திங்கள், 31 மார்ச், 2025

பெண்கள் நமது கண்கள்

தமிழ் சமூகத்தில் பெண்களை சார்ந்துதான் குடும்பங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். இதை அறிந்த உலக வல்லாதிக்க சக்திகள்,பெண்களின் சிந்தனைகளை சிதைக்க பல வழிகளில் முயற்சித்து வருகிறது. புராண கூத்துகள்(கதைகள்) மேடை நாடகங்கள், திரைப்படங்கள்,தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் பத்திரிகைகள் இவைகளில் பெண்களைப் பற்றி தரக்குறைவாக சித்தரிப்பார்கள். பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பதை ஆண்களின் பொது புத்தியாகவே ஆக்கி இருப்பார்கள். பெண்களின் சிந்தனையில் அல்லது அவர்களுடைய ஆழ்மனதில் எதிர்மறையான சிந்தனைகளை பதிவு செய்துவிட்டால் அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த கதையும் அதோ கதை தான். பெண்கள் மட்டுமல்ல பெண்கள் ஆண்கள் எல்லோருக்குமே ஆழ்மனதில் ஒரு கருத்தை பதிவு செய்துவிட்டால் அந்த கருத்துப்படி தான் அவர்கள் தொடர்ந்து இயங்குவார்கள். இதில் பெண்களின் ஆழ்மனம் அடிக்கடி விழிப்பு நிலைக்கு வந்து விடும் ஏனென்றால் பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலையில் தான் அவர்களுடைய மனம் இயங்கும். உணர்ச்சிவசப்படும்போது ஆழ்மனம் வெடிப்பு நிலைக்கு வந்து விடும் அந்த நேரத்தில் சிந்திக்கும் சிந்தனைகள் அத்தனையும் ஆழ் மனதில் பதிவாகிவிடும் ஆழ்மனதில் பதிவாகிவிட்ட சிந்தனைகள் அனைத்தும் அவர்களுடைய வாழ்வில் தொடர் நிகழ்வுகள் ஆகிவிடும் இதை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது. என்னுடைய புருஷன் சரியில்ல என்னுடைய புல்லை சரியில்ல என்று எந்த வீட்டில் பெண்கள் புலம்பி கொண்டிருக்கிறார்களோ அந்த வீட்டினுடைய கணவனும் குழந்தைகளும் கண்டிப்பாக சரியில்லாமல் போய்விடுவார்கள் இது இயற்கையின் நியதி. ஆணா பெண்ணோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும்போது ஆழ்மனம் விழிப்பு நிலைக்கு வந்து விடும் ஆழ்மனம் தான் பிரபஞ்சத்தின் ட்ட்ழ்மனதில் பதிவாகிவிட்ட கருத்துகள் பிரபஞ்சத்தில் பதிவாகி வாழ்க்கையின் தொடர் நிகழ்வுகள் ஆகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக