சனி, 2 ஆகஸ்ட், 2025

உணவு பற்றிய அடிப்படை புரிதல்

உணவு பற்றிய அடிப்படை விதிகள் :

 நிலம் :
1. நன்றாக பசித்த பிறகு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. தண்ணீர் குடித்த உடனே உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது தண்ணீர் குடித்த பிறகு குறைந்தபட்சம் 10 நிமிடமாவது ஆக வேண்டும்.
3. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. சாப்பிட்ட பிறகு குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு பிறகு தான் தண்ணீர் பருக வேண்டும்.
4. சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும் வரை அமர்ந்து தான் இருக்க வேண்டும் உடனே செயல்படக்கூடாது.
5. சாப்பிடும் போது கவனம் சாப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். வாயை மூடி சாப்பிட வேண்டும்.
6. நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
7. சாப்பிடும் போது தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். வெறும் தரையில் சாப்பிடக்கூடாது தரை விரிப்பு ஏதாவது இருக்க வேண்டும்.
8. இனிப்பு, துவர்ப்பு சுவை அளவாக  சேர்க்க  வேண்டும்.

 நீர் :

1. தண்ணீர் சாப்பிடும் போது எப்பொழுதும் கீழே அமர்ந்துதான் சாப்பிட வேண்டும் நின்று கொண்டு தண்ணீர் பருகக் கூடாது.
2. தண்ணீர் பருகும் போது அண்ணாந்து முழுவதுமாக தண்ணீரை வாயில் கொட்டக்கூடாது. டீ குடிப்பது போன்று சப்பி சப்பி தான் சாப்பிட வேண்டும். அல்லது ஒவ்வொரு விழுங்காக வாயில் ஊற்றி சுவைத்து பிறகு பருக வேண்டும்.
3. ஏதாவது சாப்பிட்ட உடனே தண்ணீர் பருக கூடாது.சிறிது இடைவெளி விட்டே தண்ணீர் பருக வேண்டும்.
4. எப்பொழுதுமே வயிறு முட்ட தண்ணீர் குடிக்க கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக்கொள்ளலாம்.
5. பேக்கிங் செய்யப்பட்ட தண்ணீரை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
6. குளிர்பானங்களையும் குளிர்சாதன பெட்டிகளில் வைத்த தண்ணீரையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
7.RO தண்ணீரையும் தவிர்க்க வேண்டும்.
8. வாய்ப்பு உள்ளவர்கள் மழை நீரை பிடித்து வடிகட்டி குடித்து வரலாம்.
9. தேவையில்லாமல் இயற்கை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.
 10.அவரவர்கள் வாழும் இடத்தில் கிடைக்கக்கூடிய தண்ணீர் சிறந்த தண்ணீர் ஆக இருக்கும்.
11. உப்பு சுவையை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 நெருப்பு :

1. ஒவ்வொருவருக்கும் மிதமான உடல் உழைப்பு அவசியம். உடல் இயங்கினால் மட்டுமே அந்த உடலுக்கான வெப்ப சக்தி கிடைக்கும்.
2. அது உடற்பயிற்சியாகவும் யோகா மாதிரியான பயிற்சியாகவும் இருக்கலாம்.
3. விளையாடும்போது உடலுக்கான வெப்பசக்தி கிடைக்கும்.
4. தோட்ட வேலை செய்வது விவசாயம் சம்பந்தமான வேலை செய்வது ஆடு மாடுகள் மேய்ப்பது இவைகளின் போது உடல் இயங்கும். அப்போது அந்த உடலுக்கான வெப்ப சக்தி கிடைக்கும்.
5. வாய்ப்பு கிடைக்கும் போது தோட்டத்தில் மண்வெட்டி, கடப்பாறை கொண்டு ஏதாவது வேலைகள் செய்யலாம்.
6. ஆடு மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்யலாம்.
7. கசப்பு சுவையை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 காற்று :

1. இரவில் தூங்கும் அறை எப்பொழுதும் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
2. ஒவ்வொருவரும் கண்டிப்பாக எளிமையான சுவாசப் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
3. முழுவதுமாக அடைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
4. தூசிகள் குப்பைகள் நிறைந்த பகுதிகளுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
5. நெகிழி குப்பைகளை நெருப்பில் இட்டு எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
6. பெருங்குடலை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
7. புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
8. இஞ்சி, சுக்கு, மிளகு, ஏலக்காய் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.( உணவில்)

 ஆகாயம் :

1. இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை அனைவரும் கண்டிப்பாக தூங்கியே ஆக வேண்டும்.
2. சக மனிதர்கள் மீது அன்பையும் கரிசனத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
3. சாப்பிட்ட உடனே படுக்கைக்கு செல்லக்கூடாது.
4. பால், வெள்ளை சர்க்கரை தவிர்க்க வேண்டும்.
5. மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
6. புளிப்பு சுவை சேர்க்க வேண்டும். புளிப்பு சுவைக்காக கொடம்புளி, எலுமிச்சை பழம் சேர்க்கலாம்.
7. உடலுக்கு ஓய்வு அவசியம்.
 இந்த ஐம்பூத சக்திகளின் செயல்பாடுகளை புரிந்து பின்பற்றி வந்தால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
 இறுதியாக மனதை சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் வைத்துக் கொள்வது மிக அவசியமாகும்.
 எந்த ஒரு ஆடம்பரத்திற்கும் ஆசைப்படலாம் ஏக்கப்படக்கூடாது. தன்னிடம் இருப்பது சிறப்பு என்ற மனோநிலை தான் மகிழ்ச்சியான நல்வாழ்வை கொடுக்கும்.

 மகிழ்ந்திருப்போம் வாழ்த்துகள்... 💛💛💛💛
@selvaraju
9715092335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக