18. காலையில் அன்றைய நாள் தொடர்பாக ஆரோக்கியமாக சிந்தி.
19. சாக்கு போக்குச் சொல்வதை தவிர்.
20. இடர்களுக்கு முகங்கொடு.
21. சுய தவறுகளுக்கு அடுத்தவரை பழிகூறாதே.
22. புதிய மொழி ஒன்றைக் கற்றுக் கொள்.
23. இயற்கையை இரசி.
24. உடன்படுவதற்கான காரணங்களை இனங்காண்.
25. தைரியமாக இரு.
26. மனதை ஒருநிலைப்படுத்து
27. பூரணத் தன்மை இல்லாவிட்டாலும் நன்றாக இருக்க முடிவெடு.
28. சுதந்திரமாக இரு.
29. முதலில் நீ பணம் செலுத்து.
30. குறைந்த செயற்திறனில் அதிக விளைதிறன் கிடைக்க தொழிற்படு.
31. பொறுப்புடன் செயற்படு.
32. அதிகாலையில் எழும்பு.
33. வேட்கையை பின்தொடர்.
34. வலைப்பதிவு ஒன்றை இயக்கு.
35. வாழ்கைக்கு எது அவசியமானது என்று உன்னை நீயே கேள்.
36. வாழ்வை நேசிக்க வேண்டியதற்கான காரணத்தை தேடு.
37. புதிய உணவு பழக்கவழக்கத்தை திட்டமிடு.
38. சொந்த முடிவுகளை எடு.
39. தேவையில்லை எனும் விடயங்களை தவிர்.
40. முரண்படுவதை தவிர்த்து கொள்.
41. சக்தியை வீணாக்காதே.
42. புதிய விடயங்களை முயறச் p செய்.
43. நணபர்களின ; தவறை ஏற்றுக் கொள்.
44. தவிர்ப்பதற்கு கற்றுக்கொள்.
45. மரண பயத்தை கடந்து வா.
46. புதிதாக ஒன்றை கற்றுக் கொள்.
47. இயலாது என்று விட்டுவிடாதே.
48. அனைவரையும் திருப்திப்படுத்த முயற்சிக்காதே.
49. நன்றியுணர்வை வெளிப்படுத்து.
50. பொறாமையை கைவிடு.
51. வதந்திகள் பற்றி கிசுகிசுப்பதை தவிர்.
52. எதிர்மறை எண்ணத்தை இல்லாது செய்.
53. விமர்சனங்களை கேட்க தயாராகு.
54. பணத்தை விட நேரத்தை முகாமை செய்.
55. உனக்கு மட்டும் என்று உரிமை கொள்ளாதே.
56. உடற்பயிற்சி செய்.
57. முறைப்பாடு செய்வதை தவிர்.
58. வராத்தில் ஒரு புத்தகமாயினும் வாசி.
59. மாற்ற முடியாத விடயங்களை தவிர்த்து விடு
60. ஒரு விளையாட்டு செயற்பாடுகளில் ஈடுபடு
61. தவறான பிரச்சினைகளை தீர்ப்பதை தவிர்.
62. மன்னிக்க தயாராக இரு.
63. பிறர் நன்றாக இருக்க சிந்தி.
64. பிடிக்காத நபர்களுடனான தொடர்பை துண்டி.
65. பேசுவதை குறைத்து செயற்படுவதை அதிகமாக்கு.
66. நீண்ட காலத்திற்கு தேவைப்படும் விடயத்தை எடு.  
67. வழமையான நடைமுறைகளை தவிர்
68. புதிய குழுக்களுடன் இணை.
69. அன்பு செய்ய தொடங்கு.
70. சில நேரங்களை தனிமையில் கழி.
71. தவறான பழக்கவழக்கத்துடனான தொடர்பை துண்டி
72. எதிர்வினையாற்றுவதை தவிர்.
73. தீர்ப்பிடுவதை தவிர்.
74. சுய நம்பிக்கைகளை அவதானி.
75. கசப்பான நினைவுகளை அழி.
76. உன்னுடைய உணர்வுகளை நம்பு.
77. செல்லப் பிராணி ஒன்றை வளர்.
78. உடலையும் உளள்த்தையும் பேணு.
79. உன்னை நீ ஏமாற்றுவதை தவிர்.
80. உன் பலவீனங்களை ஆராய்ந்து தீர்.
81. தொலைக்காட்சியில் மூழ்காதே.
82. விழிப்புடன் வாழ்.
83. நடைப்பயிற்சி செய்.
84. உனக்கு நீ சாவால் இடு.
85. தினமும் தியானம் செய்  
86. கருணையோடு செயற்படு.
87. எதிர்பார்க்க முடியாததை செய்.
88. வென்றாலும் தோற்றாலும் விவாதிக்காதே.
89. சமூகமயப்படு.
90. வாழ்வை மெதுவாக்கு.
91. இலக்குகளை தீர்மானி.
92. பிறருடன் ஒப்பீடு செய்வதை தவிர்.
93. உதவி செய்.
94. எழுச்சியூட்டும் வரலாற்றை படி.
95. பொய் சொல்வதை தவிர்.
96. உண்மையைத் தேடு.
97. வருத்தமடைவதால் பலனில்லை என்பதை உணர்.
98. பெரியளவில் பார்க்க முயற்சி செய்.
99. இன்று இந்த நொடியில் வாழு.
100. நீ நீயாக இரு.

வெள்ளி, 1 மார்ச், 2024

ராசி பிரிவுகளும் மருந்துகளும்

ராசிப்பிரிவுகளும் மருந்துகளும்

ஒரு நோயாளிக்கு எந்த வகை மருந்து எளிதில் குணமளிக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஜோதிடத்தில் வழியுண்டு. ஒரு குறிப்பிட்ட மருந்து எந்த மூலப் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பது தெரிந்தால் ஒரு நோயாளிக்கு எந்த மாதிரியான மருந்து பயன் தரும் என்பதை

கண்டறியலாம். சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி மற்று ஹோமியோபதி மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பெரும்பாலும் தாதுப்பொருட்கள் தாவரப்பொருட்கள மற்றும் விலங்குகள், பறவைகளின் உடல் உறுப்புகளிலிருநது தயாரிக்கப்படுகி ன்றன.

ஜோதிடத்தில் பன்னிரண்டு ராசிகளும் தாது, மூலம், ஜீவன் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுளளன. இந்த ராசிப் பிரிவுகளைப் பயன்படுத்தி நோயாளிக்கு எந்த விதமான மருந்து ஒத்துப்போகும் என்பதை கண்டறியலாம். தாது என்பது தாதுப்பொருட்களையும், உலோகப்பொருட்களையும் குறிக்கும். மூலம் என்பது தாவரப்பொருட்களைக்குறிக்கும். ஜீவன் என்பது உயிரினங்களைக்குறிக்கும். ஜோதிடத்தில் நோயைக்குறிக்கும் வீடு ஆறம் பாவமாகும். நோய்க்கு நிவாரணமளிக்கும் வீடு ஆறுக்கு ஏழாம் வீடான பன்னிரண்டாம் வீடாகும். ராசி சக்கரத்தைக் கவனித்துப் பார்த்தால் ஆறாம் வீடும்,பன்னிரண்டாம் வீடும் ஒரே கத்துவத்தைக் குறிப்பதைக் காணலாம்அது எப்படி என்றால், ஆறாம் வீடு தாது ராசி என்றால்,பன்னிரண்டாம் வீடும் தாது ராசியாகவே வருகிறது. ஆறாம் வீடு மூல ராசி என்றால்,பன்னிரண்டாம் வீடும் மூல ராசியாகவே வருகிறது. ஆறாம் வீடு ஜீவ ராசி என்றால்,பன்னிரண்டாம் வீடும் ஜீவ ராசியாகவே வருகிறது. "முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்” "விசத்தை விசத்தால்தான் முறிக்கவேண்டும்" என்பது போல் ஆறாம் வீடும்,பன்னிரண்டாம் வீடும் அமைந்துள்ளன. ஹோமியோபதி மருத்துவத்தின் தத்துவமும் இதுதான். ஜென்ம லக்கினத்திற்கு ஆறாம் வீடு என்ன ராசியாக அமைகிறதோ, அதைக்கொண்டு நோயாளிக்கு எந்த விதமான மருந்து கொடுக்கவேண்டும் என்பதை நிர்ணயம் செய்யலாம். ஆறாம் வீடு தாது ராசியாக அமைந்தால் தாதுப்பொருட்கள், உலோகப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு பவள பற்பம், தங்க பற்பம், அய செந்தூரம் போன்ற மருந்துகளை கூறலாம். ஆறாம் வீடு மூல ராசியாக அமைந்தால்

மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆவாரம் பூ கசாயம், நில வேம்பு குடி நீர் போன்ற மருந்துகளை கூறலாம்.

ஆறாம் வீடு ஜீவ ராசியாக அமைந்தால் விலங்கு உறுப்புகளிலிருநது தயாரிக்கப்பட்ட மருந்தை கொடுக்க வேண்டும். சித்த மருத்துவத்துவத்தில் குண வடாகம் என்னும் நூல் உள்ளது அதில் எந்தெந்த விலங்கின் மாமிசத்தைசாப்பிட்டால் எந்தெந்த நோய் குணமாகும் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. ஆறுக்குடையவன் எந்த ராசியில் நிற்கிறானோ அந்த ராசியைக்கொண்டும நோயாளிக்கு கொடுக்கவேண்டிய மருந்தை நிர்ணயம் செய்யலாம்.

நடைமுறையில் உள்ள சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி மற்று ஹோமியோபதி மருத்துவ முறைகளை கையாள்பவர்கள், ஜோதிடத்தையும் இணைத்து கையாண்டால் சிகிச்சை முறையில் பெரும் வெற்றிகளை அடையலாம்.
 கட்டுரை.
 சித்தயோகி சிவதாசன் ரவி.