புதன், 21 மார்ச், 2012

                           பழமொழி ;
      பழமொழி ஒரு சின்ன வாக்கியம் தான்
      ஆனால்,நீண்ட அனுபவத்தை உள்ளடக்கியது.
                        தைரியம்;
      தைரியம் என்பது வேறில்லை ,
      நம் பயத்தை எதிராளிக்கு தெரியாமல்
      மறைப்பது!
                நேற்று இன்று நாளை;
      இன்றைய தினத்தின் பெரும் பகுதியை நேற்றைய தினம்
       அபகரித்து விடாமல் பார்த்துகொள் ,அப்போதுதான்
        நாளைய தினம் உன் வசமாகும்.
                  மூன்று முத்துகள்;
      கேள் மறந்து விடுவாய்,
      பார் நினைவு கொள்வாய்,
      செய் புரிந்துகொள்வாய்!
                      புகழ்ச்சி;
      உன் தகுதிக்கு மீறி உன்னை ஒருவர் புகழ்கிறாரா?
      உண்மையில் உன்னை அவர் இகழ்கிறார்! 
        
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக