புதன், 26 ஜூன், 2024

மதுரை சுற்றியுள்ள ஜீவசமாதிகள்

மதுரை அருகே உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்

பகவான் ஸ்ரீ இராமதேவசித்தர் ஜீவசமாதி மதுரை அழகர்கோவில்

நிஜானந்த சுவாமிகள்
மதுரை - ராஜபாளையம் சாலையில் 40.கீ,மீ தூரத்தில் இருக்கும் டி,கல்லுப்பட்டியில் இறங்கி பேரையூரை அடைந்தால் அங்கு இவரது ஜீவசமாதி உள்ளது.

சுந்திர சுவாமிகள்
டி,கல்லுப்பட்டி (௮) பேரையூரில் இருந்து கூவலப்புரம் ( மதுரை மாவட்டம் )வந்தால் இவரது ஜீவசமாதி உள்ளது.

சங்கரானந்த சுவாமிகள்
டி,கல்லுப்பட்டி - விருதுநகர் சாலையில் அரசுப் பேருந்து ஏறி வி,ரெட்டிப்பட்டியில் இறங்கினால் அக்கிராமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

வெள்ளையா சுவாமிகள் & கருணானந்த சுவாமிகள்
மதுரை வடக்கு வெளி வீதியில் ( 315/94 கதவு இலக்கம் உள்ள ) சிம்மக்கல் பஸ் ஸ்டாப்பில் இவரது ஜீவசமாதி உள்ளது,

பழனி நாச்சிமுத்து சுவாமிகள்
சிவாநாராயண தேசிகர்
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள புட்டுத்தோப்பு சிவன் கோயில் எதிர்புறத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

சாது விவேகானந்த முனீஸ்வரர்
இவரது ஜீவசமாதி மதுரை குரு தியேட்டர் எதிரிலுள்ள மேட்டுத் தெரு கடைசியில் உள்ளது.இவரது ஜீவசமாதி இருக்குமிடத்தில் சீமைச் சுவாமி யோகி,பாலயோகி கணேஷ்பாபு ஆகியோரின் ஜீவசமாதிகளும் உள்ளது,

குழந்தை சுவாமிகள்
மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு கிழக்கில் நேதாஜி ரோடில் உச்சினி மாகாளி அம்மன் கோயில் எதிரில் உள்ள ஏழூர் சாலியர் சத்திரத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

தலைவிரிச்சான் சுவாமிகள்
மதுரை தங்கம் தியேட்டர் அருகில் ( காக்கா தோப்பு )தலைவிரிச்சான் சந்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.

குட்டைய சுவாமிகள்
மதுரை தெற்கு வெளி வீதியில் இவரது ஜீவசமாதி உள்ளது,

விவேகானந்த சரஸ்வதி சுவாமிகள்
மதுரை ஆண்டாள்புரம் - மேம்பாலத்திற்கு அதாவது பெரியார் பஸ் நிலையத்திற்குத் தெற்கே பாலத்தின் கீழ் உள்ள மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

சிவானந்த சுவாமிகள்
விவேகானந்த சுவாமிகள் ஜீவசமாதி இருக்கும் மடத்தை ஒட்டி இவரது ஜீவசமாதி உள்ளது,

மூக்கன் சுவாமிகள்
மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் கல்லூரி வளாகத்தின் கடைசியில் இவரது ஜீவசமாதி உள்ளது.

பிரமானந்த சுவாமிகள்
மதுரை ,அவனியாபுரம் மேம்பாலத்திற்குக் கீழ் இவரது ஜீவசமாதி உள்ளது,

ஓம் சிவப்பிரகாசர் சுவாமிகள்
மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் கல்லூரிக்குச் செல்லும் பாதையின் ஆரம்பத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

மூட்டை சுவாமிகள்
தியாகராசர் கல்லூரியை அடுத்து இருக்கும் காவல் நிலையத்தைக் கடந்து மாயாண்டி சுவாமிகள் சமாதிக் கோயிலுக்குச் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது,

நடன கோபால நாயகி சுவாமிகள்
மதுரை - அழகர்கோயில் சாலையில் காதகிணறு என்னும் கிராமத்தில் ஜீவசமாதி ஆனார்,

கத்திரிக்காய் சித்தர்
மதுரையிலிருந்து19.கி,மீ தூரத்திலுள்ள திருப்புவனத்தில் அரசு மருத்துவமனை எதிர் சாலையின் மேல் இவரது ஜீவசமாதி உள்ளது,

அருளானந்த சித்தர்
மதுரையிலிருந்து 25.கி,மீ,தூரமுள்ள சோழவந்தானின் ஜனகை மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள ஜின்னி மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

ஞானதேசிகர்
சோழவந்தான் ஜின்னி மடத்திற்கு அருகில் உள்ள ஞானியார் மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

முனியாண்டி சுவாமிகள்
மதுரை - ராஜபாளையம் சாலையில் 28கி,மீ,தொலைவில் உள்ள டி,குன்னத்தூர் சென்று அங்கிருந்து அரை கி,மீ,தூரமுள்ள கே,ரங்கபாளையம் சென்றால் இவரது ஜீவசமாதி உள்ளது,

கமலானந்தர்
கே,ரங்கபாளையத்தில் வடக்குவாய் செல்லியம்மன் கோயில் அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,

மௌனகுரு சுவாமிகள்
தேனியிலிருந்து 15.கி,மீ,தொலைவிலுள்ள பெரியகுளத்தில் வராகநதி பாலத்திலிருந்து அருள் தியேட்டர் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது,

பாட்டையா சுவாமிகள்
கருணையானந்த சுவாமிகள்
மதுரை - ஸ்ரீ வில்லிபுத்தூர் சாலையில் டி,கல்லுப்பட்டியி ல் இறங்கி அங்கிருந்து 7.கி,மீ தூரத்தில் உள்ள பேரையூர் வந்து பேரையூரிலிருந்து 2.கி,மீ தொலைவிலுள்ள சாளசந்தை கிராமம் சென்றால் இவரது ஜீவசமாதி உள்ளது,

சடையாண்டி ரெட்டியார் சுவாமிகள்
உசிலம்பட்டியிலிருந்து 36.கி,மீ,தூரத்தில் சாப்டூர் சென்று அங்கிருந்து 4 கி,மீ,வண்டல்பட்டி ஸ்டாப்பில் இறங்கி சிறிது தூரம் சென்றால் விட்டல்பட்டி கிராமத்தில் தெப்பஊரணி அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,

தேசிக ஆனந்த சுவாமிகள்
மதுரையிலிருந்து உசிலம்பட்டி வந்து அங்கிருந்து ஏழுமலை செல்லும் சாலையிலுள்ள கோட்டைப்பட்டியில் இவரது ஜீவசமாதி உள்ளது,

இவரது பிரதான சீடர் குருநாத சுவாமியின் உடல் இவரது ஜீவசமாதிக்கு நேர் உள்ளது,

குழந்தையானந்த சுவாமிகள்
இவரது ஜீவசமாதி நான்கு இடங்களில் உள்ளது.
முதன் முதலாக ஜீவசமாதி கொண்டது காசித் தலத்தில்,,இவருடைய ஜீவசமாதி இவருடைய குருநாதர் ஸ்ரீ கணபதி பாபவின் ஜீவசமாதிக்கு அருகில் உள்ளது,
இரண்டாவது,நேபாளத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ பசுபதிநாதர் ஆலயத்தில் உள்ளது,
மூன்றாவது,தமிழகத்தில் தென்காசிக்கு வந்து சன்னதி மடம் தெருவில் உள்ள சங்கரன் பிள்ளை என்பவரது வீட்டிற்குள் ஜீவசமாதி அடைந்தார்,இது நெல்லையப்பர் சமாதி என்று அழைக்கப்படுகிறது,
நான்காவது,மதுரை அரசடிப் பகுதியில் காளவாசல் பஸ் ஸ்டாப்புக்கு அருகில் உள்ளது,

நாகநாத சுவாமிகள்
மதுரை மேலூரிலிருந்துஏரியூர் செல்லும் பாதையில் உள்ள வடவன்பட்டியில் கிழக்கு எல்லையில் சாலைக்கு வடபுறமுள்ள ஊராட்சி மன்றக் கட்டடத்திற்கு நேர் எதிரில் தெற்கே இவரது ஜீவசமாதி உள்ளது,

இடைக்காடர்
இடைக்காட்டூர் மணிகண்டீஸ்வரர் கோயிலில் இவரது ஜீவசமாதி உள்ளது, மதுரை ( மாட்டுத்தாவணி) அல்லது மானாமதுரையிலிருந்து இங்கு வரலாம்,

சத்குரு
உசிலம்பட்டி- தேனி சாலையில் ஆண்டிப்பட்டியை அடுத்த எம்,சுப்பலாபுரம் என்னும் இடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

சிங்கம்புணரி வாத்தியார் சுவாமிகள்
முத்துவடுக நாத சுவாமிகள்
சிங்கம்புணரி பஸ் நிலையத்தின் அருகில் இவரது உள்ளது,

தங்கவேல் சுவாமிகள்
(மற்றும்)
சுப்பையா சுவாமிகள்
மதுரை ஆரப்பாளையம் பஸ் நீலையத்திற்கு மேற்கே சிறிது தொலைவில் உள்ள வைகை நகர் அருகில் நெ,10.ஆரப்பாளையம் மெயின் ரோடு இந்த ஜீவசமாதிகள் இருக்கும் இடமாகும்,

மாதவ ஆனந்த சுவாமிகள்
இவரது ஜீவசமாதி ,80.டி,மீனாட்சி இல்லம் ,நேர் நகர் ,அழகப்பா நகர்,மதுரை -3.அழகப்பா நகர் ரயில்வே கேட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அரை கி,மீ,தூரம் நடந்தால் இவரது ஜீவசமாதி உள்ளது,

ரமணகிரி சுவாமிகள்
மதுரையை அடுத்த வாடிப்பட்டியிலிருந்து 7.கி,மீ.தொலைவிலுள்ள குட்லாம்பட்டியில் இவரது ஜீவசமாதி உள்ளது,

சுந்தரானந்த சுவாமிகள்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலேயே ஜீவசமாதி அடைந்திருக்கிறார்,

மாயாண்டி சுவாமிகள்
மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டாப்பில் இறங்கி மலையடிவாரம் சென்றால்,இவரது ஜீவசமாதி உள்ளது,

சோமப்ப சுவாமிகள்
மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து மலை மீது இருக்கும் முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது,

மச்சமுனி
இவரது ஜீவசமாதி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.
அங்குள்ள சுனையில் இன்றும் மீன் வடிவில் ஐயா வாழ்வதாக நம்பிக்கை உள்ளது.

சட்டை நாதர்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது,

முத்தானந்த சுவாமி

 இவரது ஜீவசமாதி தல்லாகுளத்தில் முத்தானந்த சுவாமி மடம் தெருவில் உள்ளது. 
இவரது குருநாதர் சங்கரநாராயணன் சுவாமிகள் மற்றும் குருவின் மகன் தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் இருவரின் ஜீவசமாதி சங்கரன்கோவில் கரிவலம் அருகில் பனையூரில் உள்ளது.
இவர்களின் வழி சீடர் கணபதி சுவாமிகள்
இவருடைய ஜீவசமாதி குன்றக்குடி பஸ் நிறுத்தத்திற்கு அருகிலுள்ளது.

செவ்வாய், 18 ஜூன், 2024

சேலத்தில் உள்ள ஜீவ சமாதிகள்

🔱 சேலத்தில் உள்ள ஜீவசமாதிகள் 🔱
🔔 மாயம்மா ஜீவசமாதி 🔔
      1920 முதல் கன்னியாகுமரி கடற்கரையில் நெடுநாட்கள் வாழ்ந்து வந்த அம்மையார் இவர்,9-2-1992-ல் சேலத்தில் ஜீவசமாதி அடைந்தார்,
        சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் சாலையில் லா காலேஜ் பேருந்து நிறுத்தம் அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰
🔔 சாந்தானந்த சுவாமிகள் 🔔
      1921-ல் பிறந்தவர்,27-5-2002-ல் ஜீவசமாதி அடைந்தார்.
      சேலத்திற்கு அருகில் உள்ள உடையார்பட்டி மலைக்குன்று பகுதியிலுள்ள  ஸ்கந்தாஸ்ரமத்தில் இருக்கும் புவனேஸ்வரி அம்மன் திருவடி பீடத்திற்கு சற்று முன்பாக இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰
🔔 கஞ்சமலை சித்தர் 🔔
      சேலத்திலிருந்து 21.கி,மீ,தூரத்திலுள்ள கஞ்சமலை அடிவாரத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
      இவரது ஜீவசமாதி இருக்கும் கோயிலுக்கு அமாவாசைக் கோயில் என்று பெயர்,
〰〰〰〰〰〰〰〰
🔔 அப்பா பைத்தியம் 🔔
      கரூர் ஜமின் பரம்பரையில் 1859-ல் சித்திரை     புனர்பூசம்  நட்சத்திரத்தன்று பிறந்தார்.இவர் தன்னைப் பைத்தியம் என்று கூறிக் கொள்வார்.பக்தர்கள் இவரை அப்பா என்று அழைத்ததினால் இவருக்கு அப்பா பைத்தியம் என்ற பெயர் விளங்கிவிட்டது,இவர் ஜீவசமாதியானது 11-02-2000-ல் தை மாதம் ,அசுவினி நட்சத்திரத்தில்,சேலம் ரயில்வே ஜங்ஷனிலிருந்து அரை கி,மீ,தொலைவிலுள்ள திருவாக்கவுண்டனூரில் உள்ள தருக விலாஸ் என்னும் சத்குரு மாளிகையில் இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰 
🔔 பாவை அம்மாள் 🔔
      தியாகராசர் கல்லூரி பஸ் ஸ்டாப் அருகில் சேலத்தில் உள்ள ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰
🔔 கரடிச் சித்தர் 🔔
     சேலத்திலிருந்து 5.கி,மீ,தூரத்திலுள்ள உத்தம சோழபுரம் கரபுரீஸ்வரர் சிவன் கோயிலில் இவரது ஜீவசமாதி உள்ளது,
     ஔவையார் வழிப்பட்ட கோயில் ,
〰〰〰〰〰〰〰〰
🔔 சரபங்க முனிவர் 🔔
      சேலம் - மேட்டூர் சாலையில் 16.கி,மீ,தொலைவில் உள்ள ஒமலூர் கோட்டையில் வசந்தீஸ்வரர் கோயிலில் உள்ள நவக்கிரக சந்நிதிக்கு அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰
🔔 நிர்வாண சுவாமிகள் 🔔
( 🌹 வரதர் சுவாமிகள் 🌹 )
      சேலம் ஆத்தூரிலிருந்து 5.கி,மீ.தொலைவிலுள்ள தளவாய்பட்டிக்கு வந்து அங்கிருந்து வண்டிப்பாதையில் 3.கி,மீ,தொலைவு நடந்து சென்று அங்குள்ள சாமியார் மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰
🔔 அப்பண்ண சுவாமிகள் 🔔
      சேலம் ஆத்தூரிலிருந்து 15.கி,மீ,தூரத்தில் டவுன் பஸ் மூலம் சென்று வடக்கு மரை கிராமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰
🔔 நடேச சுவாமிகள் 🔔
      ஆத்தூர் (௮) சின்ன சேலம் வந்து அங்கிருந்து காரியானூர் வந்தால் இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰