☀கணவன் மனைவி உறவுக்கு
இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள். விட்டுக் கொடுப்பதால் சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆக வேண்டும் என்றாலும், முடிவில் நன்மை நடக்கும் என்பதை உணருங்கள்
☀கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், சேமிப்பதும் கருத்து வேறுபாடுக்கு இடம் தரும்.
☀நானே பெரியவன் என்ற அகந்தையை விடுங்கள் அர்ததமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள்.
☀குடும்பத்தை நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத் தான் இருக்க வேண்டும். எந்நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.
☀நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விடடொழியுங்கள்
☀உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
☀மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள், அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய்
ஆசைப்படாதீர்கள்.
☀எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
☀கேள்விப்படும் எல்லா விஷயத்தையும் நம்பாதீர்கள்.அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்
☀உங்கள் கருத்தில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். மற்றவர் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.
☀மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். புன்முறுவல் காட்டவும், அன்புச் சொற்களைப் பேசவும் கற்றுக் கொள்ளுங்கள்.
-வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக