திங்கள், 4 டிசம்பர், 2023

கருத்திணன் பாடல்

🌾🌴🌳🌾🌴🌳🌾🌴🌳🌾🌴🌳🌾

        கருத்திணன் போற்றி
         """"""""""""""""""""'''''''"""""""""''''''''''''"
     1.
     அருளென மொழிந்தே
          அறமா னளித்த
     திருமொழி யாம்திருக்
          குறளெனுங் கருத்தை
     பொருளுறப் பதித்தே
          உலகினுக் களித்த
     பொருகள வல்லவர்
          கருத்திணன் போற்றியே!

     2.
     கடற்கரை மீன்வால்
          மாட்டின் தலையுடன்
     உடலெனப் பொருந்திய
          மகர ராசியாம்
     ஆழி வாரென
          ஆயரு மானவன்
     வாழி மன்னவன்
          மாயோன் போற்றியே!

     3.
     விளைநிலம் பெருக்க
          குறவரின் எதிர்ப்பை
     களைந்தவர் பாண்டியர்
         ஐவரின் துணையென
     இடைநிலப் பரப்பை
         ஆண்டவ னான
     இடையனு மானவன்
         கருத்திணன் போற்றியே!

     4.
     வாரெனும் மேல்மலைத்
         தொடரில் வஞ்சகன்
     பாரதப் பெரும்பகை
         சகுனியை வென்று   
     கேரள கொல்லம்
         பகுதியில் ஆண்ட
     பாரத நாயகன்
         கருத்திணன் போற்றியே!

     5.
     ஆரியர் வருகையை
         தடுப்பது வேண்டி
     ஆரியங் காவில்
         அறனென அமர்ந்தாய்!
     அபயமு மகற்றி
         உபயமு மளித்தே
     சபரியி லமர்ந்தாய்
         ஐயப்பன் போற்றியே!

     6.
     அறுமூ வாண்டெனும்
         படிநிலைப் படியே
     குருகுல கல்வியை
         வரையரை செய்தே
     கலைகளும் ஞானவிஞ்
         ஞானமும் வழங்கி
     மலைதனில் அமர்ந்த
         ஐயப்பன் போற்றியே!

     7.
     கருத்திணன் ஆயனும்
         அப்பன் முருகனும்
     இருவரும் இணைந்தே
         திருவல் லவராம்
     திருவல் லவரும்
         பாண்டியர் ஐவரும்
     பொருத்திய எழுவராம்
         ஐயப்பன் போற்றியே!

     8.
     ஆயர் கலையாம்
         மாயோன் வகுத்த
     ஆயக் கலைகள்
         அறுபத்து நான்கில்
     மாயச் செய்கையில்
         மணிமுடி சூடிய
     மாயக் கண்ணன்
         கருத்திணன் போற்றியே!

     9.
     சதுரங்கள் ஏழேழ்
         சதுர வடிவிலும்
     சதுரங்க ஆட்டம்
         இருவ ரிடையென
     வல்லப் பலகையில்
         வழிவகை செய்த
     வல்லப நாதன்
         கருத்திணன் போற்றியே!

     10.   
     அரசனும் அமைச்சரும்
         ஒற்றனும் யானையும்
     வீரனும் சேர்ந்தே
         போரிடும் பயிற்சியாம்
     வல்லப்  பலகையில்
         வழிமுறை செய்த
     வல்லவ ராசன்
         கருத்திணன் போற்றியே!    

     11.
     பொதிகை குருகுல
         பள்ளியில்  பயின்றே
     சபரியில் குருகுல
         குருவென அமர்ந்தாய்!
     விரிந்த வனமெனும்
         பிருந்தா வனத்தின்
     ஆட்சி புரத்தில்
         கருப்பண்ணன் போற்றியே!

     12.
     மாறிலி ஒளியின்
         வேகத்தில் அணுவின்
     ஆற்றலும் நிறையும்
         முடிவிலி நிலையாம்
     ஆற்றலே அணுக்களாய்
         நிறையெனத் திணிவதை
     சாற்றிய அறிஞன்
         கருத்திணன் போற்றியே!

     13.
     ஒளிமின் விளைவெனும்
          தத்துவம் மொழிந்தும்   
     ஒளியுணர் திறனுடன்
         ஒளித்துக  ளுறிஞ்சியும்
     ஒளியில் நேர்மின்
         னாற்றலும் கண்டு
     தெளிந்த குருவென
         ஐயப்பன் போற்றியே!

     14.
     சூரிய தகடுகள்
         பொருத்திய கூரையில்
     சூரிய ஆற்றலை
         மாற்றிடும் கலனுடன்   
     சூரிய ஆற்றல்
         எந்திரம் பொருத்தி
     காரினை ஓட்டிய
         கருத்திணன் போற்றியே!

     15.
     இருமுனை யம்எனும்
         ஒளியுமிழ்க் கருவியும்
     ஒருவழி கடத்தியைக்
         கண்டவன்  நீயே!
     ஆளிலா விமானம்
         அர்ச்சுனன் படைக்க
     ஆய்வக மமைத்த
         கருத்திணன் போற்றியே!

     16.
     ஊடும் ஒளியென
         சீரொளி கண்டாய்!
     பாடும் வட்டத்
         தகட்டினைக்  கண்டாய்!
     அணுவின் ஆற்றலை
         அறியச் செய்தாய்
     அர்ச்சுனன் காத்த
         ஐயனார் போற்றியே!

     17.
     முருகனும் நீயும்
         ஆயர்கள் தானே!
     முருகனின் மகனைப்
         போன்றவன் நீயே!
     அருச்சுன பாண்டியன்
         நண்பனும் நீயே!
     தருமத்தைக் காத்த
         கருத்திணன் போற்றியே!

     18.     
     சுபத்தரை நல்கிய
         நண்பனும் நீயே!
     திரௌபதி காத்த
         தேவனும் நீயே!
     மணியை அணிந்த
         மணிகண்டன் நீயே!
     பணிவுடன் சபரியின்
        நாதனைப் போற்றியே!

     19.
     இருமுடி சுமந்து
          சபரிக்கு வந்தோம்
     குருகுல நாதனின்
         திருவடி போற்றி!
     நல்லறம் தந்த
         வல்லவர் போற்றி!
     புல்லாங் குழலிசை
         நாதனைப் போற்றியே!

     20.
     அறம்பொரு ளின்பம்
         வீடு பேற்றையும்
     திறம்படச் செய்து
         உலகினுக் களித்தே
     முத்தி யடைந்த
         முகுந்தனும் நீயே!         
     குந்த நாதனைப்
         போற்றிப் போற்றியே!!

⛰️🦚🐄🐐⛰️🦚🐄🦙⛰️🦚🐄🐐⛰️

15. அறிவியலும்               
                 உயிரியலும் 
                """"""""""""""""""""''"""""
     207.
     அறிவியல் நோக்கில்
          உயிரியல் இல்லை
     உயிரியல் நோக்கில்
          அறிவியல் உண்டே

     208.
     சரியும் தவறும்
          அறிவியல் அல்ல
     நன்மையும் தீமையும்
          உயிரியல் தானே

     209.
     நிகழ்வன வற்றில்
          தவறென இல்லை
     சரியும் தவறும்
          உயிரியல் நோக்கே

     210.
     நிகழ்வன யாவும்
          அறிவியல் என்னில்
     நிகழ்வன யாவும்
          இயற்கை தானே

     211.
     நிகழ்வன யாவும்
          இயற்கை என்னில்
     விருப்பமும் இல்லை
          வெறுப்பும் இல்லையே

     212.
     இயற்கையின் நிகழ்வில்
          அறிவியல் நோக்கில்
     தவறும் இல்லை
          சரியும் இல்லையே

     213.
     விருப்பும் வெறுப்பும்
          சரியும் தவறும்
     நன்மையும் தீமையும்
          உயிரியல் நோக்கே

இப் பேரண்டத்தை அல்லது புறமாகிய உலகை அறிவியல் ஒரு பொருளாக மட்டுமே பார்க்கிறது.
எல்லாம் அணுக்களின் கூட்டமைவுதான் அதற் கப்பால் உயிர் என்ற தனித்த இருப்பு என்றெல்லாம் ஒன்றுமில்லை.
அதாவது அறிவியல் நோக்கில் உயிரியல் இல்லை என்ற பொருள் முதல் வாத பார்வையும்.

உயிர்களின் அல்லது உயிரிகளின் தோற்றம், வளர்ச்சி, செயல் மற்றும் மறைவு போன்ற நிகழ்வு போன்றவை அறிவியல் என்பதோடு அறிவியல் மறுக்கும் உயிர், உணர்ச்சிகள், எண்ணம், நினைவு போன்றவை பொருட்களிள்  இயக்கங்களாகிய அறிவியலோடு பிணைந்தவை அதாவது உயிரியலில் அறிவியல் உண்டு என்பது உயிரியல் பார்வையுமாகும்.

எல்லாம் பொருளே எனும் இயற்கையின் நிகழ்வில் சரி தவறு அதாவது இது சரியான நிகழ்வு அல்லது தவறான நிகழ்வு என்பதெல்லாம் இல்லை.
ஆனால் உயிரிகளிடத்தில், உயிர்களின் நோக்கத்தில் இவை உண்டு.

பொருட்களின் இயக்கத்தில் தவறென்று இல்லாதபோது சரி என்பதும் இல்லையென்பதாகும்.
சரி தவறு என்பதெல்லாம் உயிரியல் பார்வையே.

நன்மை தீமை, விருப்பு வெறுப்பு போன்ற உணர்ச்சிகள் இயற்கை இயக்க நிகழ்வுகளான அறிவியலின் பார்வையில் இல்லை.
இவை உயிரியல் பார்வையில் உண்டு.

_பாடலாசிரியர் மணிகண்டன் நயினார் அவர்கள்🔯_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக