இன்றைய நடைமுறை வாழ்வில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை உணவு குடிநீர் மாதிரி இந்த குடிப்பழக்கம் ஆகிவிட்டது. காலை முதல் இரவு வரை எந்த நேரமும் குடிப்பழக்கத்தை தொடர்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். குடிப்பதனால் உடலில் என்ன நடக்கிறது? மனித உடலுக்குள் போதை பொருட்கள் சென்றவுடன் அவன் நிகழ்காலத்தை மறக்கிறான். அதாவது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது மேல் மனதின் செயல்பாடுகளில்தான். அந்த மேல் மனதில் தான் எண்ணம் சிந்தனை இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த மேல் மனதின் பிடியிலிருந்து போதை பொருட்கள் எடுத்துக் கொள்பவன் விடுபடுகிறான். இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மேல் மனமானது போதை பழக்கத்தின் போது நிறுத்தி வைக்கப்படுவதனால் அவன் ஆனந்தத்தில் மிதக்கிறான்.. அறிவியல் பூர்வமாக சொல்வது என்றால் போதை போடும்போது அவனது மூளையில் சுரந்து கொண்டிருக்கும் ரசாயனங்களில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த ரசாயனத்தில் ஏற்படும் மாற்றம் மேல் மனதின் பிடியிலிருந்து விடுவிக்கிறது. அந்த மேல் மனதில் இருந்து விடுபடும் போது அதில் ஒரு சுகம் கிடைக்கிறது அது ஒரு ஆத்மார்த்தமான சுகமாகவே இருக்கும். இதுபோல எண்ணங்களற்ற நிலையை சித்தர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். எப்படி? என்றால் தியானப் பயிற்சி செய்வதனால் மேல் மனதின் பிடியில் இருந்து விடுவிக்கலாம். பலவகையான தியான பயிற்சிகள் உள்ளது. அவற்றில் ஏதாவது ஒரு தியானப் பயிற்சியை மேற்கொண்டு வந்தால் மனமற்ற நிலையை பெறலாம். மணமற்ற நிலையை அடையும்போது அது ஒரு பேரானந்தமான நிலையாக இருக்கும். குடிப்பழக்கத்தில் இருப்பவர்கள் இந்த மனமற்ற நிலையை விரும்புவதால் அடிக்கடி அந்த பழக்கத்தை தேடுகிறார்கள். அதுவே தியான பயிற்சி தொடர்ந்து செய்யும்போது அந்த பேரானந்த பரவச நிலை உச்சத்தை அடைகிறது. இறை நிலையை அடைவதற்கும் பயன்படுகிறது.
@selvaraju
7/08/2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக