இன்றைய மனிதர்கள் தன்னுடைய வாழ்வில் சரியான முடிவு எடுக்கும் திறன் அற்றவர்களாகவே இருக்கிறார்கள். இது இன்றைய கல்விமுறையின் வாழ்வியல் முறையின் கொடை ஆகும்.
நம்முடைய உள்ளுணர்வு நம்முடன் எப்போதுமே தொடர்பில் இருக்கும்.நாம் ஒவ்வொரு செயல் செய்யும் போதும் அது உணர்த்திக் கொண்டே இருக்கும் எது சரியான முடிவு என்று.
நாம் யாருமே உள்ளுணர்வை கவனிப்பதே இல்லை. நாம் நம்முடைய அறிவை பயன்படுத்தி எடுக்கக்கூடிய முடிவுகள் எல்லாம் பொருளாதாரம் சார்ந்த முடிவுகளாகவே இருக்கிறது.
நாம் இயல்பாக நமக்கு பிடித்ததை தேர்வு செய்வதே இல்லை. தேர்வு செய்வது எல்லாமே பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே தேர்வு செய்கிறோம். அது நிச்சயம் சரியான முடிவாக இருக்காது.
பிற்காலத்தில் அந்த முடிவுக்காக நாம் வருத்தப்பட வேண்டி வரலாம்.
இன்றைய மனிதர்கள் அவர்களுடைய உள்ளுணர்வை உணர விடாமல் தடுப்பதுதான் இன்றைய கல்விமுறையின் தலையாய வேலையாக இருக்கிறது.
நமக்கு பிடித்ததை செய்வோம். மற்றவர்களின் பேச்சுகளை காதில் வாங்காமல் பயணிப்போம்.
நல்வாழ்வு நமதே ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக