ஞாயிறு, 14 டிசம்பர், 2025

ஆரோக்கியமாய் வாழ

மனிதர்களின்  நோய்களுக்கு காரணங்களாக இருப்பது  எதிர்மறையான( negative) உணர்வுகளான கோபம், வெறுப்பு,கவலை, பொறாமை.
இந்த உணர்வுகளை சரி செய்யாமல் எந்த மருந்துகளும் முழுமையான பலன்களை கொடுக்காது.
 மேலே சொல்லப்பட்டுள்ள எதிர்மறையான உணர்வுகளின் காரணமாக மனிதர்களின் ரத்தத்தில் பிராண சக்தியின் அளவு குறைந்து காணப்படும். ரத்தத்தில் பிராண சக்தி இருந்தால் மட்டுமே மனிதர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு, மூலிகை எதுவானாலும் நல்ல பலன்களை கொடுக்கும்.
 எந்த உயர்வான மூலிகைகளை கொடுத்தாலும் முழுமையான பலன்கள் வேண்டுமானால் மேலே சொல்லப்பட்ட உணர்வுகளை சரி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.
 ஒரு சில எதிர்மறையான உணர்வுகள் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டே இருக்கும். இவைகளை சரி செய்ய வேண்டுமானால் தொடர் பயிற்சிகள்( தியானம், மூச்சுப் பயிற்சி ) செய்து வர வேண்டும். சில மலர் மருந்துகள் (flower remedies)நல்ல பலன்களை கொடுக்கலாம். நிரந்தர தீர்வுக்கு உணர்வுகள் நேர்மறையானதாக( positive) மாற வேண்டியது அவசியம்.

#fbpost2025シ 
#herbalremedies 
#flowerremedies 
#meditation 
#pranichealing

ஒரே நாளில் வழிபட வேண்டிய கோயில்கள்

ஒரே நாளில் வழிபட வேண்டிய தலங்கள்
-----------------------------------------------------------------------------

அம்மன் தலங்கள்:
(1) பெளர்ணமி காலை-மேலூர் (திருவுடைநாயகி).
(2) பெளர்ணமி மதியம்-திருவெற்றியூர் (வடிவுடைநாயகி)
(3) பெளர்ணமி மாலை-(வட) திருமுல்லை வாயில் (கொடியிடைநாயகி) 
   
ஆத்தூர் தலங்கள்:
(1) போளூர்- தான்தோன்றீஸ்வரர்,
(2) ஏத்தப்பூர்- சாம்பமூர்த்தீச்வரர்,
(3) ஆத்தூர்- காயநிர்மலேஸ்வரர்,
(4) ஆறகழூர்- காமநாதீஸ்வரர்,
(5) கூகையூர்- சுவர்ணபுரீஸ்வரர்,
   
குடந்தை தலங்கள்:
(1) காலை- குடந்தைகீழ்க்கோட்டம்
(2) நண்பகல்- திருநாகேச்சுரம்
(3) மாலை-திருபாம்புரம்
   
பஞ்சபைரவர் தலங்கள்:
(1) நல்லூர்.
(2) வலஞ்சுழி,
(3) சக்திமுத்தம்,
(4) பட்டீச்சரம்,
(5) ஆவூர் (பஞ்சபைரவர்கள் அருள்)
  
பஞ்சலிங்கத் தலங்கள்: (மதுரை)
(1) தி்ருஆப்புடையார்கோவில்,
(2) திருஆவினன்குடி,
(3) இன்மையில் நன்மை தருவார்,
(4) முக்தீஸ்வரர்,
(5) பழைய சொக்கநாதர்.
   
பஞ்சாட்சர தலங்கள்: (குடந்தை)
(1) தர்மேஸ்வரம்,
(2) பட்டீஸ்வரம்,
(3) சோழமாளிகை‌‌, (சோழர் அரண்மனை இருந்த இடம்)
(4) சிவசக்திமுத்தம்,
(5) ஆலயவடதளி.
  
பஞ்சாட்சர தலங்கள்: (சேலம்) 
(1) சேலம்- சுகவனேஸ்வரர்,
(2) உத்தமசோழபுரம்- கரபுரநாதர்,
(3) பில்லூர்- வீரட்டானேசுவரர்,
(4) பரமத்தி- வீமேஸ்வரர்,
(5) இடையார்- திருவேலிநாதர்.
   
பஞ்சாரண்ய தலங்கள்:
(1) உஷத்காலம்- வைகறை- திருக்கருகாவூர் (முல்லைவனம்)
(2) காலசந்தி- காலை- அவளிநல்லூர் (பாதிரிவனம்)
(3) உச்சிக்காலம்- நன்பகல்- அரதைபெரும்பாழி (வன்னிவனம்),
(4) சாயரட்சை- மாலை- திருஇரும்பூளை (ஆலங்குடி) (பூளைவனம்)
(5) 5.அர்த்தயாமம்- அர்த்தசாமம்- கொள்ளம்புதூர் (வில்வவனம்)
   
மகாசிவராத்ரியன்று;
(1) முதல்காலம்- குடந்தைகீழ்க்கோட்டம்- நாகேஸ்வரர்,
(2) இரண்டாம்காலம்-  திருநாகேச்சுரம்- நாகநாதர்,
(3) மூன்றாம்காலம்- திருபாம்புரம்-‌பாம்புரேஸ்வரரையும்,
(4) நான்காம் காலம்- நாகூர் நாகேஸ்வரரையும்- உடன் ஆதிசேஸனையும் வழிபடவும்.

முக்தி தலங்கள்:
(1) காலையில்-
கடம்பந்துறை- கடம்பர்,
(2) பகலில்- சிவமலை சொக்கர்- அய்யர்மலை-
ரத்னகிரீசுவரர்,
(3) மாலையில்- திருவேங்கிநாதர்- திருஈங்கோய்நாதர்

நவகைலாயங்கள்:
(1) சேர்ந்தபூமங்கலம்,
(2) இராசபதி,
(3) தென்திருப்பேரை,
(4) வைகுண்டம்,
(5) முறப்பநாடு,
(6) குன்னத்தூர்,
(7) கோடகநல்லூர்,
(8) சேரன்மாதேவி,
(9) பாபநாசம். 
   
நவதிருப்பதிகள் - வைகுண்ட ஏகாதசியன்று!:
(1) ஸ்ரீவைகுண்டம்- சுக்கிரனுக்குரிய தலம்
(2) திருவரகுண்மங்கை-
சூரியனுக்குரிய தலம்,
(3) திருப்புளிங்குடி- சந்திரனுக்குரிய தலம்,
(4) திருத்துலைவில்லி மங்களம்- (இரட்டைத்திருப்பதி) - இராகு- கேதுக்குரிய தலம்,
(5) திருக்குளந்தை- செவ்வாய்க்குரிய தலம்,
(6) திருக்கோளூர்-
குருபகவானுக் குரியதலம்,
(7) திருப்பேரை- சனிபகவானுக்குரிய தலம்,
(8) திருக்கூர்- (ஆழ்வார்திருநகரி)- புதனுக்குரிய தலம்.

கரன் லிங்கம் பிரதிஷ்டை தலங்கள்
(1) வைக்கம்,
   வைக்கத்தப்பன் கோயில் 
(2) கடுதுருத்தி,
   மகாதேவன் ஆலயம் 
(3) ஏற்றுமானூர்
   ஏற்றுமானூரப்பன் கோயில்