செவ்வாய், 25 நவம்பர், 2025

மன அமைதிக்காக சில வரிகள்

மன அமைதிக்கான சில சிந்தனைகள்...

1. தனிமையில் அமர்ந்து எதனால் உங்களுக்கு பிரச்னைகள் வருகின்றன. அதில் தீர்வு காண என்ன வழி என யோசியுங்கள்.

2. நல்ல மனிதர்களுடனும், அனுபவம் வாய்ந்த பெரியவர்களுடனும்
ஆலோசனை கேளுங்கள்.

3. ஒருபோதும் மூடர்களின் செயல்களை பார்த்து உங்கள் மகிழ்ச்சியை இழந்துவிடாதீர்கள். நல்ல மனிதர்களின் அனுபவ அறிவு நிறைந்தவர்கள் நட்பை இழந்துவிடாதீர்கள்.

4. உங்கள் மனதை எது பாதித்தாலும் அதை தொலைவில் வையுங்கள்.
நினைவில்கொண்டு வராதீர்கள்.

5. வீட்டிலிருப்பவர்களுடனும்,
நண்பர்களுடனும் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதைப் போல, நிச்சயமாக இறைவனுடன் பேசுவதற்கு நேரம்
ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் இடையூறு செய்யும் எதுவானாலும் ஒதுக்கி தள்ளுங்கள்.

6. எக்காரணத்தை கொண்டும் பாவம் செய்யும் ஒருவரை பார்க்காதீர்கள். உங்கள் மனதில்கூட பாவஎண்ணங்கள் வர அனுமதிக்காதீர்கள். நிம்மதியை யாருக்காகவும் இழக்காதீர்கள்.

7. நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என திடமாக நம்புங்கள். ஒருவேளை மனதிற்கு
பிடிக்காத சம்பவம் வந்தால் அது உங்களிடம் நிரந்தரமாக விடைபெற்று செல்வதற்காக வந்ததாக மகிழ்ந்து நிரந்தர விடைகொடுத்து அனுப்புங்கள்.

8. வாரம் ஒருமுறை ஆதரவற்றோர் இருப்பிடம், அரசு ஆஸ்பத்திரி
முதியோர் இல்லம் சென்று
உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். உடல் ஊனமுற்றோர் வேலை செய்யும் பொழுதும். கண்பார்வையற்றோர் அகர்பத்தி விற்கும் பொழுதும் இறைவன் உங்களை பூமியில் எந்தவிதமான குறையுமின்றி படைத்ததற்காக
நன்றி கூறுங்கள்.

9. தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள முற்படுங்கள். நேரத்தை
விரயம் செய்யும்எதையும் அனுமதிக்காதீர்கள். நேரத்தில்
உறங்கி, நேரத்தில் எழுங்கள்.

10. உங்களை பார்ப்பவருக்கு உற்சாகம் வரும் அளவு உங்கள் தோற்றம் இருக்கட்டும். ஒருசெயலை ஆரம்பிக்கும் முன் முடிவை தெரிந்து கொள்ளுங்கள். இதன்விளைவு எதில்கொண்டு சேர்க்கும் என ஆராயுங்கள். உங்களை புரிந்து மதிப்பவர்களுக்காக கண்டிப்பாக சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

11. எல்லாம் உலகில் உங்களுக்கு பிடித்தமாதிரி நடக்கும் என எதிர்பார்க்காதீர்கள். இவ்வுலகில்
எவ்விதத்திலும் நீங்கள் எதிர்பார்ப்பது சில நேரங்களில் உங்களஏமாற்றத்தில்
கொண்டு போய் நிம்மதியை இழக்க செய்துவிடும். செல் போனை தேவையானவற்றிற்கு மட்டுமே உபயோகம் செய்யுங்கள். வீணடிக்காதீர்கள்.

12. எதிலும் நேர்மையாக இருங்கள். தர்மத்தின் வழிப்படி நடக்க மறவாதீர்கள். இறைவனை சதா சர்வகாலமும் துணைவனாக வையுங்கள். மனம் குழம்பும் பொழுது சிறிது நேரம் எதுவும் பேசாமல் இறைவனை நினைத்து அவரிடம் மனம் விட்டு பேசிவிட்டு உங்கள் காரியத்தை துவங்குங்கள். அமைதி உங்களின் நிரந்தர நண்பனாகிவிடும்....

திங்கள், 24 நவம்பர், 2025

ஆலய அதிசயங்கள்

ஆலய அதிசயங்கள்!! 
1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.

3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.

4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.

5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே. 

6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.

7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.

8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.

9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.

10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.

11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.

12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.

13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.

14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.

16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.

17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.

18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.

19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.

20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.

21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.

22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.

மறக்காமல் பகிருங்கள் நண்பர்களே, அனைவர்க்கும் தெரிய படுத்துங்கள்...

வியாழன், 20 நவம்பர், 2025

தியானம்

எண்ணங்கள்
ஓஷோ.

எண்ணங்களின் ஓட்டத்தை 
நிறுத்துவது எப்படி?????

எண்ணங்களை நிறுத்த முடியாது!

அது நிற்காது என்பதல்ல,ஆனால் 
அதை நிறுத்த முடியாது!

அது தானாகவே நிற்கின்ற ஒன்றாகும்.

இந்த வித்தியாசமானது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.இல்லையெனில் உனது மனதைத் துரத்திக்கொண்டு சென்று நீ பைத்தியமாகிவிட முடியும்.

எண்ண ஓட்டத்தை நிறுத்துவதால் மனம் அற்ற நிலை எழுவதில்லை.

எண்ணவோட்டம் இல்லாத போது,மனமற்ற நிலை இருக்கிறது.

அதை நிறுத்துவதற்கான அந்த முயற்சியே அதிக கவலையை உருவாக்கிவிடும்.

அது அதிக சச்சரவை உருவாக்கிவிடும்.அது உன்னை இரண்டாக பிளவு பட்டவனாக ஆக்கிவிடும்.

நீ உனக்குள் இடைவிடாத குழப்பத்தில் இருப்பாய்,இது உனக்கு உதவப்போவதில்லை.

மேலும் வலுக்கட்டாயமாக ஒருசில நொடிகள் அதை நிறுத்துவதில் நீ வெற்றி பெற்றாலும்கூட,அது ஒரு சாதனையே அல்ல.ஏனெனில் அந்த ஒரு சில நொடிகள் கிட்டத்தட்ட உயிரற்றவையாகவே இருக்கும்.

அவை உயிர்த்துடிப்புடன் இருக்காது.ஒருவித அசையாத தன்மையை நீ உணரலாம்.ஆனால் அமைதியை உணர முடியாது.ஏனெனில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அசையாத தன்மையானது அமைதி அல்ல.

அதற்கு அடியில் தன்னுணர்வு இழந்த நிலையில் ஆழத்தில் அடக்கி வைக்கப்பட்ட மனமானது வேலை செய்து கொண்டே இருக்கிறது.

ஆகவே,மனதை நிறுத்துவதற்கு எந்த ஒரு வழியும் கிடையாது.ஆனால் மனம் என்பது நிற்கிறது.அது நிச்சியம்.அது தானாகவே நிற்கிறது.

மனதை ஆழ்ந்த மரியாதையோடு பார்.சண்டை போடுபவனாக இருக்காதே.

நன்றாக கவனி.

மனதின் மிகச்சிறிய வேறுபாடுகளை,அதன் திடீர் திருப்பங்களை,அதன் அழகான திருப்பங்களை,திடீரென்று அது தாவிக் குதிப்பதை கவனி.

மனமானது விளையாடுகின்ற விளையாட்டுகளை,அது நெசவு செய்கின்ற கனவுகளை,கற்பனைகளை,நினைவுகளைக் கவனி.

அது உருவாக்குகின்ற ஆயிரத்தொரு திரையிடல்களைக் கவனி...கவனி.

அங்கு நின்று கொண்டு,தனியாக தூரவிலகி,அதில் ஈடுபடாமல் மனதைக் கவனி.

அப்போது நீ மெல்ல மெல்ல அதை உணர ஆரம்பிப்பாய்.

உனது முழுக்கவனம் எந்த அளவுக்கு ஆழமானதாக ஆகிறதோ அந்த அளவுக்கு உனது விழிப்புணர்வு ஆழமானதாக ஆகிறது.

மேலும் அதில் இடைவெளிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.ஒரு எண்ணம் போகிறது.ஆனால் அடுத்த எண்ணம் இன்னும் வரவில்லை.அப்போது அங்கு ஒரு இடைவெளி இருக்கிறது.

ஒரு மேகம் கடந்து சென்றுவிட்டது.அடுத்த மேகம் வந்து கொண்டிருந்தது.அப்போது அங்கு ஒரு இடைவெளி இருக்கிறது.

அந்த இடைவெளியில் மனம் அற்ற நிலையின் சிறு காட்சியை நீ முதன்முறையாக காண்பாய்.

மனம் அற்ற நிலையின் ருசியை நீ தெரிந்து கொள்வாய்.

ஆரம்பத்தில் இவை வெறுமனே அபூர்வமான தருணங்களாக இருக்கும்.

இடைவெளிகள் சிலவாகவும் ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் இடையே அதிக காலம் எடுத்துக் கொள்வதாகவும் இருக்கும்.

ஆனால் சமாதி நிலை என்றால் என்ன என்கிற ஒரு சிறிய காட்சியை உனக்கு கொடுக்கும்.

சிறிய குளம் போன்ற அமைதி வரும்,அதன் பின்னர் அது மறைந்து விடும்.

ஆனால் இப்போது நீ சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை நீ தெரிந்து கொள்வாய்.

எனவே மீண்டும் கவனிக்க ஆரம்பி.

ஓஷோ....

எண்ணங்கள் இல்லா நிலை

எண்ணங்கள்
ஓஷோ.

எண்ணங்களின் ஓட்டத்தை 
நிறுத்துவது எப்படி?????

எண்ணங்களை நிறுத்த முடியாது!

அது நிற்காது என்பதல்ல,ஆனால் 
அதை நிறுத்த முடியாது!

அது தானாகவே நிற்கின்ற ஒன்றாகும்.

இந்த வித்தியாசமானது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.இல்லையெனில் உனது மனதைத் துரத்திக்கொண்டு சென்று நீ பைத்தியமாகிவிட முடியும்.

எண்ண ஓட்டத்தை நிறுத்துவதால் மனம் அற்ற நிலை எழுவதில்லை.

எண்ணவோட்டம் இல்லாத போது,மனமற்ற நிலை இருக்கிறது.

அதை நிறுத்துவதற்கான அந்த முயற்சியே அதிக கவலையை உருவாக்கிவிடும்.

அது அதிக சச்சரவை உருவாக்கிவிடும்.அது உன்னை இரண்டாக பிளவு பட்டவனாக ஆக்கிவிடும்.

நீ உனக்குள் இடைவிடாத குழப்பத்தில் இருப்பாய்,இது உனக்கு உதவப்போவதில்லை.

மேலும் வலுக்கட்டாயமாக ஒருசில நொடிகள் அதை நிறுத்துவதில் நீ வெற்றி பெற்றாலும்கூட,அது ஒரு சாதனையே அல்ல.ஏனெனில் அந்த ஒரு சில நொடிகள் கிட்டத்தட்ட உயிரற்றவையாகவே இருக்கும்.

அவை உயிர்த்துடிப்புடன் இருக்காது.ஒருவித அசையாத தன்மையை நீ உணரலாம்.ஆனால் அமைதியை உணர முடியாது.ஏனெனில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அசையாத தன்மையானது அமைதி அல்ல.

அதற்கு அடியில் தன்னுணர்வு இழந்த நிலையில் ஆழத்தில் அடக்கி வைக்கப்பட்ட மனமானது வேலை செய்து கொண்டே இருக்கிறது.

ஆகவே,மனதை நிறுத்துவதற்கு எந்த ஒரு வழியும் கிடையாது.ஆனால் மனம் என்பது நிற்கிறது.அது நிச்சியம்.அது தானாகவே நிற்கிறது.

மனதை ஆழ்ந்த மரியாதையோடு பார்.சண்டை போடுபவனாக இருக்காதே.

நன்றாக கவனி.

மனதின் மிகச்சிறிய வேறுபாடுகளை,அதன் திடீர் திருப்பங்களை,அதன் அழகான திருப்பங்களை,திடீரென்று அது தாவிக் குதிப்பதை கவனி.

மனமானது விளையாடுகின்ற விளையாட்டுகளை,அது நெசவு செய்கின்ற கனவுகளை,கற்பனைகளை,நினைவுகளைக் கவனி.

அது உருவாக்குகின்ற ஆயிரத்தொரு திரையிடல்களைக் கவனி...கவனி.

அங்கு நின்று கொண்டு,தனியாக தூரவிலகி,அதில் ஈடுபடாமல் மனதைக் கவனி.

அப்போது நீ மெல்ல மெல்ல அதை உணர ஆரம்பிப்பாய்.

உனது முழுக்கவனம் எந்த அளவுக்கு ஆழமானதாக ஆகிறதோ அந்த அளவுக்கு உனது விழிப்புணர்வு ஆழமானதாக ஆகிறது.

மேலும் அதில் இடைவெளிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.ஒரு எண்ணம் போகிறது.ஆனால் அடுத்த எண்ணம் இன்னும் வரவில்லை.அப்போது அங்கு ஒரு இடைவெளி இருக்கிறது.

ஒரு மேகம் கடந்து சென்றுவிட்டது.அடுத்த மேகம் வந்து கொண்டிருந்தது.அப்போது அங்கு ஒரு இடைவெளி இருக்கிறது.

அந்த இடைவெளியில் மனம் அற்ற நிலையின் சிறு காட்சியை நீ முதன்முறையாக காண்பாய்.

மனம் அற்ற நிலையின் ருசியை நீ தெரிந்து கொள்வாய்.

ஆரம்பத்தில் இவை வெறுமனே அபூர்வமான தருணங்களாக இருக்கும்.

இடைவெளிகள் சிலவாகவும் ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் இடையே அதிக காலம் எடுத்துக் கொள்வதாகவும் இருக்கும்.

ஆனால் சமாதி நிலை என்றால் என்ன என்கிற ஒரு சிறிய காட்சியை உனக்கு கொடுக்கும்.

சிறிய குளம் போன்ற அமைதி வரும்,அதன் பின்னர் அது மறைந்து விடும்.

ஆனால் இப்போது நீ சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை நீ தெரிந்து கொள்வாய்.

எனவே மீண்டும் கவனிக்க ஆரம்பி.

ஓஷோ....

திங்கள், 17 நவம்பர், 2025

தமிழ்நாட்டு கோயில்களும் பலன்களும்

எந்த கோவிலுக்கு சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்!
ஆயுள் பலம் அருளும் பரிகார தலங்கள்.
ஆரோக்கிய வாழ்வு அருளும் பரிகார தலங்கள்.
ஆயுள் பலம் அருளும் பரிகார தலங்கள்!

1. அமிர்தகடேஸ்வரர் கோவில்,திருக்கடையூர்

2. எமனேஸ்வரமுடையார் கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி

3. காலகாலேஸ்வரர் கோவில், கோவில்பாளையம்,

4. சித்திரகுப்தசுவாமி கோவில், காஞ்சிபுரம்,

5. தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி,

6. ஞீலிவனேஸ்வரர் கோவில். திருப்பைஞ்ஞீலி.

7. வாஞ்சிநாதசுவாமி கோவில், வாஞ்சியம்.

ஆரோக்கிய வாழ்வு அருளும் பரிகார தலங்கள்!

1. தன்வந்திரி கோவில், ராமநாதபுரம், கோவை.

2. பவஒளஷதீஸ்வரர் கோவில், திருத்துறைப்பூண்டி.

3. பிரசன்னவெங்கடேச பெருமாள் கோவில், குணசீலம்.

4. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்.

5. மகா மாரியம்மன் கோவில், வலங்கைமான்.

6. வைத்தியநாதசுவாமி கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

7. வைத்தியநாதசுவாமி கோவில், வைத்தீஸ்வரன் கோவில்.

எதிரி பயம் போக்கும் பரிகார தலங்கள்

1. அங்காளம்மன் கோவில், மேல்மலையனூர்.

2. அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.

3. காலபைரவர் கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.

4. காளமேகப்பெருமாள் கோவில், திருமோகூர்.

5. காளிகாம்பாள் கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.

6. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் கோவில்,அதியமான்கோட்டை.

7. தில்லைகாளியம்மன் கோவில், சிதம்பரம்.

8. பிரத்யங்கராதேவி கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.

9. மாசாணியம்மன் கோவில், ஆணைமலை.

10. முனியப்பன் கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.

11. ரேணுகாம்பாள் கோவில், படவேடு.

12. வெட்டுடையார் காளியம்மன் கோவில், கொல்லங்குடி

கடன் பிரச்சினை தீர்க்கும் பரிகார தலங்கள்

1. அன்னமலை தண்டாயுதபாணி கோவில், மஞ்சூர், ஊட்டி

2. கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு.

3. சாரபரமேஸ்வரர் கோவில், திருச்சேறை, கும்பகோணம்.

4. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.

5. திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோவில், திருமலை.

கல்வி வளம் பெருக அருளும் பரிகார தலங்கள்

1. கரிவரதராஜ பெருமாள் கோவில், மாதவரம், சென்னை

2. தேவநாதசுவாமி கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.

3. மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.

4. வரதராஜபெருமாள் கோவில், செட்டிபுண்ணியம்.

குழந்தைப்பேறு அருளும் பரிகார தலங்கள்

1. ஏகம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்.

2. சங்கரராமேஸ்வரர் கோவில், தூத்துக்குடி.

3. சிவசுப்ரமண்யசுவாமி கோவில், குமாரசாமி பேட்டை, தர்மபுரி.

4. தாயுமானசுவாமி கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

5. பாலசுப்ரமணியசுவாமி கோவில், ஆயக்குடி, தென்காசி.

6. மயூரநாதசுவாமி கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.

7. முல்லைவனநாதசுவாமி கோவில், திருக்கருகாவூர்.

8. நச்சாடை தவிர்தருளியசுவாமி கோவில், தேவதானம், ராஜபாளையம்.

9. விஜயராகவபெருமாள் கோவில், திருபுட்குழி.

குடும்பத்தில் ஒற்றுமை அருளும் பரிகார தலங்கள்

1. அகத்தீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம்.

2. அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருச்செங்கோடு.

3. அங்காளம்மன் கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்.

4. கல்யாணவிகிர்தீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூ டலூர்.

5. சங்கரநாராய ணசுவாமி கோவில், சங்கரன் கோவில்.

6. நவநீதசுவாமி கோவில், சிக்கல்.

7. பள்ளிக்கொண்டீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி.

8. மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா கோவில், மஞ்சக்கம்பை.

9. மாரியம்மன்,காளியம்மன் கோவில், ஊட்டி

10. லட்சுமி நரசிம்மர் கோவில், பரிக்கல்.

11. வெக்காளியம்மன் கோவில், உறையூர்

12. தலசயனப் பெருமாள் கோவில், மாமல்லபுரம்.

செல்வ வளம் அருளும் பரிகார தலங்கள்

1. அனந்தபத்ம நாப சுவாமி கோவில், அடையாறு.

2. அஷ்டலட்சுமி கோவில், பெசன்ட் நகர், சென்னை.

3. கைலாச நாதர் கோவில், தாரமங்க லம்.

4. பக்தவச்சலப்பெருமாள் கோவில், திருநின்றவூர்.

5. மாதவப்பெருமாள் கோவில், மயிலாப்பூர்.

திருமணத்தடைகள் நீக்கும் பரிகார தலங்கள்

1. உத்வாகநாதசுவாமி கோவில், திருமணஞ்சேரி.

2. கல்யாணபசுபதீஸ்வரர் கோவில், கரூர்.

3. கல்யாணவேங்கடரமணசுவாமி கோவில், தான்தோன்றிமலை.

4. கைலாசநாதர் கோவில், தாரமங்கலம்.

5. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் கோவில், பாரிமுனை.

6. பட்டீஸ்வரர் கோவில், பேரூர். கோவை.

7.நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை.

8. வரதராஜபெருமாள் கோவில், நல்லாத்தூர்.

9. வீழிநாதேஸ்வரர் கோவில், திருவீழிமழலை.

தீவினைகள் அகன்றிட அருளும் பரிகார தலங்கள்

1. காலபைரவர் கோவில், குண்டடம்.

2. காளிகாம்பாள் கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.

3. குறுங்காலீஸ்வரர் கோவில், கோயம்பேடு.

4. சரபேஸ்வரர் கோவில், திருபுவனம்.

5. சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.

6. பண்ணாரிமாரியம்மன் கோவில், பண்ணாரி.

நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர அருளும் பரிகார தலங்கள்

1. அக்னீஸ்வரர் கோவில், திருப்புகலூர்.

2. தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தீர்த்தமலை, அரூர்.

3. பூவராகசுவாமி கோவில், ஸ்ரீமுஷ்ணம்.

4. வராகீஸ்வரர் கோவில், தாமல். காஞ்சீபுரம்.

நோய், நொடிகள் தீர்க்கும் பரிகார தலங்கள்

1. இருதயாலீஸ்வரர் கோவில், திருநின்றவூர்.

2. தோரணமலை முருகன் கோவில், தோரணமலை.

3. பண்ணாரிமாரியம்மன் கோவில், பண்ணாரி.

4. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்.

5. வீரராகவர் கோவில், திருவள்ளூர்.

6. வீழிநாதேஸ்வரர் கோவில், திருவீழிமழலை.

7. வைத்தியநாதசுவாமி கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.

பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு அருளும் பரிகார தலங்கள்

1. தாயுமானசுவாமி கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

2. பாதாள பொன்னியம்மன் கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.

3. மகாதேவர் கோவில், செங்கனூர்.

முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த பரிகார தலங்கள்

1. சங்கமேஸ்வரர் கோவில், பவானி.

2. மகுடேஸ்வரர் கோவில், கொடுமுடி.

3. வரமூர்த்தீஸ்வரர் கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.

4. வீரராகவர் கோவில், திருவள்ளூர்.

5. ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்.

6. திருப்பள்ளி முக்கூடல். குருவிராமேஸ்வரம் கோவில், திருவாரூர்

7. காசி விஸ்வநாதர்

8. பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்

9. சொரிமுத்து அய்யனார் கோவில்

10. பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்

புதன், 5 நவம்பர், 2025

தமிழ் சினிமாவில் தமிழினத்தின் வரலாறு மறைமுகமாக.

நாதன் என்றால் நா+ தன் நாவை தன்னிடம் கொண்டவன் அதாவது முதல் முதலில் பேசியவன் என்ற பொருள். சிவனே முதல் முதலில் மக்களை பேச வைத்தவர் என்பதால் அவரே பேச்சியப்பன் மற்றும் நாதன் என்ற பெயருக்கு சொந்தக்காரர். சிவனை வழிபட்டவர்களுக்கும் நாதன் என்ற பெயர் வரும். 

இரவு வானத்தை ஆராய்ச்சி செய்ததால் 
ரா + வாணன் = ராவணன்
 என்ற பெயர் வந்தது. ராவணன் ஒரு விண் ஆராய்ச்சி சித்தர். தமிழில் விசும்பு என்பதற்கு வானம் , விண் என்ற பொருள் உள்ளது. சிவனை வணங்கிய ராவணன் தான்  விசுவநாதன்.

காசி விஸ்வநாதன் என்பது ராவணனை குறிக்கிறது ராமேஸ்வரத்தை ராமனின் இடமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். அதனால் தான் இரண்டு இடத்தையும் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் மறைமுகமாக. எல்லாவற்றிலும் ராமனையும் ராவணனையும் இணைத்து விளையாடுவது யூதர்களின் பழக்கம். 

ராவணன் இசையில் தேர்ந்தவன் , சினிமா துறையிலும் ராவணன் ராமனை குறிப்பதற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இணையரை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக பணியாற்றி பின்பு பிரிந்து விட்டதாக சொல்கிறார்கள். ராவணனும் ராமனும் ஒன்றாக இருக்க முடியாது அல்லவா அதனால் தான் இந்த சடங்கு போல. விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற ஒரு படத்தில் இருவருக்கும் ஒரே பெண்ணையே மனைவி போல காட்டுவார்கள்.

தமிழ் திரைப்படங்களில் பல படங்களில் ராவணன் ராமனை மறைமுகமாக கதாபாத்திரமாக மாற்றி கதை சொல்லி இருப்பார்கள். அதில் ஒரு படம் தான் வசூல்ராஜா எம்பிபிஎஸ் இதில் ராஜாராம் அதாவது ராமனாக கமலும் விஸ்வநாதன் என்று வில்லனாக பிரகாஷ்ராஜும் நடித்திருப்பார்கள். கமலுக்கு ஜோடியான சினேகாவின் பெயர் ஜானகி அதாவது சீதை. 

இந்தப் படத்தில் ராமன் ஒரு படிக்காதவன் மேலும் காட்டில் வழிபறி செய்துதான் பிழைத்துக் கொண்டிருந்தான் என்பதை மறைமுகமாக சொல்லி  இருக்கிறார்கள். வட்டி என்ற பெயருடன் வரும் பிரபு கதாபாத்திரம் லட்சுமணனை குறிக்கலாம் கருணாஸ் கதாபாத்திரம் அனுமனை குறிக்கலாம் குரங்குகள் உயரத்தில் வாழும் இந்த படத்தில் அதற்கு எதிராக கருணாஸ் உயரத்தை கண்டால் பயப்படுவார். மார்க்கபந்து விபிடணனை குறிக்கலாம். 

டாக்டர் விசுவநாதன் என்று சொல்வதன் மூலம் ராவணன் தன் காலத்தில் மிகப்பெரிய மருத்துவராக இருந்தார் என்று புரிகிறது. இதில் காதல் தோல்வியில் விஷத்தை குடித்த கதாபாத்திரத்திற்கு நீலகண்டன் என்று சிவனின் பெயரை வைத்து சிவனை இழிவு படுத்தி இருப்பார்கள். 

வேட்டையாடு விளையாடு படமும்  இராமாயண கதை தான். ஆடு என்பது ராமனை குறிக்கிறது காட்டில் வந்தவர்களை எல்லாம் வேட்டையாடி விளையாடி இருக்கிறார்கள். கமலின் பெயர் ராகவன் அதாவது ராமனின் பெயர். அமுதன் இளமாறன் என்ற இரட்டையர்கள் ராவண இந்திரர்களை குறிக்கலாம். இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் கமல் ராமனாகவும் ஒரு சில காட்சிகளில் ராவணனாகவும் மாறுவது போல கதை அமைத்திருக்கிறார்கள். வில்லன்களை மருத்துவர்களாக காட்டி இருக்கிறார்கள் அதனால் ராவண இந்திரன் மிகப்பெரிய மருத்துவர்கள் என்பது புரிகிறது.

வில்லன்கள் காட்டில் பெண்களை வேட்டையாடுவது ராம லட்சுமணனை குறிக்கிறது. ராம லக்ஷ்மணன் இடையில் ஓரின சேர்க்கையும் இருந்தது என்பதை மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். 
இதில் சீதையாக வரும் ஜோதிகாவை மண்ணில் புதைப்பார்கள் ராமாயணத்திலும் கடைசியில் சீதை பூமாதேவியுடன் மண்ணுக்கே சென்று விடுவார் அதே போல சீதை பிறக்கும்போது மண்ணிலிருந்து வந்ததாகத்தான் காட்டுவார்கள். ஏனென்றால் சீதை என்பது ஒரு நிலம் என்பதை மறைமுகமாக குறிக்க. 
நானே வருவேன் என்ற தனுஷ் படத்தில் தனுஷ் கதாபாத்திரம் ராமனை தான் குறிக்கிறது அதிலும் காட்டில் வருபவர்களை கொடூரமாக கொள்ளும் மனநோயாளி போல தான் தனுஷை காட்டி இருப்பார்கள். இவர்கள் திரும்பத் திரும்ப ராமன் ஒரு கொலைகாரன் மனநோயாளி என்பதை தான் படங்களின் மறைமுகமாக பதிவு செய்கிறார்கள். இந்தப் படத்தின்  தேதி செப்டம்பர் 29 அதாவது ஒன்பதாவது மாதம் 29 என்பது 2+9=11 குறிக்கிறது. அதாவது 9/11

இதைப் பற்றி சுசித்ரா ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கிறார்.
https://youtu.be/jGAt7jkqKPU?si=txxfazZE_Gs9xkg1

மேலும் பொல்லாதவன் படிக்காதவன் படங்கள் கூட ராமனை தான் மறைமுகமாக குறிக்கிறது. ராமனின் எண் 9 ( ராம நவமி) திருநங்கைகளை குறிக்கிறது எனவே ராமன் ஒரு திருநங்கையாக இருந்திருக்க வேண்டும்.

உண்மைக்கு மாறாக ராமனை ஏதோ பெரிய கதாநாயகன் போல சித்தரித்து பொய்யான ராமாயண கதையை எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் மறைமுகமாக ராமனின் உண்மை வரலாற்றை திரைப்படங்களில் காட்டுகிறார்கள் இந்த மன நோயாளிகள்.

 தமிழர் மெய்யியல் ஆசிவகம் (Facebook)