ஞாயிறு, 3 டிசம்பர், 2023

ஆசீவக சித்தர் பாடல்

🪷🪷🪷🐘🐘🐘✈️☸️☸️☸️🙏🏽🙏🏽🙏🏽
*ஆசீவக சித்தர்கள் குபேரன், ராவணன், கும்பகர்ணன் இந்திரன் வழிபாட்டுப் பாடல்கள்*   

     *ராவணன் போற்றி*
     """"""""""""""""''''"""""""""""""""""
     1.
     வாச சாத்திர
         வடதிசை யமர்ந்து
     தாச முன்னவன்
         இலங்கை யாண்டவன்
     எல்லா வளமும்
         செல்வமும் அருளும்
     செல்வ அதிபதி
         *குபேரன் போற்றியே*

     2.
     முன்னவ குபேர
         மன்னவ னிடத்தே
     தென்னகம் வரையென
         தனிப்பெரும் பரப்பை
     பின்னென ஆளும்
         தாயமும் பெற்ற
     தென்னவ அரசன்
         ராவணன் போற்றியே

     3.
     யாழிசை வடிவை
         நரம்புகள் பூட்டி 
     ஏழிசை வடிவில்
         வீணையை செய்தே
     அகமென விரிந்த
         ஆட்சியின் பரப்பில்
     அகலிசை விரித்த
         ராவணன் போற்றியே

     4.
     புல்லெனும் பறவையின்
         நுட்பத்தை யறிந்து
     புல்வகை விமான
          வடிவினை யமைத்தே
     புட்பக விமான
         பறவைல் ஏறி     
     சட்டென பறந்த
         ராவணன் போற்றியே

     5.
     சிகர மேலிருந்து
         விண்ணை நோக்கியே
     நகரும் தீயென
         ஞாயிறு விண்மீன்
     கோள்களின் தாக்கம்
         மனிதரின் மீதெனும்
     குறிப்பினை யறிந்த
         ராவணன் போற்றியே

     6.
     விண்தீ   ஞாயிறும்
         கோள்களின் சுழற்சி  
     மண்வாழ் மனிதரின்
         விதியென உணர்ந்தே
     பாதகச் சூழலை
         குறிப்பா லுணர்ந்து
     சாதக மாக்கிய
         ராவணன் போற்றியே

     7.
     பத்துத் தலையென
         உருவகம் கொண்ட
     பத்துக் கலைகளில்
         சிறப்புடன் விளங்கிய
     சித்தம் பொருந்திய
         இலங்கையின் ஈசன்
     சித்தரு மான
         ராவணன் போற்றியே

     8.
     ஏழென அவற்றுடன்
         நிழற்கோள் இரண்டும்
     யாழெனும் வடிவில்
         வீணையில் ஒன்றென
     முகமென பத்தும்
         உருவகம் தானே
     சிவமுனி தாசனாம்
         ராவணன் போற்றியே

     9.
     சிவனின் மருத்துவ
         முறையினை யறிந்து
     சிவமுனி நாதனை
         சிந்தையில் வைத்தே
     சித்த மருத்துவ
         குறிப்பென தந்த
     சிவனின் பித்தன்
          ராவணன் போற்றியே         

     10.
     மாமுனி மயனின்
         மருமகன் போற்றி
     மண்டோ தரியின்
         மணாளன் போற்றி
     கும்ப கரணனின்
         சோதரன் போற்றி
     இந்திர சித்தின்
         தந்தையைப் போற்றியே

     11.
     ஓகத்தில் உயர்ந்த
         அமணனைப் போற்றி
     விமானம் கண்ட     
         ராவணன் போற்றி
     வானத்தில் பறந்த
         வாகனன் போற்றி
     மீன  ராசியாம்
         ராவணன் போற்றியே

     *கும்பகரணன் போற்றி*
     """""""""""""""""""""""""""""""""""""""""
     12.
     ஆக்கத்தைக் குறித்த
         சிவலிங்க வடிவின்
     மாற்றென முருகனின்
         அறுமுனை வடிவை     
     கும்பத்தின் முறையில்
         கூம்பிய கரமென
     மாற்றிய கும்ப
         கரணனைப் போற்றியே

     13.
     கும்பம் இடுவதை
          கூம்பிய கரத்தை    
     கும்பிடும் முறையென
         வழிவகை செய்தே
     கடுந்தவம் புரிந்து
         மகிமத்தை யடைந்த
     கும்ப நிகும்பனின்
         தந்தையை போற்றியே

     14.
     வல்அங்கு முறையென
         வணங்கும் முறையினை
     கும்பம் இடும்முறை
         கூம்பிய கரத்துடன்
     கும்பிடும் முறையினை
         முன்முறை செய்த
     கும்ப கரணனின்
         கும்பத்தை போற்றியே

     *இந்திரன் போற்றி*
     """""""""""""""""""""""""""""""""
     15.
     முன்னவன் பாண்டியன்     
         முருகனை யடுத்து
     தென்னவன் பாண்டியன்
         மாறனின் முன்னவன்
     இலங்கையின் வேந்தனாம்
         ராவண ஈசனின்
     இந்திர சித்தெனும்
         மள்ளனைப் போற்றியே

     16.
     அட்டென கரத்துடன்
         வட்டினை இணைத்து
     சட்கர மென்னும்
         சக்கரம் செய்தே
     வண்டிகள் பூட்டி
         வேளாண் செய்த
     பாண்டிய மள்ளன்
         இந்திரன் போற்றியே

     17.
     ஓகத்தில் உயர்ந்து
         பஞ்சம சித்தியில்
     இலகிமம் சிறந்து
         உயரத்தில் மிதந்து
     மேகத்தை அறிந்து
         மழையினை கணித்த
     மேக வாகனன்
         இந்திரன் போற்றியே

     18.
     சிவனின் சந்திர
         காலந் தெரியை
     முருகனின் சிதரியல்
         காலந் தெரியுடன்
     நேரென சாக்கா
         காலந் தெரியாம்
     வாரண வாகனன்
         இந்திரன் போற்றியே

    19.
     ராவ ணீயத்தின்
         தென்முனை போரில்
     கும்ப கரணனின்
         தலைமையில் வென்று
     வடமுனைப் போரில்
         ராமனை வென்ற
     மேக நாதனாம் 
        இந்திரன் போற்றியே

     20.
     ஓகத்தில் பறந்த
         இந்திர சித்தனும்         
     வாகனம் செலுத்தி    
         பறந்த ராவணன் 
     வான ஓரையில்
         மீன ராசியாம்
     ராவண இந்திர
         இரட்டர்கள் போற்றியே

     21.
     சிவலோ கமெனும்
         சிவனின் உலகமும்
     தேவ லோகமாம்
         முருகனின் உலகமும்         
     அந்தர லோகமும்
         மேகத்திற் கிடையே
     இந்திர லோக
         இந்திரன் போற்றியே
          
     22.
     மேக நாதனாம்
         ராவணன் மகனும்
     ஓகத்தி லமர்ந்து          
         நீர்வண்ண மடைந்த
     இந்திர சித்தன்
         இந்திர னான
     அமரா வதியின்     
         அமரனைப் போற்றியே

     23.
     ஐந்திரம் புரிந்த
         ஐந்திர சித்தன்
     இந்திர சித்தின்
         பெரும்பணி விழவ
     சித்திரை மாதம்
         முழுமதி நாளில்
     இந்திர தேவனின்
         நினைவை போற்றியே

     24.
     இடியா யுதனாம்
         இந்திரன் போற்றி
     மின்ன லாயுதன்
          மீனனைப் போற்றி
     வேளாண் விளைத்த
         மள்ளனைப் போற்றி
     வெள்ளை யானை
         வாகனன் போற்றியே
     
     25.
     சக்கரம் கண்ட
         சாக்கா போற்றி
     எந்திரம் கண்ட
         இந்திரன் போற்றி
     மருதத்தை யாண்ட
         வேந்தனைப் போற்றி
     பெருமணல் உலக
         வாரணன் போற்றியே

     26.               
     இரம்பை ஊர்வசி
         நடனத்தைப் போற்றி
     இசையும் கூத்தும்
         இசைந்தவன் போற்றி
     தேவ லோகத்தின்
         தலைவனைப் போற்றி         
     தேவ இந்திரன்
         போற்றி போற்றியே!!

🛫🛬🛩️✈️☸️☸️☸️🐘🐘🐘🙏🏽🙏🏽🙏🏽

15. அறிவியலும் 
                 உயிரியலும் . . . .
      """"""""""''"""""""""''""""""
214.
     உடலியல் இயக்கம்
          அறிவியல் என்னில்
     உயிரினச் செயல்கள்
          உணர்ச்சிகள் தானே

     215.
     மகிழ்ச்சியும் துன்பமும்
          சரியும் தவறும்
     நன்மையும் தீமையும்
          உணர்ச்சியின் நோக்கே

     216.
     சரியும் தவறும்
          தோன்றுவ தென்னில்
     இடமும் வேண்டும்
          பொழுதும் வேண்டுமே

     217.
     இடமும் பொழுதும்
          காலமும் ஒழுங்கும்
     புறத்திலும் உண்டு
          உயிரிலும் உண்டே

     218.
     சரியும் தவறும்
          நன்மையும் தீமையும்
     உயிரிலும் உண்டு
          புறத்திலும் உண்டே

     219.
     நன்மையும் தீமையும்
          உயிரின ஒழுங்கு
     ஒழுங்கின் விளைவென
          உயிரின நினைவே

     220.
     இடமும் பொழுதும்
          அண்டத்தின் ஒழுங்கு
     ஒழுங்கின் விளைவென
        அண்டத்தின் நினைவே

     221.
     புறநிலை இரண்டென
         இயக்கமும் ஒழுங்கும்
     அகநிலை இரண்டாம்
          சரியும் தவறும்
     நன்மையும் தீமையும்
         மகிழ்ச்சியும் துன்பமும்
     நினைவுடன் ஞாபகம்
          'உயிர்'நிலை தானே.

உயிரினங்களின் உடலியல் இயக்கம் இயற்கை அல்லது அறிவியல் என்றால்
உயிரினங்களின் செயல்பாடு என்பது உணர்ச்சி மயப்பட்ட உயிரியல் தான்.

சரி தவறு, நன்மை தீமை, மகிழ்ச்சி துன்பம் போன்ற உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது உயிரியல் நோக்கமாகும்.

சரி தவறு என்ற கருத்து அல்லது எண்ணம் தோன்ற வேண்டுமெனில் இடமும் பொழுதும் வேண்டும். 
இது உயிரியல் நோக்காகும்.

இடமும் பொழுதுமாகிய காலமும் ஒழுங்கும் அகத்திலும் புறத்திலும் உண்டு.
அதுபோல் சரி தவறு, நன்மை தீமை போன்ற உணர்ச்சிகள் உயிர்களைப் போல் அதாவது அகத்தைப் போல் புறத்திலும் (புற நிகழ்வுகளிலும்) உண்டு.

சரி தவறு, நன்மை தீமை போன்ற உணர்ச்சிகளே உயிரின ஒழுங்குகளாகும்.
அவ் வொழுங்கின் விளைவாக உயிரினங்களின் நினைவு ஞாபகம் அமைந்துள்ளது.
அதுபோல் இடமும் பொழுதும் அண்டத்தின் ஒழுங்குகளாகும் அவ் வொழுங்கின் விளைவாக அண்டத்தின் நினைவு ஞாபகம் அமைந்துள்ளது.

புற நிலைகளாகிய இரண்டு இயக்கமும் ஒழுங்கும். அக நிலை இரட்டைகளாகிய சரி தவறு, நன்மை தீமை, மகிழ்ச்சி துன்பமுமாகிய நினைவு ஞாபகமே அக புற உயிர் நிலையாகும்.

_பாடலாசிரியர் மணிகண்டன் நயினார் அவர்கள்🌺_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக