வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு கன்னி அம்மன் வழிபாடும்
ஏழு கன்னி அம்மன் வழிபாட்டிற்கும் வாரத்தின் 7 நாட்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தலைப்பை பார்த்தவுடன் என்ன தோன்றும். ஆனால் சம்பந்தம் இருக்கிறது.
முதலில் ஆங்கில ஏழு நாட்களுக்கும் தமிழ் ஏழு நாட்களுக்கும் கூட சம்பந்தம் இருக்கிறது. உதாரணமாக ஆங்கிலத்தில் சனிக்கிழமை Saturday என்று அழைக்கப்படுகிறது. Saturn என்பது சனி கிரகத்தை தான் குறிக்கிறது.
அடுத்து ஞாயிற்றுக்கிழமை என்பது ஆங்கிலத்தில் sunday எனப்படுகிறது. Sun என்றாலும் ஞாயிறு என்றாலும் சூரியனை தான் குறிக்கிறது.
அடுத்து நாம் திங்கட்கிழமையை நிலவை குறிப்பது போல் பெயர் வைத்திருக்கிறோம். ஆங்கிலத்தில் அதை moon day என்று அழைப்பதற்கு பதிலாக monday என்று அழைக்கிறார்கள்.
தமிழ் வார நாட்கள் ஒவ்வொன்றும் ஒரு கிரகத்தை குறிப்பது போல் இருக்கும். ஆங்கிலத்தில் மூன்று நாட்கள் மட்டும் அவ்வாறு இருக்கிறது. இதில் இருந்து தமிழ் நாகரிகத்தின் வழியே தான் ஆங்கில வார முறையும் வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
ஒரு காலகட்டத்தில் தமிழர்களுக்கு ஏழு கிரகங்களை பற்றிய அறிவு இருந்தது மேலும் கிரகங்களிலிருந்து வரும் அலைகள் மனிதனை பாதிக்கிறது என்பதை தமிழர்கள் உணர்ந்து இருந்தார்கள்.
உதாரணமாக சூரியனிலிருந்து வரும் அலைகள் நமக்கு சுறுசுறுப்பை தருகிறது வியர்வை கூட வருகிறது. நிலவு இல்லாத அம்மாவாசை நாட்கள் மனிதர்களுக்கு மனநிலையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதை நாம் கண்கூடாக காண்கிறோம். நிலவுக்கு மதி என்று இன்னொரு பெயரும் உள்ளது. நிலவின் அடிப்படையிலேயே அதாவது ஒரு பௌர்ணமி அல்லது அம்மாவாசைக்கும் இன்னொரு பௌர்ணமி அல்லது அமாவாசைக்கும் இடைப்பட்ட நாட்களை வைத்து தான் மாதங்கள் கணக்கிட்டோம். அதனால் மாதங்களுக்கும் திங்கள் என்ற பெயர் உள்ளது.
இந்த ஏழு கிரகங்களின் பாதிப்பிலிருந்து மனிதர்களை தற்காத்துக் கொள்ள ஒரு வழிபாட்டு முறை ஏற்படுத்தப்பட்டது அதுதான் ஏழு கன்னி வழிபாடு.
கிரகம் என்றால் ஆங்கிலத்தில் planet என்று பொருள் எடுத்துக் கொள்கிறார்கள் அது தவறு. உண்மையில் கிரகம் என்றால் பூமியைத் தவிர வேறொரு இடம் என்று தான் பொருள்.
வேறு + அகம் = வேறகம் - கேரகம் - கிரகம்
நாம் நம் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு அதாவது ஒரு அகத்தில் இருந்து இன்னொரு அகத்திற்கு செல்வதை கிரகப்பிரவேசம் என்கிறோம்.
தமிழர்களின் மெய்யியலான சமணம் என்ற ஆசீவகத்தின் முக்கியமான முதல் வழிபாடு இந்த ஏழு கன்னி வழிபாடுதான். இதை உருவாக்கியவர் மிக முக்கியமான சித்தரான நாம் கடவுளாக வணங்கும் முருக சித்தர் தான்.
இதற்கு ஆதாரம் வட ஆப்பிரிக்க நாடுகளான பெர்பெர் நாடும் எகிப்து நாடும் முருகரை அம்மன் என்றே அழைக்கிறது. அம்மன் கோயில் சிவா ஓசிஸ் ( siwa oasis )என்ற இடத்தில் தான் உள்ளது.
அந்த நாகரிகங்களும் தமிழ் நாகரீகங்கள் தான். முருகருக்கு மயில், யானை, ஆடு போன்ற வாகனங்கள் உள்ளது அதில் ஆட்டை அவர்கள் முருகனோடு இணைத்து வழிபட்டார்கள்.
முருக சித்தர் ஏழு பெண் உருவக கடவுள்களை ஏழ கோள்களுக்கு நிகராக உருவாக்கினார். இதில் கருப்பு நிறத்திற்கான கடவுள் ஆன காளி வழிபாடு மிகப் பழமையான வழிபாடு அதையும் ஏழு அம்மன்களில் ஒன்றாக முருகர் சேர்த்துக் கொண்டார்.
ஏழு அம்மன் சிலைகளை வைக்காமல் ஒரே சிலையாக வைத்து ஏழு நாட்களுக்கு அலங்காரத்தை உடுத்தும் உடையின் நிறத்தை மாற்றி ஒவ்வொரு அம்மனாக வழிபடும் முறை தான் மாரியம்மன் வழிபாட்டு முறை. இதை கேரளத்தில் பகவதி அம்மன் என்கிறார்கள் அதாவது வகை வகையாக வதிப்பதால் வகைவதி என்று அழைக்கப்பட்டு அதுவே பின்பு பகவதி என்று மாறியது.
தமிழர் சமயம் ஆசிவகம் என்ற சமணம். இதன் கடவுள் வழிபாடு தான் இந்த ஏழு கன்னி , ஏழு முனி வழிபாடு
ஆசிவகம் நிற கொள்கை கொண்ட சமயம் . சமணர்கள் என்ற சித்தர்கள் மக்களுக்கு தாங்கள் உறங்கும் பள்ளிகளுக்கு அருகே கல்வி போதித்தார்கள் . மொத்தம் 18 வருட படிப்பு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒரு நிறம் . மொத்தம் ஆறு நிறம் . ஏழாவது நிலை நீர்வண்ண நிலை என்ற நிர்வாண நிலை இந்த நிலை அடையும் ஒரு சிலர் மட்டுமே முக்தி என்ற கடை நிலை அடைந்தவர்களாக போற்றப்பட்டனர் . சித்தர்களை மக்கள் அண்ணன் என்று அன்போடு அழைத்தார்கள் சித்தர் அண்ணன் வாசல் சித்தன்னவாசல் ஆகியிருக்கிறது அங்கும் சமண ஓவியங்களே இருக்கிறது. திரு அண்ணா மலை என்ற திருவண்ணாமலையிலும் சமண வாழ்விடங்கள் நிறைய உள்ளது. தமிழர்களை அடிமைப்படுத்த இந்த சமண சித்தர்களை வதை செய்து ஆரியர்கள் கொன்றார்கள் அதுவே சித்தர் வதை சித்திரவதை என்ற வார்த்தை உருவாக காரணம். சமண கழுவேற்றம் இதைத்தான் குறிக்கிறது.
தமிழர் மெய்யியல் ஆன ஆசீவகத்தை 6 சமயங்களாக சைவம் ,வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம் ,சௌரம் என்பது போல ஆரியர்கள் பிரித்து அழித்தார்கள். களப்பிரர் காலத்தில் நம்மை ஆண்டது ஆரியர்களே, பதினான்காம் நூற்றாண்டில் பிராமண அடிமைகளான விஜயநகர ஆட்சியில் ஆசீவகம் முற்றிலுமாக அழிந்து போனது.
முதல் வண்ணம் - கருப்பு - பெண்கடவுள் = காளி , ஆண் கடவுள் = காலன் என்ற சிவன் , தொடர்புடைய கோள் = சனி
இரண்டாம் வண்ணம் - நீலம் - பெண்கடவுள் = நீலாம்பரி என்கிற நீல காளி , தொடர்புடைய கோள் = சந்திரன்
மூன்றாம் வண்ணம் - பச்சை - பெண்கடவுள் = பச்சையம்மா , வள்ளி , மீனாட்சி , துரோபதி , பாஞ்சாலி ( அனைவரும் ஒரே கடவுளே ) , தொடர்புடைய கோள் = புதன்
நான்காம் வண்ணம் - சிவப்பு - பெண்கடவுள் = லட்சுமி , ஆண் கடவுள் - விஷ்னு , தொடர்புடைய கோள் = செவ்வாய்
ஐந்தாம் வண்ணம் - மஞ்சள் - பெண்கடவுள் = பொன்னாம்பால் , கனகம் , தொடர்புடைய கோள் = வெள்ளி
ஆறாம் வண்ணம் - வெள்ளை - பெண்கடவுள் = சரஸ்வதி , ஆண் கடவுள் - பிரம்மன் ( முருகர் தான் பிரம்மன், பெரிய+ அமணன்= பேர்+ அமணன்= பேரமணன்= பிராமணன் = பிரம்மன்) ,தொடர்புடைய கோள் = வியாழன்.
ஏழாம் வண்ணம் - நீர்வண்ணம் - பெண்கடவுள் = காவிரியம்மா ,கங்கையம்மா , தொடர்புடைய கோள் = சூரியன்
கன்னி கோயில் கன்னிகளில் முதல் கன்னி கருப்பு நிறத்திலும் சிறிய அளவு இருக்க வேண்டும் . கடைசி கன்னி பெரிய அளவில் இருக்க வேண்டும் இதுவே முனிகளுக்கும் பொருந்தும் ஆனால் பழைய இந்த வழிபாடு தன் வளமையை இன்று இழந்து உள்ளது .அளவு நிறம் சரியாக இன்று கடைபிடிக்க படுவதில்லை .
இதே வழிபாடு சுமேரிய கலாசாரத்தில் அனுநாகி ( ஏழு நாயகி ) என்ற பெயரில் உள்ளது .
ஐரோப்பாவிலும் ஏழு தேவதைகள் ( sevan angles , sevan archangles ) என்ற பெயரில் உள்ளது .
ஒலிம்பிக் கொடியில் கூட இந்த ஆறு வண்ணங்கள் உள்ளது.
எல் என்றால் வெளிச்சம் சூரியன் , எல்லப்பன்
அல் என்றால் இருட்டு , அல்லி இரவில் பூக்கும் மலர் , அல்லும் என்றால் இரவு
தமிழர்கள் வெளிச்சம் இருட்டு இரண்டையும் வழிபட்டனர் .
எல் + அல் +அன் = எல்லாளன்
ஆனால் அரேபியர் வெய்யில் கொடுமையால் இருளை மட்டும் "அல்லா" என்று வழிபட்டனர் .
ஐரோப்பியர் குளிரின் கொடுமையால் வெளிச்சத்தை " எல்லோஹிம் (Elohim ) " என்று வழிபட்டனர்.
ஏழு கன்னிகளில்
காவேரி அம்மன் = காவேரி எல் = கேபிரியல் ( Gabriel )
மீனாட்சி அம்மன் = மட்சம் ( மீன் ) எல் = மிச்சேல் = மைக்கேல் ( Michel )
காளி அம்மன் = ரா ( இருட்டு ) எல் = ரபேல் ( Raphael )
அங்கு என்ற தமிழ் வார்த்தைக்கு வளைவு என்று பொருள் , வளைவாக இருப்பதால் அங்குசம் ,அங்கூரம் என்ற பெயர் பெற்றன. இந்த அங்கு என்ற தமிழ் வார்த்தையை தான் ஆங்கிலத்தில் கோணத்தை குறிக்கும் angle என்ற வார்த்தைக்கு மூலம். Angel என்ற வார்த்தைக்ககும் "அங்கு" என்ற வார்த்தை தான் மூலம். வட்டமான வளைவு பாதையில் கோள்கள் செல்வதால் அவைகளை ஏஞ்சல் என்று உருவகப்படுத்தினர். ஆகாயத்தில் மிதந்து உருளும் கோள்களை ரக்கை உள்ள பெண்களாக உருவகப்படுத்தினர். நம் ஏழு கன்னிகளும் 7 கோள்களோடு தொடர்புடையது.
தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி தமிழ் கலாச்சாரமே உலகின் மூல கலாச்சாரம்.
தமிழர்களின் உண்மையான வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஆரியபிராமணர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் கட்டுக்கதைகளை நாம் நம்ப கூடாது.
விழித்துக் கொள்வோம் பிழைத்துக் கொள்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக