ஒரு காலத்தில் பால் காலை நேரத்தில் மட்டும் தான் கிடைக்கும். இப்பொழுது பால் 24 மணி நேரமும் கிடைக்கிறது. எப்போ வேண்டுமானாலும் கடைக்கு சென்றால் பால் வாங்கிக் கொள்ளலாம். அப்படி ஒரு நவீன வாழ்வியல் முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் வீட்டிற்கு அருகில் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு வீட்டில் தான் பால் கிடைக்கும். அந்த வீட்டில் உள்ள முதியவர்கள் பால் மோர் போன்றவை வீட்டில் வைத்துக்கொண்டு கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய வீட்டில் தான் பால், பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர் வெண்ணெய் நெய் இவைகள் எல்லாம் கிடைக்கும். அவர்களுடைய வீட்டில் தான் பால் வாங்குவோம். அதுவும் குழந்தை இருக்கும் வீட்டில் மட்டுமே பால் வாங்கும் பழக்கம் இருந்தது மற்றவர்கள் யாரும் பால் பயன்படுத்துவது இல்லை. அப்படி ஒரு நிலைமை அந்த காலத்தில் இருந்தது. இந்த காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை எழுந்த உடனே பால் தான் கேட்கிறார்கள். அந்த பாலில் காபி, டீ என்று பலவகையாக பயன்படுத்துகிறார்கள். பால் வணிகம் என்பது 1990 காலகட்டத்திற்கு பிறகு தான் ஆரம்பிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் தான் பாலை வாங்கி சேமிக்கும் பழக்கமும் உருவானது. இன்று பால் வணிகம் என்பது பல கோடி ரூபாய் புரளும் மிகப்பெரும் தொழிலாக வளர்ந்து இருக்கிறது. வெண்மை புரட்சிக்கு பிறகு வெளிநாட்டு மாடுகள் இறக்குமதியான அதற்குப் பிறகு பால் வணிகம் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு கோடியே லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது என்றால் ஒரு நாளைக்கு விற்பனையாகும் பாலின் அளவு 5 கோடி லிட்டராக இருக்கிறது. பால் வணிகத்தில் இது எப்படி என்று தான் புரியவில்லை. செயற்கை பால் ரசாயனம் கலந்த பால்கள் அதிகமாக விற்பனையாகிறது. அந்தப் பாலை குடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் புதிய புதிய வியாதிகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் முதியவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. 60 வயதை கடந்தவர்கள் பால் சார்ந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. பால் பருகுவதால் நமது உடலில் பித்தம் அதிகரிக்கிறது. பித்தம் என்றால் நமது ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. ரத்தத்தில் அமிலத்தன்மை நீண்ட நேரம் நீடித்தால் அந்த உடல் அழிவை சந்திக்கும் என்பதால் அமிலத்தன்மையான இரத்தத்தை காரத்தன்மைக்கு மாற்றுவதற்காக உடலில் எலும்புகளில் உள்ள சுண்ணாம்பு சத்தை எடுத்து அமிலத்தன்மை காரமாக மாற்றுகிறது. நமது உடல் இதேபோல் அடிக்கடி தொடர்ந்து கொண்டிருந்தால் நமது உடலில் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. சுண்ணாம்புசத்து பற்றாக்குறையினால் எலும்புகள் வலு இழக்கிறது.
@selvaraju
30/07/2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக