@Selvaraju
சனி, 2 ஆகஸ்ட், 2025
தலையில் உள்ள பொடுகுக்கு காரணம்
உடலியக்கத்தில் விஷமேறியதன் மூலம் அது மண்டையோட்டில் விளைவுகள் ஏற்படுத்துவதால் தலைப்பொடுகு உருவாகிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. வெளியேற்ற முடியாத அளவிற்கு கழிவுகள் உடலில் தேங்கியிருப்பதால் மூளைப்பகுதி பாதிப்பிற்குள்ளாகும்.உடலில் விஷத்தன்மை உற்பத்தியாவதைத் தடுத்து நிறுத்தி அவற்றை இயற்கையான வழியில் அகற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மருந்தாகப் பயன்படுத்தப்படும் பொடுகு நிவாரணியில் பொடுகு டானிக்கு களில் கிளிசரின் மற்றும் விஷமிக்க ஆன்டி பயாடிக்கள், செயலூக்கிகளும் அடங்கியுள்ளன. இவற்றை மண்டையோடும், மூளையும் உறிஞ்சு வதால் தலைவலியும், நினைவிழப்பும் நரம்புத் தளர்ச்சியும், செவிட்டுணர்வும் கண்பார்வை மங்கலும் ஏற்படுகிறது. தலையில் ஒட்டுண்ணியைப் போன்ற தலைப்பேன்கள் இருப்பதுபோல உடல் முழுக்க ஒட்டுண்ணிகள் பரவுகின்றன. இவை உடலில் இருந்துதமக்கான உணவை எடுத்துக் கொள்ளும்போது பேன்களும் தலையில் ஊறத்தொடங்குகின்றன. மைக்ரோஜைமியன் கோட்பாட்டினைப் போலவே இதன் போக்கினை புரிந்து கொள்ளலாம். இவ்வரு வருப்பான பூச்சியினம் பொடுகுத் தொற்றுள்ள அனைவரிடமும் இருப்பதில்லை. யாருக்கு உள்ளும் புறமும் நிறைய கழிவுகள் சேர்ந்திருக்கிறதோ அவர்களிடம் தான் பேன் அதிகமாகப் பரவுகிறது. நோயாளிகள் பலரிடத்தில் பேன் அகற்றுதலை ஒரு நோய் நிவாரண வடிவமாக நாம் பார்த்திருக்கிறோம். அதுபோன்ற நிவாரண வேலைகள் செய்யும்போது நோயாளியைத் தூய்மையான சூழலில் வைத்திருந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வடிவிலான நீர்ச்சிகிச்சை அளித்தால் நிவாரணம் கிடைத்து விடும். பலர் வேறு சிகிச்சை பெறும்போது தான் தம்மிடத்தில் ஒட்டுண்ணிகள் தொற்றியதாக நினைவு கூர்ந்துள்ளனர். பேன் அகற்றுவதற்கு நாம் பரிந்துரைக்கும் சிகிச்சை குளிர்ந்த நீர் குளியல்,இனிமா கொடுப்பது,இயற்கை உணவு மற்றும் சீப்பு பயன்படுத்துவது மட்டுமே போதுமானது. ஆண்டிசெப்டிக் சோப்பு கூட தவிர்க்கப்பட வேண்டியவை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக