*இன்றைய ஆசீவக வழிபாட்டுப் பாடல்*
🌟கனக வள்ளி அம்மன்☀️
"""""""""""""" """""""""""""
1.
நாளும் கோளும்
நிறமும் கருத்தும்
ஆளும் தெய்வமும்
பருவமும் ஏழே
வாழ்நிலை ஈதென
வரையறை செய்தே
வீழ்நிலை யறுத்த
எம்பெரு மானே.
2.
வாரண மிரண்டும்
பூமழைப் பொழிய
பொற்றா மரையில்
வீற்றிருப் பாளவள்
பொன்னென புதனில்
அறிவைக்கு அருளும்
பொன்னிறத் தாளே
கனக வள்ளியே!
3.
பொன்னிற மேனியில்
பொற்றா மரையில்
கன்னியின் நிலையில்
கனக வள்ளியே
ஒவ்வொரு புதனும்
பொன்னாம் பாளாம்
ஒவ்வொரு நாளும்
மாரி யம்மனே!
4.
பருவத்தின் பிணைந்த
படிநிலை ஐந்தில்
இருபால் பருவம்
அறிவை மறவோன்
உழைத்தவர் உயர்திட
குடும்பமும் விளங்க
விழைபவ ளெங்கள்
கனக வள்ளியே!
5.
பண்ணிரு ஆண்டுகள்
பருவத்தின் பயனென
எண்ணிரு செல்வமும்
வளம்பெறச் செய்வாள்
மஞ்சள் குங்கும்
மங்கள மருளும்
எங்களின் தாயே
கனக வள்ளியே!
6.
அழைத்தவர் இன்னலை
அகற்றிடச் செய்வாள்!
பிழைத்தவர் தம்மை
போற்றிடச் செய்வாள்!
உழைத்தவர் செல்வத்தை
உயர்ந்திடச் செய்வாள்!
தழைத்தவர் பெருமையை
ஓங்கிடச் செய்வாள்!
7.
அறமா னருளிய
தெய்வமும் நீயே!
திறவோ னீட்டிய
செல்வமும் நீயே!
நெறிநின் றொழுகும்
நற்குணம் நீயே!
தெறிவையின் மஞ்சளை
காத்தருள் வாயே!
8.
பொன்னும் நீயே!
புதனும் நீயே!
மன்னுயிர் காக்கும்
மாரியும் நீயே!
என்றும் நீயே
இருப்பவள் தானே!
அன்னையின் வடிவில்
அருள்புரி வாயே!
9.
வருவாய் அருள்வாய்
திருவாய் மலர்வாய்
வரும்நாள் தோறும்
மாறி மாறியே!
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
20.சுழற்சி
"""""""""""""""
268.
இயல்பி லிருந்தே
விருப்பத் தோற்றமும்
விருப்த்தி லிருந்தே
இருமை தோற்றமும்
இருமையின் வழியே
காரண காரியம்
தன்வினைச் சுழலென
வெளிப்புறம் நோக்கியே
269.
எதிர்வினைச் செயலின்
விளைவென உணர்ச்சி
உணர்ச்சியின் வழியே
இன்பத்தின் ஈர்ப்பும்
ஈர்ப்பே இயல்பென
உட்புறம் நோக்கியே
270.
விருப்பத்தின் வீச்சென
வெளிப்புறம் நோக்கியும்
இன்பத்தின் ஈர்ப்பென
உட்புறம் நோக்கியும்
சுழல்முறை வழக்கென
திரும்பத் திரும்பவும்
உயிரியின் வழக்கென
செயல்முறை சுழற்சியே
271.
தன்மைய சுழற்சியும்
சுற்றி வருதலும்
அண்டத்தின் சுழற்சியாம்
உயிரியைப் போலே
272.
சுழற்சியின் தொடர்ச்சி
உயிரியின் புரிதல்
புரிதல் என்பது
அனுபவம் தானே
செயல்களுக்கு அடிப்படையான விருப்பம் என்பது உயிர்களின் மையமான இயல்பிலிருந்தும்,
அவ் விருப்பத்திலிருந்து இருமையும், இருமையின் வழியாக காரணமும் அக் காரணத்திற்கான காரியமும் தன்வினையாக வெளிப்படுகிறது.
புறச் செயல்களுக்காக எதிர்வினைச் செயலின் போது உணர்ச்சிகள் தோன்றி எதிர்வினைச் செயலின் சாரம் இன்பமாக மாறி இயல்பு மையத்த நோக்கி ஈர்க்கப் படுகிறது.
விருப்பத்தி வீச்சாக அல்லது விளைவாக வெளிப்புறம் நோக்கியும். இயல்பாகிய இன்ப ஈர்ப்பு என்பது உள் மையத்தை நோக்கியும் சுழல் போல் மாறிமாறி இயங்குவதே உயிர்களின் அல்லது மனிதரின் தொடர்ச்சியான செயல்பாடுகள்.
தன்மையத்தை சுற்றிக் கொண்டு மற்றொரு மையத்தை சுற்றி வருவது அண்டத்தின் சுழற்சியாம் இது உயிர்களின் சுழற்சியைப் போலுள்ளது.
அவ்வாறான உயிரியின் சுழற்சியே உயிர்களின் புரிதலாகும்.
மேலும் புரிதல் என்பது அனுபவம் ஆகும்.
_பாடலாசிரியர் மணிகண்டன் நயினார் அவர்கள்🌾_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக